Wednesday, June 22, 2005

நிலாச்சாரல் - ஒரு வாசகரின் பார்வையில்

from moonlander:
சில இதழ்கள் பார்த்து விட்டுத் தூக்கிப் போட வேண்டியவை; இன்னும் சில இதழ்கள் படித்து விட்டு தூரப் போட வேண்டியவை; ஆனால் படித்து பத்திரப்படுத்த வேண்டிய இதழ்கள் என்ற ரகத்தில் ஏதேனும் உண்டா என்று அக்கறையோடு அலசிப் பார்த்தால் சில நினைவுக்கு வரும்; சில நிகழ்காலத்திலும் நிமிர்ந்து நிற்கும். நிலாச்சாரல் நிகழ்காலப் பத்திரம்; பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய ஒன்று! இணைய தளத்தில் வளைய வரும் இதை கணிணியில் கட்டிப் போட்டு விடலாம், சுலபமாக!

அத்வானிஜியையும் மன்மோகன் சிங்ஜியையும் வம்புக்கிழுக்கும் டி.எஸ்.பத்மனாபன் வம்புச் சுவை ஒரு பக்கம்; கலெக்டர் அன்னியன் வெல்வானா என்று ஆரம்பித்து கலக்கல் செய்திகளின் அடியே குறளை இணைத்து அதன் வழியே சிந்தனையைத் தூண்டி விடும் பாங்கு இன்னொரு பக்கம்! இசையை விட்டு சிறுவனைப் பிடிக்க அந்தச் செய்தி சனியாக மைக்கேல் ஜாக்ஸனைப் பிடித்து ஆட்ட, சட்டம் குற்றமில்லை
என்று சொல்ல மீண்டு வந்த அவரைப் படம் பிடித்துக் காட்டும் கட்டுரையைத் தருகிறார் எஸ்.வி.என். பேசாமல் இசையோடு
ஐக்கியமாக வேண்டியது தானே என்ற எஸ்.வி.என்னின் பார்வை அனைவருக்கும் பிடிக்கும்!

அடுத்து சட்ட பாயிண்டுகளை (இலவசமாகத் தான்!) அள்ளி வீசும் லாயர் பெண்மணி கார்த்திகாவின் ஆலோசனைப் பக்கம்
தூள் கிளப்புகிறது.

நன்னன் என்ற கொடுங்கோலன் சிறுமிக்கு தண்டனை கொடுத்த செய்தியில் ஆரம்பித்து பத்து அற்புதமான தமிழ்ச் செய்திகளை ஆராய்ச்சிக் கட்டுரையாக வழங்கியுள்ளார் ச.சுவாமிநாதன். ஆச்சர்யமூட்டும் செய்திகள் அனைத்துமே!

சட்டமும் தண்டனையும் தூக்கலாக இருக்கிறதே என்று ஆதங்கப்படாமல் இருக்க உடனடி ·பாஸ்ட் புட் ரேஞ்சு நகைச்சுவையாகத் தன் முதல் நாள் கல்லூரி அனுபவத்தை பேராசிரியர் டாக்டர் விஜய் ராகவன் அள்ளித் தெளிக்க ஒரு மணி நேரம் முன்னால் போனதால் ஏற்பட்ட காலேஜ் கலாட்டா நம்மைக் கவர்கிறது!

சத்தி சக்திதாசன் 'இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு' என்று முழங்கிய காவியக் கவிஞரின் தாலாட்டுப் பாடல்களைப் படம் பிடிக்கிறார். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று; குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று என்று மறக்க முடியாத தங்க வரிகளை இனம் காட்டுகிறார்.
எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களை ராகத்தோடு சுட்டிக் காட்டுகிறார் பிரேமா சுரேந்திரநாத் தனது எம்.கே.டி வரலாறில்! சிவகவியின் வதனமே சந்திரபிம்பமோ மறக்க முடியாத பாடல்! - பல விதத்திலும்!! முகமது சந்திர பிம்பமோ என்று முதலில் இருந்த அந்தப் பாடலை 'முகமது' பாடலுக்குள் வருவதை ஆட்சேபித்த நண்பர்களிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தனர் படக் கலைஞர்கள். முகம் + அது = முகமது என்று பார்க்க வேண்டும் என்ற வாதமெல்லாம் தவிடு பொடியாக பாட்டையே வதனமே சந்திர பிம்பமோ என்று மாற்றிய வரலாறு மறக்க முடியாததல்லவா!

தரமான பொழுதுபோக்குக்கு நன்றி, நிலாச்சாரல்

Saturday, June 04, 2005

கண்ணதாசன் எனும் காவியம்

சக்திதாசன் கண்ணதாசனின் உயிர்ப்பாட்டை இந்த
வாரம் பிடித்து விட்டார். மறக்கக்கூடிய பாட்டா
சூர்யகாந்தி பாட்டு! பரம்சிவன் கழுத்தில் உள்ள
பாம்பு பார்த்து கேட்கலாமா- கருடா சௌக்கியமா
என்று! இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம்
சௌக்கியம் தான்! கவிஞர் சரியாகத்தான் செப்பும்
மொழி பதினெட்டில் ஒரு முறை எழுதினார்:-
"எல்லோரும் குடித்து விட்டு எழுதுகிறார்கள்! நான்
எழுதி விட்டுக் குடிக்கிறேன்" என்று! அந்த கவிதைநடை, சுகம் யாருக்கு வரும்!

http://www.nilacharal.com/tamil/specials/tamil_song_210.html

Monday, May 30, 2005

மாநாடு பார்க்கலையோ மாநாடு?

