Monday, April 30, 2007

சாரல் 310

சாரல் : 310 பொழிந்தது : ஏப்ரல் 30, 2007

காவிய நாயகன் நேதாஜி (48)

காங்கிரஸில் போலி உறுப்பினர்கள், பதவி சுகம் காண விழைபவர்கள் சேர்ந்து விட்டது குறித்து காந்திஜி அங்கலாய்த்தார். அவர் மேலும் சொன்னது: "நீங்கள் என்னை உங்கள் தளபதியாக எண்ணுகிறீர்கள். அதற்கு எனக்கு இருக்கும் தகுதி உங்கள் அன்பும் பாசமுமே. ஆனால் உங்கள் அன்பு செயல் வடிவம் பெற்றுள்ளதா?

( டி.எஸ்.வேங்கட ரமணி )

மனசே சுகமா? (11)

சுய உதவிப் பயிற்சிகள் எதுவுமே பயனளிக்காமல் போகையில் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள யாரையேனும் நாடுதல் நலம். அப்படி நாடுபவர்கள் உங்களின் மனநிலையை உயர்த்துபவராக இருக்க வேண்டுமே ஒழிய இன்னும் தாழ்த்துபவராக அமைந்துவிடுதல் கூடாது. எப்படிப்பட்டவர்களை அணுகலாம்?

( நிலா )

ரெஸில் மேனியா! ரெஸில் மேனியா! ரெஸில் மேனியா!

ஷுய் ஜினோ என்று சீன மல்யுத்தக்கலை 4000 ஆண்டுகளுக்கு முன்பே கொடி கட்டிப் பறந்திருக்கிறது. ஆனால் இன்று எல்லா நாடுகளிலும் வீட்டிலேயே தொலைக்காட்சி மூலம் இந்த மல்யுத்தத்தை அனைவரும் கண்டு களிக்க வாய்ப்பை அளித்துள்ளது டபிள்யூ.டபிள்யூ. ஈ. எனப்படும் வோர்ல்ட் ரெஸிலிங் என்டெர்டெயின்மெண்ட்!

( ச.நாகராஜன் )

பதிவுகள்

"காப்பாத்துங்க.. என்னைக் காப்பாத்துங்க.. யாராவது என்னைக் காப்பாத்துங்க." மொட்டைக் கிணற்றின் மேல் பாகத்தில் முளைத்திருந்த, ஏதோ ஒரு மரத்தின் வேரைப் பிடித்தபடி, சிறுமி விஜயா கத்துகிறாள். அதோ... அதோ... கோதண்டம். இவளின் முறைப்பையன்.. அத்தை பையன்.. தலைதெறிக்க இவளை விட்டுவிலகி, ஓட்ட ஓட்டமாக ஓடுகிறான்.

( விமலா ரமணி )

உலகப்புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் - ரப்பர் (Rubber)

ரப்பர் இயற்கையாக மரங்களிலிருந்தே பெறப்பட்டது; பின்னர் அதன் தேவை மிகுதியானதன் காரணமாக ரப்பர் உற்பத்தியில் முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; புதிய வகைச் செடிகொடிகளை வளர்ப்பதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கப் பழங்குடி மக்கள் 11ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே ரப்பர் பற்றி அறிந்திருந்தனர்.

( டாக்டர்.இரா.விஜயராகவன் )

அதீதாவுக்கு... (மடல் - 22)

பூமிக்கு கடவுள் வந்தால் அவரும் மனிதரோடு மனிதராய் ஒரு வாய் சோற்றுக்கும் லாட்டரிதான் அடித்துக்கொண்டுதான் திரிவார்! அல்லது மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட இந்த அதிசெயற்கையான உலகைக் கண்ணுற்று பைத்தியமாகிவிடுவார், பாவம்! மனிதனின் அரசியல் ஆட்டங்களும் திருட்டுத்தனங்களும் தில்லுமுல்லுகளும் கடவுளை நேரடியாகக் கீழ்ப்பாக்கத்துக்கே அனுப்பிவைத்துவிடும்!

( நட்சத்ரன் )

அரசியல் அலசல்

இதுவரை நமது எம்.பி.க்கள் லஞ்சம், கொலை போன்ற வழக்குகளில்தான் தொடர்பு கொண்டிருந்தார்கள். இப்போது கடத்தல் வேலையிலும் தங்கள் திறமையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. பாபுபாய் கடாரா என்ற பா.ஜ.க. எம்.பி. முதலில் தான் சிக்கி மற்ற பல எம்.பி.க்களையும் சிக்க வைத்துவிட்டார்.

( ஜ.ப.ர )

Richard Gere

The other aspects of Richard Gere apart from kissing Shilpa Shetty ...

( PS )

சர்தார் தி கிரேட்! (6)

சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார். மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.

( ரிஷிகுமார் )

ராகி கீர்

ஐந்து பேருக்கு கீரைத் தயாரிக்க இரண்டு கப் தண்ணீரில் பொடியைக் கரைத்துக் கொண்டு அடுப்பின் மீது வைத்து வேக விடவும். வெந்து கஞ்சி போன்றானதும் தேவையான பாலை ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிது நேரம் கொதித்த பின்னர் இறக்கி வைக்கவும்.

( பிரேமா சுரேந்திரநாத் )

His Name is Siva Shankar..(245)

In one birth cycle, one of the Seven Rishis, Gautama Rishi cursed his wife Akalya turning her into a stone. He himself specified a redemption, that Rama would come to earth, go to the forest on exile and in the course of his wanderings would step on the stone and thus grant her relief from her curse. Regardless of whether Rama wanted or not, he passed through that way and freed her from her curse, because he was ordained to do so.

( N C Sangeethaa )

கவிதைகள்

உனக்கே உனக்கான
நூலொன்றை உருவாக்கு:
உன்னால் மட்டுமே
உருவாக்கிட இயலும்
உனக்கான நூலை
அது வேறு நீ வேறு அல்ல என்றாகும்படி
...
...

( நட்சத்ரன் )

My dad - A mystery?

I was inspired to write this poem after reading a metaphor poem on the family. It was quite interesting that made my imagination run wild, placing the members of my family in different roles and characters. However, my imagination about my father's role seemed to blend with reality, like a glove in a hand.

( Arvind )

நீ நான் தாமிரபரணி (68)

மாதுரிக்குத் திருமணம் முடிந்த சில மாதங்களில் தன் தவறு புரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் அலங்கரித்துக் கொண்டு ஊர் சுற்ற அவள் ஆசைப்பட்டதற்கு ராஜராஜன் ஒத்துழைக்க மறுத்தான். வாழ்க்கை தெய்வம் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம் என்றும் வாழ்ந்ததற்கு அடையாளமாக பெரும் சாதனைகள் படைத்து சாக வேண்டும் என்றும் ஆசைப்பட்ட ராஜராஜன் அனுபவிக்கத் தெரியாதவன் என்பதை திருமணத்திற்குப் பின்பு தான் மாதுரி கண்டுபிடித்தாள்.

