Wednesday, February 28, 2007

சாரல் 301

சாரல் : 301 பொழிந்தது : பிப்ரவரி 26, 2007

அரசியல் அலசல்

பஸ் கொளுத்தப்பட்டு மாணவிகள் எரிந்து இறந்த இந்தச் சம்பவம் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் காலம் காலமாக ஈடுபடுகிற வன்முறைக் கலாச்சாரத்தின் விளைவுதான். இந்தத் தீர்ப்பு கொஞ்சமாவது ஒரு மனமாற்றத்தைக் கட்சிகளிடையே ஏற்படுத்த வேண்டுமென விரும்புவது காலிழந்தவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலவோ?

( ஜ.ப.ர. )

ஜேம்ஸ்பாண்டின் பஞ்ச் டயலாக்ஸ்

இப்போது ஜேம்ஸ்பாண்ட் தமிழில் பேசுகிறார்!ஆம், படங்கள் டப்பிங் செய்யப்படுகின்றன! விஜய் சேனலில் பொங்கல் அன்று ஒளிபரப்பப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் கூறுவது, பாண்ட், ஜேம்ஸ்பாண்ட், கலக்கறய்யா நீ கலக்கறே! இன்னும் தமிழில் ஜேம்ஸ்பாண்ட் கலக்குவாரோ?

( ச.நாகராஜன் )

தருமி 2007

காமெடி கலாட்டா செய்யும் தருமியும் சிவபெருமானும். 2007 இன் லேட்டஸ்ட் திருவிளையாடல்: தருமி தனிமையில் புலம்புகிறான். "ஐய்யோ ஆயிரம் டாலராச்சே. ஆயிரம் டாலராச்சே. எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ·பீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில... கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ... அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாடி நான் போடனுமே...

( எம்.ஆர்.நடராஜன் )

மன இறுக்கத்தைத் தளர்த்த பத்து எளிய வழிகள்

வெற்றிக்குத் தடைக்கல்லாக இருக்கும் மன இறுக்கத்தை விரட்டி அடியுங்கள், பத்து எளிய வழிகள் மூலம். தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும்.

( ரிஷிகுமார் )

கவிதைகள்

ஈராக் மண்ணின் ஈனக்குழந்தை
ஈர விழிகளில் கேட்கிறது...
"மறுபிறப்பென்பதென் மதத்தில் இல்லை...
இந்திய மதங்களில்
சாத்தியம் உண்டெனில்
பிறந்திடச் செய்யுங்கள்...
இன்னொரு காந்தியை...!"

( நானா )

செய்திகள் அலசல்

ஜப்பானில் விநாயகர், சரஸ்வதி, ஜப்பானிய நாட்டுப்புற நடனத்தில் ராமாயணம்: ஜப்பானில் பல இந்து ஆலயங்கள் இருக்கின்றன, பண்டைக்காலத்தில் ஜப்பானில் சரஸ்தி தேவியையும் வினாயகரையும் வீரர்கள் வணங்கியதாகவும் கூறிய அவர், புகாக்கு, கிகாக்கு என்ற ஜப்பானிய நாட்டுப்புற நடனங்களில் ராமாயணக் காவியத்தின், கதையம்சம் இருக்கிறதெனவும் கூறினார்.

( ஜ.ப.ர. )

தன்வினை

கடைகளை அடித்து நொறுக்குவதும் வாகனங்களுக்குத் தீ வைப்பதுமாக சாதாரண மக்களை பீதி கொண்டு ஓட வைத்தனர். கலவரம் பரவிக் கொண்டிருந்தபோது வேலுவாலும் சும்மா இருக்க முடியவில்லை. கைபேசியில் தகவல் வந்து விட்டது.