மாநாடு பார்க்கலையோ மாநாடு?
திருமலையின் காரசாரமான மகாநாடுகளின் கட்டுரைநதி மூலம் ரிஷி மூலத்தைப் பார்க்காதே என்றஅறிவுரையையும் மீறி மாநாடுகளின் மூலத்தைப் பார்த்துவிட்டது. பார்த்ததின் பயன் - திடுக்கிடும் உண்மை தான்!தொண்டர்களின் சோகம் சொல்லவும் கொடிதே!
http://www.nilacharal.com/tamil/politics/tamil_politics_210.html

தரித்திரம் போக்க ஒரு சாத்திரமா!
அட, பெங்சுயிக்கு இவ்வளவு மகிமையா! காம்பஸை வைத்து வடகிழக்கு
மூலையைக் கண்டு செலவில்லாத நீர் பாத்திர முறையைக்
கையாள வேண்டியது தான், இனி! ச.நாகராஜன் தன்
பணியைத் தொடரட்டும். இன்னும் வேண்டும் பெங்சுயி
கடல் துளிகள்!!
http://www.nilacharal.com/tamil/specials/fengshui_210.html

கலக்கல் கலெக்ஷன்
கலக்கல் கலெக்ஷன் செம கலக்கலாக இருக்கிறது! அரசியலில்
யாத்திரை கிளம்பி டி.வி சார்ம் சேர்த்து மவுண்ட் ரோடு மஹா
விஷ்ணுவிற்கு ஏற்பட்ட போட்டியைப் பார்க்க வைத்து,
திருச்செந்தூர் முருக தா¢சனத்தால் புண்யம் சேர்த்து,
ஸ்டாக் மார்க்கெட் டிப்ஸ¤டன் எஸ்.எம்.எஸ் குறும்பு கலக்க
- உண்மையில் கலக்கல் கலெக்ஷன் சூப்பர் கலெக்ஷன் தான்!
யார் அந்த கலெக்டர் - பார்க்க வேண்டுமே!

http://www.nilacharal.com/tamil/current/tamil_news_210.html

Monday, May 23, 2005

ரஜினியைத் தாக்கினாரா பாக்கியராஜ்?

தமிழ்த்திரை சேனல் துவக்க விழாவில் யதார்த்தமாக பாக்கியராஜ் ரஜினியை
எடுத்துக்காட்டா சொல்ல உடனே அதுல ஒரு சர்ச்சை கிளம்பிடுச்சுங்க. பாகியராஜ் அதுக்கு விளாக்கம் சொல்லிருக்கார். ரஜினி,சிம்பு, stock market - னு இது ஒரு கலக்கல் collection:
http://www.nilacharal.com/tamil/current/tamil_news_209_1.html

டாலரின் மதிப்புக்குக் காரணம் பிரமிட் படமா?

பிரமிடுகளைப் பார்த்து பிரமிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. இந்தப்
பிரமிடுகளுக்குள்ள எவ்வளவு சக்தி மறைஞ்சிருக்குன்னு எவ்வளவோ ஆராய்சிகள் நடந்திருக்கு. இன்னும் நடந்துகிட்டே இருக்கு. பிரமிடாலஜின்னு ஒரு தனி துறையே உருவாகி இருக்குன்னா அதில எவ்வளவு ஆராய்ச்சிகள் நடக்கும்!!! பிரமிடுகளின் சக்தி பற்றிய இந்தக் கட்டுரையில் அமெரிக்க டாலர்
நோட்டில் பிரமிட் படம் இருப்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கு:
http://www.nilacharal.com/tamil/specials/pyramid_207.html

கற்பா கத்தரிக்காயா?

கற்பு பற்றி எவ்வளவுதான் பேசினாலும் மேட்டர் இருந்துகிட்டேதான் இருக்கு. உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி இருக்கும் நிலையில் நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு அடிப்படையாகக் கருதப் படும் கற்பு என்கிற கான்செப்ட் எந்த நிலையில் இருக்குன்னு தெரிஞ்சுக்க இந்தக் கட்டுரையைப் பாருங்க:

http://www.nilacharal.com/tamil/specials/karpu_190.html

Thursday, May 19, 2005

பானுமதி ஒரு அற்புதமான கலைஞர்

நடிகை பானுமதி ஒரு அற்புதமான கலைஞர். நடிப்பு மட்டுமல்லாமல் இசை, இயக்கம், தயாரிப்பு என்று சகலத்திலும் சிறந்து விளங்குகிறவர். தமிழ்ப் பெண்களுக்கு நல்ல இன்ஸ்பிரேஷன். அவரைப்பற்றிய ஒரு விவரமான கட்டுரை:
http://www.nilacharal.com/tamil/thirai/tamil_bhanumathy_208.html

Wednesday, May 18, 2005

நம்ம ஊர்ல இது சாத்தியமா?

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் டோனி பிளேயரை நார் நாராய்க் கிழித்துத் தொங்கவிட்டார்கள் பொது மக்களும் எதிர்க்கட்சியினரும். ஆனாலும் கண்ணியம் மாறாமல் பதிலளித்து வெற்றியும் பெற்றுவிட்டார் அவர். தேரிதலில் தோல்வியுற்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி விலகி விட்டார். இதெல்லாம் நம்ம ஊர்ல எப்ப நடக்கும்னு ஏங்க வைக்கும் கட்டுரை:
http://www.nilacharal.com/news/specials/eng_UKelection_208.html

காதலைக் காவல் நிலையத்தில் பதிவு செய்யுங்கள்

பெண்கள் காதலரால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க காதலன் பெயரை காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று - இப்படிச் சொன்னது ஒரு ஐ.ஜின்னா நம்ப முடியுதா? நல்ல காமெடியா இருக்கா? சில பேருக்கு இது நியாயமாவும் படுது.

http://www.nilacharal.com/tamil/specials/tamil_love_208.html