( என்.கணேசன் )

A Numbness

He said – Sit, be quiet, observe I sat down cross-legged The lizard on the wall, the kitchen aroma, The butterfly around, the crevices and mounds abound

( A. Thiagarajan )

அழகு ஓவியம்

ஸ்ரீலட்சுமியின் அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

செய்திகள் - அலசல்

உலகமே ஆவலோடு எதிர்பார்த்த ஐஸ், அபி திருமணம் ஏப்ரல் 20ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்தது. வரலாற்றின் ஏட்டில் பொறிக்கப்படவேண்டிய செய்தி. டெக்னிகலாகப் பார்த்தால் ஐஸூக்கு அபிஷேக் நாலாவது கணவர். இது என்ன புதுக்கதை என்கிறீர்களா?

( ஜ.ப.ர )

இராசிபலன்கள் (30-4-2007 முதல் 6-5-2007 வரை)

ரிஷபராசி அன்பர்களே! புதன் நன்மை தரும் கிரகமாகும். சகோதர சகோதரிகளுக்குள் பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சிகளை தள்ளிபோடவும். தாய்வழி மாமன் மூலம் சிற்சில நன்மைகள் ஏற்படும். கூட்டு முயற்சிகள் வெற்றியளிக்காது. உடம்பில் இரத்தம், இதயம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.

( ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி )

தகவல் தொடர்பு

வேறு ஒன்றும் இல்லை. நகராட்சிப் பூங்காதான் கதி என்று ஆகிவிட்ட விஆரெஸ் ஆத்மா நான். ஓய்வு பெற்ற நாளில் எனக்கு மலர்க் கிரீடம் என்ன.. மாலைகள் என்ன.. 5000 வாலா வெடிச் சத்தம் என்ன.. பாண்டு வாத்தியம் முழங்க என்னை வழி நடத்தி அழைத்துப் போனபோது ஒரு அரசியல் கட்சியே ஆரம்பித்து விடலாம் என்கிற நப்பாசை வந்தது. (வந்த கூட்டம் பிரியாணியைத் தின்றதும் கலைந்து போய் விட்டது)

( ரிஷபன் )

நானென்றும் நீயென்றும் (64)

"என்ன நடக்குது இங்கே? அவ முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு? ஏதாவது லொள்ளுன்னு விழுந்தியா அவகிட்டே? அவளை ஏதாவது சொல்லி அழ வைத்து இருந்தாய், கொன்னுடுவேன் கொன்னு ராஸ்கல்", தோழி பேசப் பேச சாவதானமாய் சமையலறை மேடையில் சாய்ந்து கொண்டு மௌனமாகக் குழந்தையின் பட்டு முடியைத் தடவிக் கொடுத்தான் அவினாஷ்.

( சுகந்தி )

Tuesday, April 24, 2007

சாரல் 309

சாரல் : 309 பொழிந்தது : ஏப்ரல் 23, 2007

பயம்

ரயில் திடீரென்று 'ஸ்லோமோஷனில்' ஓட, தட தடவென்று ஆட்கள் ஓடி வரும் சப்தம்... மெதுவாகப் போன ரயிலில் திடீரென்று சில முரடர்கள் ஏற... திடீரென்று வெடித்துவிட்ட கலவரம்... முஸ்லீம்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் இந்துக்களுக்கும், இந்துக்கள் அதிகமிருக்கும் பகுதியில் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட துன்பம்.

( விமலா ரமணி )

செய்தித் துளிகள்

இந்த ஆண்டு பாஸ்டன் மராத்தான் பந்தயத்தில் பங்குபெற சுனிதா வில்லியம்சும் அவரது சகோதரியும் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் சுனிதாவிற்குத் தா‎ன் விண்வெளியிலிருந்ததால் மராத்தானில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம். இதைப் போக்க விண்வெளி ஆய்வு நிலையத்தில் அவர் ட்ரெட்மில்லில் ஓடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு பந்தயம் நடந்த அதே நேரத்தில் சுனிதாவும் தனது பந்தயத்தை விண்வெளியில் துவக்கினார்.

( ஜ. ப .ர )

அற்புதமான, அதிசயமான, அமானுஷ்ய சக்திகள் படைத்த ஹீரோஸ்!

ஐஸக் மான்டேஜ்: நியூயார்க்கில் வாழும் ஒரு ஓவியர்.ஆழ்ந்த சமாதியிலிருந்து எதிர்கால சம்பவங்களைப் பார்த்து அதை அப்படியே ஓவியமாக வரையக் கூடியவர்! ஹிரோ நகாமுரா: ஜப்பானியரான இவர் டோக்கியோவில் வசிப்பவர்.காலத்தையும் வெளியையும் (Space and Time) தன் போக்கிற்கு மாற்றும் வல்லமை படைத்தவர்.இவர் காலத்தை அப்படியே நிறுத்தி விடுவார்!

( ச.நாகராஜன் )

சர்தார் தி கிரேட்! (5)

சாண்டாசிங் : இந்த பீர்ல நிறம் இல்லை.
பாண்டாசிங் : இந்த பீர்ல சுவை இல்லை
தாராசிங் : இந்த பீர்ல திடம் இல்லை
ஒயின்ஸ்ஷாப் காரர் : அட! மக்குகளா…இப்ப நான் குடுத்தது பீர்ல கலக்குறதுக்கான சோடா.

( ரிஷிகுமார் )

மனசே சுகமா? (10)

மேற்சொன்ன சூழலில் 'அமைதியாகக் காத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்பது உங்கள் பதிலாக இருக்கலாம். அது நிகழவேண்டுமானால் என்னென்ன தேவை என்று சிந்தியுங்கள். 'ஒரு புத்தகம் இருந்தால் படித்துக் கொண்டிருக்கலாம்', 'டி.வியில் நல்ல நிகழ்ச்சிகள் இருந்தால் பார்த்துக் கொண்டிருக்கலாம்'.

( நிலா )

ஒரு வக்ர மனமும் வர்ஜீனியா கொலைகளும்

இந்த மாணவனை அறிந்தவர்கள் அவன் ஒரு தனியன் என்றும், அதிகம் யாருடனும் கலந்து பேசாதவன் என்றும் கூறுகிறார்கள். அவன் ஆசிரியர்கள் அவன் எழுதும் கவிதைகளிலும் நாடகங்களிலும் ஒரு பயங்கர த்வனி இருந்ததாகச் சொல்கிறார்கள். அவனுடைய அறையிலிருந்து கிடைத்த சில குறிப்புகளிலிருந்து அவன் பணக்காரக் குழந்தைகளிடம் ஒரு வெறுப்பு இருந்ததாகவும் சக மாணவர்களின் நடத்தைகளின் நேர்மைக் குறைவு பற்றிய ஒரு கோபம் இருந்ததாகவும் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

( டி.எஸ்.ஜே. )

Profile of Chinmayi

All India First and Best Performer Award from Sangam Kala Group in the Year 1999 Best Female Playback Singer Award for the year 2002 for the Movie Kannathil Muthamittal from Best Media Associates (Variety Entertainment) Awarded on 18.1.2003

( PS )

ஜபரவின் அரசியல் அலசல்

ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் காஞ்சிபுரம் அருகே ஒரு வேன், ரயிலில் மோதியதால் பல உயிர்கள் பலியானது வேதனைக்குரிய விஷயம். இதையும் தனது வேடிக்கை என்று நினைத்துப் பேசும் பேச்சால் ஒரு முதல்வர் "கோவிலுக்குச் செல்வதற்காக வேன் திருப்பப்பட்டதால் கடவுள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொல்லமாட்டோம்" எனக் கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று.