( ரிஷபன் )

"மாற்றம் என்பது ஒரே ஒரு சினிமாக்காரனால் ஏற்படாது" - இயக்குநர் சேரன் (பாகம்-2)

போட்டிக்குத் தகுதியுள்ள படத்தைத் தேர்ந்தெடுப்பது 15 பேர் கொண்ட கமிட்டி. தவமாய்த் தவமிருந்து கூட நல்ல படம்தான், அந்த படத்தை ஏன் போட்டிக்கு செலக்ட் செய்யவில்லை என்று யாரிடமும் கேள்வி கேட்க முடியவில்லை. ரிலீஸ் ஆகிவிட்ட படங்களைப் போட்டியில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை.
( மதிமோகன் )

காவிய நாயகன் நேதாஜி (39)

அபூர்வமாக ஒரு விஷயத்தில் காந்திஜிக்கும், சுபாஷுக்கும் கருத்தொருமை ஏற்பட்டது. பிரீட்டன் வகுத்த சமஷ்டி அரசியல் திட்டம் என்ற திட்டத்தின்படி உண்மையான சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைக்காது என்று இருவரும் ஒருமித்துக் கருதினார்கள். இந்த அரசியல் திட்டத்தை ஏற்கக் கூடாது என்பதிலும், காங்கிரஸ்காரர்கள், சட்ட மன்றத் தேர்தலுக்கு நின்று, மந்திரி பதவி ஏற்கக் கூடாது என்றும் இருவரும் தீவிரக் கருத்துக் கொண்டிருந்தார்கள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

மனசே சுகமா? (2)

கோபப்பட்டா வாழ்க்கையில சாதிக்க முடியுமாங்க? கோபத்தைக் குறைக்க ஓர் எளிய பயிற்சி.: நீங்கள் யார் மேல் அதிக காட்டமாக இருக்கிறீர்களோ, அவர்களை நினைவில் கொண்டு வாருங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு எந்த அளவு கோபம் இருக்கிறதென 0-10 அளவுகோலில் குறித்துக் கொள்ளுங்கள்.

( நிலா )

அழகழகாய்க் கேள்விகள்

"அழகாய் இருக்கிறாய்... மகிழ்ச்சியாய் இருக்கிறது" மேனியழகு மிளிர நிபுணரின் ஆலோசனைகள்: நீங்கள் எந்த வேலை செய்யும் போதும், கண்னை அடிக்கடி சிமிட்ட வேண்டும். 10 நிமிடத்திற்கு ஒரு தடவையாவுது தொலைதூரப் பார்வை பார்ப்பது நல்லது.

( நிலாரசிகை )

His Name is Siva Shankar..(236)

There is no need to carry a feeling of self-pity or guilt at whatever happens in life. Proceed to the next step, knowing that you have grown as a person. But ensure you do not repeat the same mistakes; there is something definitely wrong in repeating the same mistakes.

( N C Sangeethaa )

தாலாட்டு

பூவெடுத்து மேனிசெதுக்கி
விழியில் கவியெழுதி
விரலில் ஒவியமெழுதி
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!

( கவிதா )

கண் எதிரே கார் கடத்தல்

அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுக்கலாமா என்று யோசித்தேன். தாமதம் செய்யச் செய்ய வண்டி வெளியூருக்கு எங்காவது கடத்தப்படக் கூடும். நம்பர் ப்ளேட் கழட்டப்படக் கூடும். அக்கக்காக அனைத்து பாகங்களும் பிரித்துப் போடப்பட்டு உதிரி பாகங்களாகவே விற்பனை செய்துவிடப் படக்கூடும். முடிவாக என் கைவசம் இருந்த டீ.வி.எஸ் 50யிலேயே, கடத்தப்படும் என்னுடைய காரைத் துரத்தினேன்.

( வை.கோபாலகிருஷ்‎ண‎ன் )

எழுச்சி

நீ நூலகங்களில் சரித்திர புத்தகங்களைத்தான் விரும்பிப் படிப்பாய். புரட்சிகளை ஏற்படுத்தி சமுதாயத்தைப் புரட்டிப்போட்ட தலைவர்களைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசுவாய். அந்த ஆர்வம்தான் சயன்ஸ்சிலும் கணக்கிலும் உன் மார்க்கையே குறைத்து விட்டது. இந்த இடத்தில் இன்னொன்றையும் நினைவு படுத்தட்டுமா?