( ஜ.ப.ர. )

உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் "தாவரங்களுக்கும் உயிருண்டு"

தாவரங்களின் செயற்பாடுகளுள் பல மனிதர்களின் மற்றும் விலங்குகளின் செயற்பாடுகளை ஒத்தனவே என்பதை நிரூபிக்கும் ஆய்வுகளை போஸ் மேற்கொண்டார். நுரையீரல்கள் இல்லாவிட்டாலும், தாவரங்கள் சுவாசிக்கின்றன; வயிறு இல்லாவிடினும் தாவரங்கள் உணவைச் செரிக்கின்றன; தசைகள் இல்லாவிடினும் அவை பல செயல்களை மேற்கொள்ளுகின்றன; நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும் தாவரங்கள் உணர்ச்சித் தூண்டல்களுக்கு உள்ளாகின்றன; இவற்றை நிரூபிப்பதற்கான சோதனைகள் பலவற்றை அவர் நடத்தினார்.

( டாக்டர் இரா.விஜயராகவன் )

நீ நான் தாமிரபரணி (67)

சொந்த தந்தையாக இருந்திருந்தால் பிடிவாதமாக உரிமையுடன் தன் விருப்பு வெறுப்புகளைச் சொல்லி ராஜராஜன் போராடி இருப்பான். ஆனால் மாமனிடம் அது முடியவில்லை. அவன் தான் படிக்க நினைத்த அறிவுப் பொக்கிஷங்களை எல்லாம் கூட எல்லோரும் உறங்கிய பிறகு திருட்டுத் தனமாய் இரவில் கண்விழித்துப் படிக்க வேண்டி இருந்தது. ஏதோ ஆபாசப் புத்தகங்கள் படிப்பது போல் மாமாவுக்குத் தெரியாமல் இப்படி தன் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்வதில் ராஜராஜனுக்கு திருப்தியிருக்கவில்லை என்றாலும் அவனால் விட முடியவில்லை.

( என்.கணேசன் )

His Name is Siva Shankar..(244)

There is nothing called sorrow. It is non-anticipation of a given problem. A coin has two sides. So you may get either head or tail by tossing a coin. Why should you anticipate just one? He who is prepared for all probabilities, escapes unscathed, is the problem with your thinking or with God?

( N C Sangeethaa )

சினி வம்பு

நமது திரைப்படங்களில் இடைவேளை என்று போடுவார்கள் அல்லவா? ஜப்பான் நாட்டுத் திரைப்படங்களில் ரயோமி என்று போடுவார்கள். இந்தச் சொல்லுக்கு உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அர்த்தமாம் (தமிழ்ப் படங்களுக்கு "விழித்துக் கொள்ளுங்கள் என்று போடலாமோ?").

( ஜ‎ன்பத் )

இஞ்சி ஜூஸ் மற்றும் பச்சடி

சர்க்கரை நன்றாகக் கரைந்து கொதித்தவுடன் இஞ்சிச் சாற்றை சேர்த்துக் கொதிக்கவிடவும். சற்றுக் குறுகியவுடன் இறக்கி நன்றாக ஆற விடவும். நன்றாக ஆறிய பிறகு எலுமிச்சம்பழச் சாற்றினையும், எஸ்ஸென்சையும் கலந்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டால் அஜீரணத்திற்கு கண் கண்ட மருந்து.

( பிரேமா சுரேந்திரநாத் )

நானென்றும் நீயென்றும் (63)

சந்தனா பூஜாவைப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று துளைத்தெடுத்துவிட்டாள். அதனால் அவளைச் சாப்பிட அழைத்திருக்கிறான். சமையலறையில் நின்று கொண்டே மெதுவாய்த் தலையைச் சாய்த்துப் படுக்கை அறையை எட்டிப் பார்த்தான். பூஜா படுக்கையில் உட்கார்ந்து பாடங்களைத் தீவீரமாகப் படித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 'என் புத்திசாலி பூஜா' மனதுக்குள் மனைவியை மெச்சிக் கொண்டவன் கண்களில் குறும்பு மின்ன விசிலடித்துக் கொண்டே படுக்கை அறைக்குச் சென்று வெளியில் செல்வதற்குத் தயாரானான்.

( சுகந்தி )

காவிய நாயகன் நேதாஜி (47)

காங்கிரஸிலிருந்து சுபாஷ் விலக்கப்பட்டதை எதிர்த்து, காந்திஜிக்கும், ராஜேந்திர பிரஸாதுக்கும், வசை பாடிக் கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன. சுபாஷ¤க்கு பல இடங்களில் வரவேற்பும், ஆதரவுக் கூட்டங்களும் நடந்தன. பாட்னாவில், காங்கிரஸ்காரர்கள், சுபாஷ் கூட்டங்களில், கல்லெறி, செருப்பு வீச்சு, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதைக் கண்டித்து காந்திஜி ஓர் அறிக்கை விடுத்தார். அதில் அவர் சொன்னது: "ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதால், சுபாஷ் (கட்சிக்) கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர் அல்லர்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

திருவாளர் பிச்சை

''வாய மூடு" நான் அலறினேன். "என்னை அப்பிடிச் சொல்லாதே... " அவனை அடிக்கக் கையை வீசினேன். உஷார்ப் பார்ட்டி. தடுத்துக் கொண்டான், தவிரவும் விட்டான் சர்ரியாய் ஒண்ணு என் நாடியில். அப்படியே பின்சரிந்து சப்பென உட்கார்ந்தேன். தலைக்குள் ஆதிவாசிகளின் தாரை தப்பட்டை இரைச்சல். சற்றுத் தாமதித்து, சுய நினைவு மீண்டு ஆத்திரமாய் நிமிர்கிறேன். சக்தி இருந்தால் அவனை நார் நாராக் கிழிச்சிருக்கலாம்.

( எஸ். சங்கரநாராயணன் )

நீயெனப்படுவது யாதெனின்..

மெல்ல மெல்ல
தான் எனப்படுவது ஒரு குரங்கென அறிகையில்
தாழவில்லை உனக்கு:
எதன்வழி, எந்த யுகத்தில்
உன்னுள் புகுந்ததோ குரங்கு!
ஆராயப் புகுந்து அலசுகிறாய் அனைத்தையும் அதிதீவிரமாய்
எனினும் குரங்கின் மூலம் பற்றி
எதையும் அறியமுடியவில்லை உன்னால்!