( P.நடராஜன் )

நீ நான் தாமிரபரணி (59)

அம்பலவாணன் தொடர்ந்து சொன்னார். "....அவங்க உன்னைப் பார்த்த விதம் துப்பறியக் கிளம்பிய பத்திரிக்கைக்காரன் எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் மாதிரி இல்லை. நிறைய காலம் கழிச்சு தன் குழந்தையைப் பார்க்கிற தாயின் பார்வையை அதில் பார்த்தேன். அப்போதே எனக்கு நீ அவங்களோட ஏதோ விதத்தில் சம்பந்தப்படற மாதிரி உறுதியாய்த் தோணிச்சு. எந்த விதத்தில்னு அப்பவும் சரி இப்பவும் சரி என்னால் யூகிக்க முடியலை.

( என்.கணேசன் )

இராசி பலன்கள் 26-2-2007 முதல 04-3-2007 வரை

ரிஷபராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். நெருப்பு, ராணுவம், போலீஸ் துறை சார்ந்தவர்கள், இனையதளத்தவர்கள் நற்பலன் அடைவார்கள். உடம்பில் நரம்பு, வாயு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். தீர்த்தயாத்திரை சென்று வருவீர்கள். சில வீடு மாற்றம் உண்டாகக் கூடிய காலமாகும். கமிஷன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.

( டாக்டர் ப. இசக்கி )

நான் ரசித்த பாடல் (10)

பாபனாசம் சிவன் முதலில் இசையமைப்பாளரான பின்னர் தான் திரைப்படங்களில் இசையமைப்பாளருக்கு உரிய சிறப்பான அங்கீகாரம் கிடைத்தது. அதன் பின்னரே பல பின்னணித் திரையிசைப் பாடகர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் அற்புதமான பாடல்களைப் பாடி என் மனதில் என்றும் நினைவில் நிற்கும் எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்களின் பாடல்களின் நினைவுகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

( பிரேமா சுரேந்திரநாத் )

நானென்றும் நீயென்றும் (55)

ட்ராவிசைப் போல் ஆட்களிடம் மாட்டிக் கொண்டு கொடுமைக்குள்ளான பெண்களுக்கு உதவி செய்யும் நிறுவனத்தின் கல்லூரிப் பிரதிநிதியையும் சந்திக்கக அவர் உதவி செய்வார். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்யத் தயாராய் இருக்கிறோம். உன் கல்வி தடைபடாமல் நல்ல மதிப்பெண்களை எடுக்கப்பார். உடனடியாக நீ உன் வகுப்புகளுக்குச் செல்லப் பார்" என்று அவர் அறிவுரை சொல்ல பூஜாவிற்குத் தெம்பு வந்தது.

( சுகந்தி )

சில சமயம்

ரகசியமாய்க் கனவை
அடைகாத்து வைத்து
குஞ்சு பொறிப்பது போல்
சில துளி நிகழ்வுகள்..

தங்காது எனத் தெரிந்தும்
தென்றலை சுகிக்கும் மனம்.

( ராசி அழகப்ப‎ன் )

Tuesday, February 20, 2007

சாரல் 300

சாரல் : 300 பொழிந்தது : பிப்ரவரி 19, 2007

இயக்குனர் சேரனுடன் ஒரு கலந்துரையாடல்

சினிமா இப்படிதான் இருக்க வேண்டும் என்று நாம் சொல்லவே கூடாது. என்னைப் பொறுத்த வரை மறு மலர்ச்சி என்பது என்ன, சினிமா மூலமாக நல்ல திரைப்படங்கள், சமூகம் சார்ந்த திரைப்படங்கள், கலல உணர்வுள்ள, ரியாலிடி உள்ள திரைப்படங்கள் - இதைத்தான் நாம் நினைக்கிறோம். இவை நம்முடைய ரசனை, நம்முடைய தாக்கம், நாம் சினிமாவை நேசிக்கிற விதம். நமக்கு இதுதான் நல்ல சினிமா.

( மதிமோகன் )

நீங்கள் முன்னேற ஏ.கே.47 மிரட்டல்தான் வேண்டுமா?