( நட்சத்ரன் )

அழகு ஓவியம்

அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

Saturday, April 21, 2007

சாரல் 308

சாரல் : 308 பொழிந்தது : ஏப்ரல் 16, 2007

ஜபரவின் அரசியல் அலசல்

உத்தரப்பிரதேசத்தில் வாக்குப் பதிவுகள் நடந்துவரும் இந்த வேளையில் சில நிருபர்கள் தங்களைத் தனியார் அமைப்பைச் சார்ந்தவர்களாகக் கூறிக்கொண்டு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் கன்னோஜ் தொகுதி வேட்பாளரிடம் 'நாங்கள் சொல்லும் ஒருவரைக் கொன்றால் உங்கள் தேர்தல் செலவுக்குப் பணம் தருகிறோம்' என்று சொல்ல, அதற்கு, 'நான் இதுவரை ஐந்துபேரை போட்டுத்தள்ளியிருக்கிறேன் இது எந்த மூலைக்கு? ஆள் யாருன்னும் அட்வான்சும் கொடுத்துட்டுப் போங்க, காரியம் கச்சிதமா முடிஞ்சுடும்' என்றாராம்! இவர்கள்தான் மக்களின் பிரதி நிதிகள்! இது எப்படி இருக்கு?

( ஜ.ப.ர )

ஹா..ஹா..ஹா..ஜோக்ஸ்

நபர் : ஜோசியரே, நம்ம ஜாதகத்துல ஏதும் தோஷம் இருக்கா பாருங்க. ஜோசியர் : தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்குப்பா. கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும்.
நபர் : என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்

( ரிஷிகுமார் )

எழுத்தாளர் விமலா ரமணியுடன் ஒரு சந்திப்பு

வில்லிலிருந்து விடுபடுகிற அம்பு தன் இலக்கை நோக்கிப் பாய்வதைப்போல் சிறுகதை வடிவம் இருக்க வேண்டும். குறைந்த கதை மாந்தர் குறைந்த சம்பவம் மனதில் தைக்கும் முடிவு. இது தான் சிறுகதை வடிவம். சிறுகதை மன்னனான ஓ ஹென்றியின் டெக்னிக்கும் இது தான். எடுப்பு தொடுப்பு முடிப்பு இவைகளில் நேர்த்தி வேண்டும். ஒரு சிறுசம்பவம் அதன் பாதிப்பு வாசகனின் உள்ளத்தைத் தாக்க வேண்டும்.

( ஜம்பு )

ஸ்டார் வார்ஸ் - புதிய தொடர் வருகிறது!

ஸயின்ஸ் ஃபிக்ஷன் எனப்படும் அறிவியல் புனைக் கதையான 'ஸ்டார் வார்ஸ்' வெளிவந்த காலம் தொட்டு இப்போதும் பல சேனல்களில் சக்கைப் போடு போட்டு வரும் விஷயம் அனைவரும் அறிந்ததே! இந்த விண்வெளித் தொடரின் ரசிகர்கள் மனம் குளிரும் புதிய செய்தி ஒன்று இப்போது வந்திருக்கிறது!

( ச.நாகராஜன் )

வாஜி..வாஜி..சிவாஜி!

மே 17 ந் தேதி ரீலிசாகும் இப்படத்தில் பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்குனர்,பழமையான ஏவிஎம் தயாரிப்பு,ராகத்திற்கு தன்னிகரில்லாத ரஹ்மான் இசையென பல முத்துக்கள் இருப்பது தெரிந்த விஷயம்.இப்படத்தின் தயாரிப்பிலும் சில சாதனைகள் உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி.அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

( கவிதா )

மனசே சுகமா? (9)

ஒவ்வொரு முறை எதிர்மறை சிந்தனையை உணரும்போதும் ஒரு சிறிய தண்டனையைத் தந்து கொள்வது சிலருக்கு வேலை செய்யலாம். லேசான கிள்ளல், செல்ல அடி, தலையில் குட்டு போன்று விளையாட்டாக ஏதேனும் செய்து கொள்கிறபோது அந்த எண்ணத்தை மேலும் வளரவிடாமல் அறுத்தெறிகிறீர்கள்.

( நிலா )

இது எங்கள் காலம்

"டேய்.. அரையாண்டுத் தேர்வு முடிஞ்சு ரொம்ப நாளாச்சே.. பிராகிரஸ் ரிப்போர்ட் எங்கேடா" "ஏம்பா.. உங்களுக்கே ஒரு நாள்தான் லீவு கிடைக்குது. வாரம் பூரா உழைச்சு அலுப்பா வரீங்க. இன்னிக்காச்சும் நிம்மதியா இருக்கலாம்ல"

( ரிஷபன் )

திருவாளர் பிச்சை

கடுமையான வார்த்தைகள். ஒரு ரெண்டு மூணு வாரம் வெளிய வர முடியாமப் பூட்டப் போகிறாப் போல இருந்தது. ரிச்சர்ட் செருரும்பேல்... அவனும் என்கூட இதை அனுபவிச்சாகணும், என்கிறதுதான் வருத்தம். எங்களைப் போல ஒட்டுண்ணி வம்சம் அல்ல அவன். நீதிபதி அறிவாரா? அவன் பிச்சைத்தொழிலில் நிர்ப்பந்திக்கப்படுகிறவன். ஒரு வாகன விபத்தில் காலிழந்து, அந்த நாள் முதல் அவன் அப்பா அம்மாவுக்கு அதுவே மூலதனமாய் ஆகி, மொத்தக் குடும்பமும் அவனைச் சுரண்டி வாழ ஆரம்பித்திருந்தது.

( எஸ். சங்கரநாராயணன் )

செய்திகள் - அலசல்

பாட்னா பல்கலைக்கழகம் பரீட்சைகளில் பிட் அடிப்பவர்களைப் பிடிப்பதற்குப் புது வழிமுறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. கிரிமினல்களைப் பிடிப்பதுபோல இவர்களைப் பிடிப்பதற்கு மோப்ப நாய்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தேர்வு அரங்கில் இந்த நாய்கள் மோப்பம் பிடித்தபடி செல்கின்றனவாம். பிட் அடிப்பவர்களை மோப்பம் பிடித்து அவர்களை லபக் எனப் பிடிக்கின்றனவாம். மோப்ப நாய் வருவது தெரிந்ததும் பல மாணவர்கள் பிட் பேப்பரை சுருட்டி வெளியே எறிந்து விட்டார்களாம்.

( ஜ.ப.ர. )

Profile of Namitha
Name : Namitha Kapoor Profession : Actress, Model, Entrepreneur Date of Birth : May 10, 1981 Awards : 1998 - Miss Surat title 2001-came third in the Miss India event

( PS )

His Name is Siva Shankar..(243)

Frankly speaking, there are no problems in anybody’s life. Look at this situation : In the interior parts of the villages in Tamil Nadu, wild and violent cows are tied up in their sheds. They are fed with fodder and grass but cannot wander out. The owners fear that if let free, these cows will wander to other fields and create havoc there. And then the field owners would hurt the cows. Once the cows tame down, they are unchained, they no longer cause any harm!

( N C Sangeethaa )

மருந்துக் குழம்பு

ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி விழுதாக்கிய பூண்டைச் சேர்த்து வதக்கி ,நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்த்து ,உப்பு போட்டு கொதிக்க வைத்து வறுத்து இடித்த பொடியைப் போட்டு மூன்று நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். சளிக்கும், உடல் நலக்குறைவிற்கும் மிகவும் நல்லது.