கொல்லப்படுவதற்கு இறுதி எச்சரிக்கை தரப்பட்டவுடன் டாம் தனது டயரியை எடுத்தார்; தனது கனவுத் தோட்டத்தை முழு விவரங்களுடன் வரைய ஆரம்பித்தார். ஏ.கே. 47 அவரது தலையை நோக்கிக் குறி பார்த்துக் கொண்டிருக்க அவரதுமனம் கனவு ப்ராஜக்டில் '·போகஸ்' ஆனது! நான்கு சுவர்களுக்கு நடுவில் அந்த வரைபடம் ஆரம்பமாகி முன்னேறிக் கொண்டே இருந்தது.

( ச.நாகராஜன் )

மனசே சுகமா? (1)

முதலில் தற்போதைய மனநிலையில் உங்களுடைய மகிழ்ச்சியின் அளவீடு என்ன என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் (ஒன்றிலிருந்து பத்துக்குள்). இப்போது கண்களை மூடி உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை நினைவு கூறுங்கள். அப்போது என்ன உடை அணிந்திருந்தீர்கள், உடனிருந்தவர்கள் யார், எங்கு நடந்தது, என்னவிதமான சூழல் இருந்தது, என்ன விதமான வெப்ப நிலை இருந்தது போன்ற நுணுக்கமான விபரங்களையும் கூட நினைவில் கொண்டுவாருங்கள்.

( நிலா )

சர்தார்ஜி பில்கேட்ஸுக்கு எழுதிய கடிதம்

இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

( ரிஷிகுமார் )

Prabhu Deva - Profile

Choreography is not just about speed, complex steps and raunchy gyrations. The choreographer has to capture the mood so that the right emotion comes across - Prabhu Deva
( PS )

மனவெளி

"நல்ல கற்பனைம்மா உங்களுக்கு. எனக்கு சாமி மேல நம்பிக்கை போயிடுச்சு... அவ்வளவுதான். வேறொண்ணுமில்லை. சரியா?" தாயை சமாதானம் செய்யும் நோக்கில் மென்மையாய்ச் சொன்னாள் சுவாதி. "என்னது, அவ்வளவுதானா? சாமி மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்றது உனக்கு சின்ன விஷயமா போச்சா? இதான் இப்ப ஃபேஷனா? இதைத்தான் அமெரிக்காவில கத்துக்கிட்டியா?" காந்தியின் முகமெல்லாம் ரத்தம் பாய்ந்து கோபத்தால் சூடேறிக்கொண்டே வந்தது.

( நிலா )

Bead Works- Part - III

Step 1. : Cut 250 cm of black nylon thread insert needle in one end and make a knot on other end. Step 2. : Thread one Red bead, three green beads, 25 copper beads, three green beads, one red bead then one large glass beads and repeat this sequence for 5 more times.Step 3. : Take another 250 cm of thread and pass the needle through first red bead and thread the same sequence as three green beads, 25 copper beads, three green beads now pass the needle through red bead, large glass bead and another red bead.

( Abirami Michael )

நான் ரசித்த பாடல் (9)

பசுமை சூழ்ந்த ஒரு குக்கிராமத்தில் வளர்ந்த கள்ளம் கபடமற்ற மனதின் அடி ஆழத்திலிருந்து ஊற்றாய் சுரக்கும் சின்ன சின்ன ஆசைகள் அழகாக வெளிப்படுகின்றன. இப்பாடல் எத்தனையோ நுணுக்கங்களை உள்ளடக்கிக் கொண்ட பொழுதும் மிகவும் எளிமையாக இனிமையாக அமைந்து அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்கிறது.

( பிரேமா சுரேந்திரநாத் )

நானென்றும் நீயென்றும் (54)

"தம்பி, உங்கள் கோபம் எனக்குப் புரியுது. விவாகரத்து விவாகரத்து அப்படின்னு வாய் நிறைய பேசினாலும் இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க பூஜாவின் கணவன் தான். பூஜா உங்கள் மனைவி தான். அது என்னைக்கும் மாறக்கூடாது. அது என்னுடைய விருப்பம். ஆனால் என் விருப்பப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் நான் கொஞ்சம் வெளிப்படையாப் பேசிடறேன். தயவு செய்து தப்பா நினைக்காதீங்க" என்றவர் மூச்சு விடாமல் தொடர்ந்தார்.

( சுகந்தி )

His Name is Siva Shankar..(235)

The right step in one's spiritual quest is to imbibe determination of mind. Have the firm conviction that 'nothing can happen without God's Will. He is our Eternal Escort.' Then you will fear nothing. Understand that God exists; only God exists. When you are really convinced about that, you will get over your fears.

( N C Sangeethaa )

நீ நான் தாமிரபரணி (58)

"24 மணி நேரமும் அந்த ஆளைக் கண்காணிச்சுட்டிருங்க. சந்தேகம் வராத மாதிரி இருக்கணும். நான் சொல்ற வரைக்கும் யாரும் அவனை நெருங்கக்கூடாது. பேசவும் வேண்டாம். ஆனா எந்தக் காரணத்தை வச்சும் உங்க கண்காணிப்புக்குத் தப்பிச்சு அந்த நாய் போயிடக்கூடாது. எத்தனை ஆளை வேணும்னாலும் இதுக்கு ஏற்பாடு பண்ணிக்க. புரிஞ்சுதா?"

( என்.கணேசன் )

Unnale Unnale – Music Review

"Unnaale Unnaale" songs have all the qualities to become heartthrob of youth and have already hit the charts. All the songs have strong flavour of fresh and funloving youthfulness.

( Vignesh Ram )

புது வண்டி புது வண்டி

தன்னுடைய புத்தம் புதிய வண்டியை சுத்தமாகக் கழுவித் துடைத்து இரண்டு ஊதுபத்திகள் ஏற்றி, மல்லிகை மணத்துடன் ஸ்ப்ரேயர் தெளித்து, டேஷ் போர்டில் இருந்த விநாயகருக்குப் பூ வைத்து சவாரிக்க ஏதும் அழைப்பு வராததால் அன்றைய செய்தித்தாளைப் புரட்டிய வண்ணம் அமர்ந்திருந்தான் ராமய்யா.

( வை.கோபாலகிருஷ்ணன் )

சாபமே விமோச்சனம்!

ஏதெ‌ன் தோட்டத்து
எடுத்தெறியப்பட்ட‌ விலாயெலும்பே‍
நீ ச‌பிக்கப்ப‌ட்டிருப்ப‌தும்
வ‌ர‌த்தால்....

உன்னால் தான்
இருளை உடுத்திய என்
ஏகாந்த ய‌தார்த்த‌ங்க‌ள்
நிர்வாண‌மாகும்...

( அல்மதீன் )

சுவையான ரசவகைகள்

கர்நாடக மாநிலத்தில் புளியை நீர்க்கக் கரைத்துக் கொண்டு அதில் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து ஒரு பச்சை மிளகாயை நசுக்கிச் சேர்த்து உப்பும், வெல்லமும் சேர்த்துக் கொதிக்க வைக்காமல் சாதத்தில் கலந்து உண்பார்கள். இதை அடுப்பில் வைக்காத காரணத்தினால் 'பச்சி சாரு' என்பார்கள்.

( பிரேமா சுரேந்திரநாத் )


இராசி பலன்கள் 19-2-2007 முதல் 25-2-2007 வரை

கன்னிராசி அன்பர்களே புதன் நன்மை தரக்கூடிய கிரகம் ஆகும். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். கமிஜன், காண்டிராக்ட் தொழில் நன்றாக இருக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடும்.

( டாக்டர் ப. இசக்கி )

பேசிவிடு என்னோடு....

மொழியின் இனிமை
நீ பேசுகையில்தான்
புரிகிறது எனக்கு...........

இதழ்வழி பேசும்
வார்த்தைகளை விட
உன் விழிவழி கூறும்
கவிதைகள்
நன்றாய்ப் புரிகி‎ன்றன
எனக்கு...........

( கு.திவ்யபிரபா )

சினி வம்பு

ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பவர் விஜய். அவரது 'போக்கிரி' படம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளி நாடுகளிலும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. லண்டனில் முதல் 20 படங்களின் வரிசையில் போக்கிரியும் இடம் பெற்றிருக்கிறது.