( பிரேமா சுரேந்திரநாத் )

நீ நான் தாமிரபரணி (66)

அருண் தர்மசங்கடத்துடன் என்ன சொல்வதென்று யோசித்து விட்டு கவனமாய் சொன்னான். "நான் எல்லாத்தையும் நேரில் வந்து சொல்றேன், காவ்யா. இப்ப எனக்கு சேதுபதி இருக்கிற இடமும் தெரிஞ்சுடுச்சு. அங்க போகலாம்னு இருக்கோம். பிறகு பேசலாம். ஓ.கே?" செல்போனை அவசரமாக ஆஃப் செய்த போது அவன் மனதில் குற்ற உணர்ச்சி இருந்தது. தாமிராவிடம் வேதனையுடன் சொன்னான். "நான் இதுவரைக்கும் காவ்யா கிட்ட எதையும் மறைச்சதே இல்லை. ஆனால்.... இதை.... இதை அவள் கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை"

( என்.கணேசன் )

இராசி பலன்கள் 16-4-2007 முதல் 22-4-2007 வரை

மீன ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் மேலிடும். உற்றார் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். இரசாயனத் தொழில், மற்றும் கமிஷன், கன்ஸ்டிரக்ஷன் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். அரசு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களில் ஏமாற்றம் அடையாதீர்கள். வீடுகளைத் திருத்திக் காட்டுவீர்கள்.

( ப. இசக்கி )

நானென்றும் நீயென்றும் (62)

முன்னறைக்கு வந்து கதவைத் திறந்தவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவளை அடையாளம் கண்டுபிடிக்கக் கொஞ்ச நேரம் ஆனது. கையில் ஒரு கைக் குழந்தையும், அவள் காலைக் கட்டிக் கொண்டு மூன்று வயது பையனுமாக நின்று கொண்டிருந்த அந்தப் பெண் சுவாதீனமாக உள்ளே நுழைந்தவள், திகைத்து நின்றவளைப் பொருட்படுத்தாமல் அவரை அமெரிக்க பாணியில் அணைத்து முத்தமிட்டாள்.

( சுகந்தி )

Indian Income tax Queries (2)

As per the provisions of the Income Tax Act, Non Residents are not required to obtain a PAN (Permanent Account Number). This is on account of Rule 114(C) (1) of I T Rule, which says that Section 139 A of the I T Act is not applicable in the case of Non-Residents. Secondly, proviso to Rule 114B states that such persons who are not required to have PAN should make declaration in Form 60 for entering into any transaction which requires mandatory mention of PAN.

( NM.Ilangumaran )

சோறு கண்ட இடமே சொர்க்கம்

நானே ஒரு பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்து, மணிக்கு ஒரு மொபைல் ஓட்டல் நடத்தத் தேவையான, மூன்று சக்கர வண்டி ஒன்றும், சமையல் எரிவாயு அடுப்புகள், பாத்திரங்கள் முதலியனவும் வாங்கிக் கொடுத்தேன். எங்கள் வீட்டிலேயே ஒரு தனி அறையில், மணி தங்க இடமும் கொடுத்தேன். தினமும் என் தொழிற்சாலை அலுவலகத்திற்கு அருகிலேயே, ஒரு மிகப்பெரிய மரத்தடியில், மொபைல் ஓட்டல் மணியால் நடத்தப்பட்டது. ஏற்கனவே மணியுடன் பழகிய என் நண்பர்களும், தொழிலாளத் தோழர்களும், மணியின் புதிய தொழிலை விரும்பி வரவேற்றதுடன், பலத்த ஆதரவும் அளித்தனர்

( வை.கோபாலகிருஷ்‎ண‎ன் )

அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

காவிய நாயகன் நேதாஜி (46)

இங்கிலாந்து வாழ்வா சாவா என்று தடுமாறிக் கொண்டிருக்கிற நிலையில், எதிரியையும் நண்பனைப் போலப் பாவிக்க வேண்டும். யுத்த முயற்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர வேண்டும் என்று அவர் பேசினார். நேதாஜியின் கருத்து வேறு விதமானது. இந்த வாய்ப்பை நழுவ விடாமல் போர் தொடங்கி விடுதலையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "காந்திஜி அர்ஜுனக் குழப்பத்தில் ஈடுபடாமல், கீதை உபதேசித்த கிருஷ்ண பரமாத்மாவாக செயல்பட வேண்டும்" என்று ஒரு போடு போட்டார் அவர்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

கவிதைகள்

எல்லாக் கஷ்டத்துக்கும்
குருடாய் இருத்தலே
ஆதிகாரணமென்பதை அறிந்திருக்கிறாயா நீ
எதையும் மேலோட்டமாய்ப் பார்த்து
மிதப்பாய் திரிந்தால் போதுமா உனக்கு?
உன்னை நீயே ஹீரோவாய் பாவித்து
தோள்களை விடைப்பது,
உன் சுமையை நீயே சுமந்து மூச்சுத்திணறுவது-
இதெல்லாம் தேவையா
யோசி:

( நட்சத்ரன் )

Monday, April 09, 2007

சாரல் 307

சாரல் : 307 பொழிந்தது : ஏப்ரல் 9, 2007

'IQ'வை அதிகப்படுத்துவது எப்படி?
ஒரு குழந்தையின் ஐ.க்யூ என்பது எவ்வாறு கூறப்படுகிறது? அந்த குழந்தையின் மன வயதை நிஜ வயதால் வகுத்து வருவதை நூறால் பெருக்க வேண்டும். உதாரணமாக ஒரு பையனின் மன வயது எட்டு என்றும் அவனது நிஜ வயதும் எட்டு என்றால் எட்டை எட்டால் வகுத்து வரும் எண்ணிக்கையான ஒன்றை நூறால் பெருக்கி வருவது நூறாகும்.அதாவது அந்த குழந்தையின் ஐ.க்யூ நூறாகும்.

( ச.நாகராஜன் )

கண்ணுக்குத் தெரியாத தளைகள்
அவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி, மகள், மகன் எல்லோரும் உண்டு, நமது பகுதிக்கு வெகு அருகாமையில் தான் அவர்கள் வசிக்கிறார்கள்.அவருடைய மகளுக்கு சமீபத்தில் தான் மணம் முடித்தார். மகன் கணினி தொழில்நுட்பம் பயின்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். நல்ல சம்பளம், அவருடைய மனைவியும் மாநில அரசாங்கத்தில் அதிகாரி யாக இருக்கிறார். சொந்த வீடு, வாகனம் அனைத்து வசதிகளும் உடையவர். இந்தப் பெண்ணின் விஷயம் அவர்கள் யாருக்கும் தெரியாது.

( கு.சித்ரா )

Sivaji – Music Review
A typical Rajini intro song, in the league of “ En peru padayappa”, “Devuda Devuda” etc., S.P.B’s voice bubbles with magic and energy required for the song. The chanting by Raihanah and percussions aptly provide the village based folk feel. Na. Muthukumar has proven once again in his stylish and touching lyrics. Particularly the lines “Koovum cell phone in nacharippai anaithu, sil vandin ucharippai ketpom” mark his presence.

( Vignesh Ram )

செய்திகள் - அலசல்
ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி அளிக்க வேண்டியது அரசின் கடமை, அதற்காக இருப்பவனிடமிருந்து பிடுங்கி இல்லாதவனிடம் கொடுப்பது என்ன நியாயம்? மேலும் பல கல்விக்கூடங்களைத் துவங்கி, ஜாதி மத அடிப்படை எதுவுமில்லாமல் அனைவருக்கும் கல்வி அளிப்பதை விட்டுவிட்டு எத்தனை நாளைக்கு தற்காலிகத் தீர்வுகளிலேயே காலம் தள்ளுவது? ஊதுகிற சங்கை ஊதுவோம் விடியும்போது விடியட்டும்!

( ஜ.ப.ர. )

மனசே சுகமா? (8)
ஆன்டனி இதுவரை எப்போதுமே இப்படி நடந்து கொண்டதில்லை கடந்த மூன்று மாதங்களாகவே வேலைப் பளு ஆன்டனிக்கு மிக அதிகம். அதனால் ஒரு வேளை மன அழுத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. 'என்னால் முடிந்ததை எல்லாம் செய்தேன். நேற்று கூட இரவு பதினொரு மணி வரை வேலை செய்தேன். இதற்கு மேல் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?' என்று அவர் குரல் உயர்த்திச் சொன்னதில் வேலையை முடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் அதிகம் இருந்தது. அவர் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார் என்று அறிந்திருந்தும் நான் அங்கீகரிக்க மறுத்துவிட்டேன்
( நிலா )

அனுமாரும் இந்திராகாந்தியும்
இந்தியாவுக்கு கெடச்ச மேன் ஆஃப் தி மேட்ச் கோப்பையை பர்முடா கேப்டன் புடுங்கிட்டாராம். ஏன்னு கேட்டா, "நீ இலங்கையை ஜெயிச்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.. அட்லீஸ்ட் பங்களாதேஷையாவது அடிச்சிருந்தா உனக்கு இந்தக் கப்பு கொடுக்கறதுல அர்த்தம் இருக்கு....ஆனா... நீ அடிச்சது ஒரு புள்ளப்பூச்சியை. அடிக்கிறானாம் அடி... செவனேனு பர்முடா தெருக்காட்டுல கிரிக்கெட் வெளாடிட்டு திரிஞ்சவன்ங்க நாங்க. எங்ககிட்டு வீரத்தைக் காட்டிட்டு கப்பு வேற கேக்குதோ"

( ரிஷிகுமார் )

காவிய நாயகன் நேதாஜி (45)
அகில இந்திய காங்கிரஸ் தலைமையிலிருந்து விலகிய சுபாஷுக்கு வங்காளத்தில் ஆதரவு பெருகியது. அடுத்து வந்த வங்காள காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சுபாஷே தேர்வு பெற்றார். அந்த சந்தர்ப்பத்தில் காலவரையின்றி 80 கைதிகள் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

Have you read this book?
A world of fantasy lying ahead Sometimes really captivating, Sometimes really dreary, Sometimes emotional, At times witty. Like a classical book, Filled with all elements, I am full of perfection and flaws Meek and humble at the outlook

( Arvind )

'சாட்சாத்' பெருமாள்...
''யாரு பாலாஜியா? அகண்ட 'நாமம்', வஸ்த்ரம்...சாட்சாத் பெருமாளே வந்தமாதிரின்னா இருக்கு...", குழைந்தாள் ராஜலெட்சுமி மாமி. ''சும்மா முகஸ்துதி பண்ணாதீங்கோ மாமி...எள்ளு, எண்ணையெல்லாம் தயாரா வச்சுருக்கேளா?., இன்னிக்கு நிறைய இடம் போகணும்", பரபரத்தான் பாலாஜி.
( திரு )

Indian Income tax Queries
When you earn taxable income during the financial year you have to declare your income to the income tax department and file return of income. If you fail to file returns, subsequently during income tax raid the entire accumulated income will be treated as the income of that year and tax will be levied at the maximum marginal rates accordingly. Where as, a result of failure to file the return, the tax evasion exceeds Rs. 1 lakh, the penalty is a fine and imprisonment that could vary in term between 6 months to 7 years.

( NM.Ilangumaran )

சினி வம்பு
சிம்புவின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் 'முனி' புகழ் வேதிகா. ஒவ்வொரு கதாநாயகியாகக் கழன்று கொள்ள, கடைசியில் இந்தக் "காள"யின் (படத்தின் பெயராம் ) திமிரு (ஆமாம் இப்படத்தை டைரக்ட் செய்பவர் திமிரு படத்தை இயக்கிய தருன் கோபி) அடக்க வேதிகா மணி கிட்டியிருக்கிறார்.

( ஜன்பத் )

நீ நான் தாமிரபரணி (65)
ஈஸ்வரன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அவரைப் பார்த்தார். ஈஸ்வரனின் பார்வை மிகப் பிரபலமானது. பலரைத் திகிலுக்கு உள்ளாக்குவது. சாம்பசிவத்துக்கு லேசாக வயிற்றைக் கலக்கியது. ஈஸ்வரனின் மௌனமான பார்வையைத் தாங்க முடியாமல் சாம்பசிவம் கேட்டார். "என்ன பார்க்கிறாய் ஈஸ்வரன்?"
( என்.கணேசன் )

His Name is Siva Shankar..(242)

In a major way, Fear is the root cause for everything. Why do you refuse to go to the forest? You fear that a tiger may pounce on you. Otherwise how does the forest affect you? What a beautiful specimen forests are, of God’s artistry? It is only because you fear the tiger, does the tiger hit you. If you go without any such thoughts near the tiger, it may not even notice your presence.
( N C Sangeethaa )

நானென்றும் நீயென்றும் (61)

அவினாஷிற்கு ஏதாவது சாப்பிடத் தயார் செய்யலாமா? பசியோடு இருக்கும் போது சட்டென்று கோபம் வரும் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ஆனால் என்ன சமைப்பது என்று புரியவில்லை. அவளுக்கு சமைக்கத் தெரிந்ததே ஏதோ கொஞ்சம். அதிலும் அவினாஷ் என்ன சாப்பிடுவான் என்று அவளுக்குச் சுத்தமாகத் தெரியாது. அங்கே வீட்டிலிருக்கும்வரை எப்போதுமே கமலா தான் சமையல் பொறுப்பு. தண்ணீர் குடிக்கக் கூட சமையலறைக்குச் சென்றதாய் அவளுக்கு நினைவில்லை.
( சுகந்தி )

குரங்குசூழ் உலகு

தத்தம் குரங்குகளுக்கிடையே விதவிதமாய்ச் சண்டை மூட்டி விளையாடிக் களிக்கிறார்கள் குரங்காட்டிகள் நகத்தை வைத்து பிற குரங்குகளைப் பிராண்டியும் கர்புர்ரெனக் கத்தியும் குதித்தும் குட்டிக்கரணமிட்டு வித்தைகாட்டியும் ஜரூராய் விளையாடிக்கொண்டிருக்கின்றன குரங்குகள்
( நட்சத்ரன் )

இராசி பலன்கள் 9-4-2007 முதல 15-4-2007 வரை

விருச்சிக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். குலதெய்வ வழிபாடு செய்து வரவும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் பொருட்செலவு உண்டு. மனைவியால் பொருள் வரவு உண்டு. தந்தை மகன் உறவால் பிற பிரச்சனைகள் வந்து நீங்கும். பழைய வாகனங்களைப் பழுதுபார்க்க நேரிடும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும்.