( ஜன்பத் )

காவிய நாயகன் நேதாஜி (38)

சுபாஷின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை அங்கீகரித்தும், லண்டனில் நடக்க இருக்கும் வட்டமேஜை மகாநாட்டுக்கு காங்கிரஸின் பிரதிநிதியாக காந்திஜி கலந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தும் நேரு முன்மொழிந்த தீர்மானம் கராச்சி காங்கிரஸில் ஏற்றுக் கொள்ளப்பட்டது .மனமுடைந்து சுபாஷ் கல்கத்தா திரும்பினார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

பாட்டியின் கதைகள் (32) "நினைக்காதது"

படகு தள்ளும் பொழுது விரலில் இருந்த வைர மோதிரம் நழுவி ஏரிக்குள் விழுந்து தொலைந்து போனது. விலை உயர்ந்த மோதிரம் மட்டுமல்லாமல் திருமணத்திற்காகப் போட்டது. ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதனால் அந்தச் சம்பவம் அவருக்குக் கெட்ட சகுனமாகப் பட்டது. அதை அடிக்கடி நினைத்து மிகவும் கவலைப் படுவார். என்ன சமாதானம் சொல்லியும் வேதாசலத்தால் சமாதானப் படுத்த முடியவில்லை.
( P. நடராஜ‎ன் )

Monday, February 12, 2007

சாரல் 299

சாரல் : 299 பொழிந்தது : பிப்ரவரி 12, 2007

சினி வம்பு

போக்கிரி படம் பெற்ற வெற்றியில் பிரபுதேவா துள்ளிக் குதிக்கிறார். அவரது அடுத்த படம் 'சங்கர் தாதா ஜிந்தாபாத்'. இந்த தெலுங்குப் படத்தில் சிரஞ்சீவி தான் கதாநாயகன். அடுத்து பாலிவுட் பக்கமும் அடியெடுத்து வைக்கப்போகிறாராம் பிரபுதேவா!

( ஜன்பத் )

காஸ்மிக் கதிர்கள் அல்லது விண்கதிர்கள் (Cosmic Rays)

இந்தக் கதிர்களை எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளாவது கொண்டுவந்து, எதிர்கால ஆற்றல் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை இதுவரை அறிவியல் அறிஞர்களால் உருவாக்க இயலவில்லை. கட்டுப்பாட்டிற்குள் இக்கதிர்கள் கொண்டுவரப்பட்டால், மின் ஆற்றலுக்கும், எரிபொருளுக்கும் மாற்றாக அது அமையும் எனக் கருதப்படுகிறது.

( டாக்டர் இரா.விஜயராகவன் )

சின்னத்திரையைப் பார்க்க விடாதீர்கள்!

டெலிவிஷனில் 'ரேபிட் இமேஜ் சேஞ்ச்' எனப்படும் துரிதமாக சித்திரங்கள் மாறுபடுவது இந்த நிலையை மோசமாக்கும்! எதையும் ஒருமுகப்படுத்திப் பார்க்க முடியாத நிலை, அமைதியின்மை, எதற்கெடுத்தாலும் குழப்பமுறும் தன்மை ஆகியவை ஏற்பட்டு விடும். அமெரிக்காவில் ஒரு குழந்தை ஒரு ஆண்டில் சராசரியாக 900 மணி நேரம் பள்ளியிலும் 1023 மணி நேரம் டி.வி.பார்ப்பதிலும் தனது நேரத்தைச் செலவிடுகிறது.

( ச.நாகராஜன் )

காவிய நாயகன் நேதாஜி (37)

சுபாஷ் மனம் வெதும்பிப் பேசினார்: " காந்திஜியும் வைஸ்ராயும் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை ஏற்பதன் மூலம், காங்கிரஸ் எவ்வளவு தூரம் மிதவாதக் கட்சியாகி விட்டது என்பது தெளிவாகி விட்டது. இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலும் காந்திஜி தோல்வியைத் தழுவப்போகிறார் என்பது நிச்சயம்" என்று முழங்கினார் சுபாஷ்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

வெற்றிக்கான சிந்தனைகள் (2)

ரால்ப் வால்டோ எமர்ஸன் சொல்வதைக் கேளுங்கள்:
● அடிக்கடி சிரிப்பது, அதிகம் சிரிப்பது
● புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது
● குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது
● நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது

( ஜபர )