( ப. இசக்கி )

சைவ சிங்கம்
"மான்களும் பெரிய அகலமும் ஆழமும் கொண்ட பள்ளம் ஒன்று வெட்டி குச்சிகளையும் இலைகளையும் போட்டுத் தரை போல் ஆக்கின. சில நாட்கள் சிங்கத்திற்கு உணவாகும் பிராணிகள் வெளியில் போகாமல் மறைந்து கொண்டன. சிங்கம் பசியால் கர்ஜித்துக் கொண்டு உணவு கிடைக்காமல் தேடி அலைந்த சமயத்தில் மான்கள் சிங்கம் வரும் திசையின் பள்ளத்திற்குப் பின்னால் நின்று கொண்டு நாட்டியம் ஆடின. அதைப் பார்த்து அதன் மேல் தாவிய சிங்கம் பள்ளத்தில் விழுந்து மாட்டிக் கொண்டது.

( P.நடராஜ‎ன் )

வம்சம்

அன்று இரவு நிசப்தமாக இருந்தது ரோஸி ஏன் அழவில்லை? அழுதழுது உயிரை விட்டுவிட்டதா? ரேவதி மெல்லக் கதவு திறந்து பார்த்தாள். அங்கே ரோஸி படுத்திருந்தது. இவள் மதியம் போட்ட சாப்பாட்டைக் கூட சாப்பிட்டிருந்தது. அதோடு... ரோஸியிடம் மூன்று சின்னஞ்சிறிய பூனைக்குட்டிகள் பால் அருந்திக் கொண்டிருந்தன. இவளைக் கண்டதும் ரோஸி மசிழ்ச்சியுடன் வாலாட்டியது.
( விமலா ரமணி )

சர்வஜித்தே வருக !
தமிழ் புத்தாண்டே வருக தலை நிமிர்ந்து வருக தமிழர்நிலை உயர வருக தமிழ்மொழி சிறக்க வருக! உலகில் அமைதி காக்க வருக உழைப்பின் பெருமை உயர வருக உயர் அறங்கள் வளர வருக உறவை உயர்த்த வருக! வருக!

( என். வி. சுப்பராமன் )

முளை கட்டிய கொள்ளு குருமா
கொள்ளை முன் தினமே ஊற வைத்து முளை கட்டி தயாரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சிகப்பு மிளகாய் கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு வெங்காயத் துண்டுகளையும் நறுக்கிய பூண்டையும் இஞ்சித்துண்டுகளையும் வதக்கிக் கொண்டு தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு தனியாத்தூள் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

( பிரேமா சுரேந்திரநாத் )

Thursday, April 05, 2007

சாரல் 306

சாரல் : 306 பொழிந்தது : ஏப்ரல் 2, 2007

இந்திய உணவு உற்பத்தி தன்னிறைவில் மீன் வளர்ப்பின் பங்கு
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மீன் உற்பத்திப் பெருக்கம் மீன் வளர்ப்பின் மூலம் சாத்தியம் என்பது 1987-1996 காலக்கட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மீன் பிடிப்பின் மூலம் கிடைக்கும் மீன் குறைந்துகொண்டே வருவதால், மீன் பிடிப்பை விட மீன் வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக வளர்ந்து கொண்டு வருகிறது. இன்றளவில் இந்தியாவில் மீன் வளர்ப்பிற்காக உபயோகப்படுத்தப்படும் இடம் 10% என்றளவிலே உள்ளது.

( ராஜூ சரவணன் )


அரசியல் அலசல்

பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே பிரச்சினைகளைக் கிளப்பும் கட்சி என்ற எண்ணம் பரவி வரும் வேளையில் எங்களாலும் சமுதாயத்திற்கு நல்ல காரியம் செய்ய முடியும் என்று சொல்வதுபோல் தமிழக பா.ம.க. கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும், வாகனங்கள் வெளிவிடும் நச்சுக் காற்றால் ஏற்படும் பாதிப்புக்களை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் மாநில சட்டசபைக்கு பஸ்ஸில் செல்வதற்கு பதிலாக சைக்கிளிலேயே பயணம் செய்தனர்.

( ஜபர )


மனசே சுகமா? (7)
உடனடியாக எதிர்மறை முடிவுக்கு வருதல்: மற்றவர்களையும் நிகழ்வுகளையும் எதிர்மறையாகவே புரிந்து கொண்டு அதிவேகமாக எதிர்மறை எண்ணங்களைத் தூண்டும் முடிவுகளுக்கு வருவது. எடுத்துக்காட்டாக, செல்வனின் புதுவண்டியைப் பார்த்த மோகன், "இந்த வண்டி விலை உயர்ந்ததாயிற்றே" என்று சொல்கிறார். செலவன் அதனை 'உனக்கெல்லாம் எதற்கு இந்த விலை உயர்ந்த வண்டி?' என்று மோகன் மனதுக்குள் நினைத்துக் கொண்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டு, தன்னை யாரும் மதிப்பதில்லை என்ற முடிவுக்கு உடனடியாக வருவார்.

( நிலா )


செய்தித் துளிகள்
HIVயால் பாதிக்கப்பட்ட இரத்தம் கொடுக்கப்பட்டதால் தில்லியிலுள்ள AIIMS மருத்துவமனையில் 17 வயதான ஜோதி என்ற பெண் மரணமடைந்திருக்கிறாள். அவள் டெங்கு ஜுரத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளுக்கு 20 யூனிட் இரத்தம் (HIV கிருமிகள் கலந்த) கொடுக்கப்பட்டது. ஜோதி நோய் குணமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவள் தனது பரீட்சைகளையும் எழுதி முடித்தாள். ஆனால் மறுபடியும் அவள் நோய் வயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் HIVயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

( ஜ.ப.ர )


கவிதைகள்
ஆன்மீகம்
பற்றற்றிரு! சாமியார் பேச்சுக்கு
மயங்கினார்கள் பக்தர்கள்
அன்றைய கலெக்ஷன்
அரை கோடி

( எம்.ஆர்.நடராஜன் )


சினிமா சேதிகள்
வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இந்திரலோகத்தில் அவருடன் நடிக்க சிம்ரன் இஷ்டமில்லை என்றுவிட்டாராம். இன்னும் பழைய நினைவுகளிலேயே இருக்கும் சிம்ரன் ஒரு புது முகத்துடன் நடிக்க 35 லட்சம் கேட்கிறாராம். கிடைத்த சான்ஸில் நடிப்பதே நல்லது. இன்னும் கொஞ்ச நாள் போனால் சிம்ரனுக்கு சித்தி வேஷங்கள்தான் கிடைக்கும் என்று சிம்ரன் அனுதாபி ஒருவர் சொல்கிறார்.

( ஜன்பத் )


சர்தார் தி கிரேட்! (4)
ரோட்டில் சென்று கொண்டிருந்த சர்தார்ஜி திடீரென நின்று தன்னுடைய டிபன் பாக்ஸைத் திறந்து பார்க்கிறார். ஏன்னு கேட்டா பதில் சொல்றாரு. "நான் ஆபிஸுக்குப் போறனா இல்ல ஆபிஸிலிருந்து திரும்புறேனா அப்படின்னு செக் பண்ணிக்கத்தான்"

( ரிஷிகுமார் )


அந்த ஒரு நிமிடம்
மத்தியதர கணினி நிறுவனத்தில் (250 கணினி இருக்கும் பட்சத்தில்) 250*400=1 லட்சம் மணி நேரம் உறங்குநிலையில் இருக்கின்றது. ஆக ஒரு மாதத்திற்கு வீணடிக்கப்படும் மின்சக்தி 100000*35=35,00,000 Kwh(1Kwh=1 unit). கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் என குறைவாக வைத்துக்கொண்டாலும் 21,000 ரூபாய் வீண்.

( கவிதா )


உலகக்கோப்பை 2007

கோச் க்ரெக் சாப்பல் தான் சொன்னபடி கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனச் சொல்கிறார். தேர்வுக் குழுவின் வெங்சர்கார் பழைய வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். தான் சொன்னபடிக் கேட்கவில்லை என்பது அவரது வாதம். கோச்சின் தலையும் தேர்வாளர்கள் தலைகளும் உருட்டப்படுகின்றன.இனிமேல் என்ன செய்ய வேண்டும், எப்படி எதிர்காலத்தில் இந்திய அணியை வலுப் படுத்துவது போன்ற கேள்விகள் எழுகின்றன.

( டி.எஸ்.பத்மநாபன் )


His Name is Siva Shankar..(241)

Rama is an incarnation of Lord Vishnu. During his exile in the forest, he comes across Pampa river and is fascinated by the surroundings. His mind gets latched on to the beauty of the landscape. It is thought bundle from this body of Rama that finds recourse later in the form of Lord Ayyappa, so that’s why you see Pampa river finding a prime place in Ayyappa’s life.

( N C Sangeethaa )


நானென்றும் நீயென்றும் (60)

"தயவு செய்து நான் சொல்றதைக் கேளு. நீ எனக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்திருக்க. நான் தான் எல்லாத்தையும் தப்பாப் பயன்படுத்திக்கிட்டேன். எத்தனை முறை சாரி சொன்னாலும் நான் செய்தது சரியாகாது. என்னோட தவறுகளுக்குப் பிராயச்சித்தம் பண்ணினால் தான் என் மனம் அமைதி அடையும். உனக்கு என் மேல் இருக்கிற கோபம் புரிஞ்சதாலே தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். உன் மனக் காயங்கள் ஆறத் தேவையான காலகட்டத்தைக் கொடுக்க எண்ணித்தான் வெளியேறினேன்

( சுகந்தி )


நீ நான் தாமிரபரணி (64)

"அருணும் நானும் எதற்காக இங்கே வந்திருக்கிறோம்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். ஒரு காலத்தில் இரண்டு காதலர்கள் இங்கே வந்ததும், ஒரு வருஷம் இருந்ததும் உங்களுக்குத் தெரியும். அவங்க யாருன்னு தெரிஞ்சிக்கறதுக்காக தான் நாங்க வந்திருக்கோம். நீங்க சொல்லத் தயார்னா நாங்க அதுக்கு ஒரு விலை கொடுக்கவும் தயாராய் இருக்கோம்....".

( என்.கணேசன் )


செகண்ட்ஸ்

ஒரு குழந்தைக்காக இன்னொரு திருமணம் செய்வது தப்பில்லையா என ஒரே ஒரு நாள் சிந்தித்துப் பார்த்துப் பின் அவன் எண்ணத்தைக் கூறச் சொல்ல, அடுத்த நாளே "நிச்சயம் அது தப்பில்லை" என்றான் சுரேஷ். "சரி நானே பத்திரிகை அடிக்கக் கொடுத்துவிடுகிறேன்" என்றாள் மஞ்சுளா.

( லால்குடி, வெ. நாராயணன் )


பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும் (5)

UFO ஆதரவாளர் ஹைனக் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு ஜூலை 76ம் ஆண்டு சென்றபோது அவரிடம் அங்கிருந்த விஞ்ஞானிகள் UFO பற்றிய கதைகளில் வெளியிடப்பட்ட படங்களைப் பற்றிய உண்மையை அவருக்குக் காண்பித்தனர். அதற்குப் பிறகு ஹைனக் தான் உண்மை எது என்று அறியாமல் தவறான செய்திகளைத் தனது புத்தகத்தில் வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் ufology ஆதரவாளர்கள் ஹைனக் போல் பெருந்தன்மையாக தங்கள் பக்கத்திலுள்ள தவறுகளை உணர மறுக்கின்றனர்.

( டி.எஸ்.பத்மநாபன் )


கவிதைகள்

பேருந்து கர்னாடகாவில் தமிழகப் பேருந்து ஒவ்வொரு முறை எரியும்போதும் யோசிக்கிறது இந்தியா சமத்துவ நாடாம் சொல்லிக் 'கொல்'கிறார்கள்!!

( A.S.P. )


ஜோதிடம் கேளுங்கள்

ராஷஸ வருடம் புரட்டாசி மாதம் 2 ஆம் தேதி 19-9-1975 அன்று பிறந்த தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். தற்பொழுது தங்களின் வயது வரு. 31-5-12 தற்பொழுது சனி தசை நடந்து வருகிறது. 10இல் உள்ள கோட்சார குரு வரும் ஐப்பசி மாறும் பொழுது தங்களின் சிரமங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். 16-11-2007 க்குப் பின் வாழ்க்கையில் நல்ல திருப்பத்தைக் காண்பீர்கள். உத்யோகம் சிறப்படையும். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள். நல்ல பலனை காண்பீர்கள். சிறப்பான வாழ்க்கை வாழ எமது ஆசிகள்.

( குருஜி கார்த்திகா சித்தார்த் )


பெயர் சூட்டல்

"நேற்று வந்த பெண் ஜாதகமும், உனக்குப் பொருத்தமாக இல்லைன்னு ஜோஸியர் சொல்லி விட்டாருடா;. வேறு ஏதாவது ஜாதகம் பொருந்தி வருதான்னு பார்ப்போம். எல்லாத்துக்கும் ஒரு நல்ல நேரம் காலம் வரணுமோல்யோ" என்றாள். ரகு வழக்கம் போல் நொந்து நூலாகிப்போனான்.

( வை.கோபாலகிருஷ்ணன் )


காவிய நாயகன் நேதாஜி (44)

சுபாஷ் தமது கடிதங்களில் குறிப்பிட்ட முக்கிய விஷயம், பிரிட்டிஷ் அரசாங்கம் நமது கோரிக்கையைப் போராட்டமின்றியே ஏற்றுக் கொண்டாலும் சரி, அல்லது போராட வேண்டியே நேர்ந்தாலும் சரி, அப்போது இருந்த சூழ்நிலையில், போராட்டத்தை நீண்ட காலம் நடத்த வேண்டிய அவசியமே இருக்காது. இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு துணிச்சலோடு நாம் இறுதிக் கெடுவை அறிவித்து விட்டுப் போராட்டத்தில் குதித்தால் அதிக பட்சம் 18 மாதங்களுக்குள் சுதந்திரம் கிடைப்பது உறுதி.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


அழகு ஓவியம்
அழகு ஓவியம்

( முத்துக்குமார் )