ஜபரவின் அரசியல் அலசல்

விருதுநகரில் பா.ம.க. தலைவர் ஒரு பொதுக்கூடத்தை முடித்துக்கொண்டு முத்து நகர் விரைவு வண்டியில் ஏறுமுன் ரயில் கிளம்பிவிட்டது. அது எப்படி ஒரு மத்திய அமைச்சரின் தந்தை, கூட்டணிக் கட்சித் தலைவர் ஏறுமுன் ரயில் கிளம்பலாம்? தொண்டர்கள் ஆவேசத்துடன் சங்கிலியைப் பிடித்திழுக்க அபராதம் தண்டனை விதிக்கப்படுகிறது. தொண்டர்களுக்கல்ல. ரயிலைக் கிளப்பிய அதிகாரிகளுக்கு!

( ஜபர )

யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

திருமணம் என்பது ஒரு ஆண் ஒரு பெண்ணோடு இணைந்து வாழ்வது மட்டுல்ல. அதற்கும் மேலான ஒரு பந்தம். வெற்றிகரமான திருமணம் என்பது ஒரு சுவையான சமையல் குறிப்பு போன்றது. அது சுவையாக இருக்க வேண்டுமென்றால் அன்பு, பொறுப்புணர்ச்சி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், அக்கறை, ஒற்றுமை இவ்வளவும் சரியான விகிதத்தில் சேர்ந்திருத்தல் அவசியம்.

( டி.எஸ்.பத்மநாபன் )

பறவை

வானத்தையும் பூமியையும் வட்டமிட்டு இணைக்கும் இயற்கையின் மகுடம்... நினைவுகளில் மட்டும் நீந்திய மனிதனை, வானத்திலும் நீந்த வைத்த வழிகாட்டி...

( கு.ப. அசோகன் )

பாட்டியின் கதைகள் (31) - "வீரன்"

ஊர் திரும்பியதும் நடந்த விபரங்களை ஆசிரியர் தலைமை ஆசிரியருக்குச் சொன்னார். இருவரின் உயிரைக் காப்பாற்றிய சிவாவின் வீரச்செயலை விவரித்து அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தினார். குடியரசு தினத்தன்று சிவாவை அவன் பெற்றோர்களோடு டில்லிக்கு வரவழைத்தார்கள். ஜனாதிபதி அவனுக்கு வீரப்பதக்கம் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

( P. நடராஜ‎ன் )

நானென்றும் நீயென்றும் (53)

அடி பட்ட சிங்கமாய் வீட்டுக்குள் வளைய வந்தான் அவினாஷ். அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் வீட்டிலிருந்த ஒவ்வொருவரையும் ஒரு விதமாய் உலுக்கி இருந்ததால் அவனை அணுகிப் பேசவே அனைவரும் தயங்கினர். தங்கள் தங்கள் அறைக்குள்ளேயே இருந்தனர். வேரறுந்த கொடியாய்த் துவண்டு கிடந்தார் கமலா.

( சுகந்தி )

வண்ணக் கோலங்கள்

அழகான வண்ண வண்ணக் கோலங்கள்

( G.Divya praba )

His Name is Siva Shankar..(234)

Any spontaneous expression is love.
Any spontaneous expression is poetry.
Love can become poetry if it is spontaneous.

( N C Sangeethaa )

நீ நான் தாமிரபரணி (57)

"ஐயா, எனக்கு உங்க மாதிரி பெரியவங்க கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாது. ஆனாலும் அடிமனசால உணர்றதை சொல்லாட்டா மனசுக்கு சாந்தி கிடைக்காது. அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்து அநாகரிகமாய் நடந்துகிட்டதுக்கு என்னை மன்னிக்கணும். எதையும் மனசுல வச்சுக்காம என் பொண்ணை ஏத்துகிட்ட உங்க மகனுக்கும், இந்த ஏழையோட குடிசைக்கு வந்து சம்பந்தம் பேசுன உங்களுக்கும் உங்க சம்சாரத்துக்கும் நான் ஏழு ஜென்மத்துக்கு செருப்பா இருந்தாலும் அது ஜாஸ்தியாகாது. ரொம்ப நன்றிங்க ஐயா...."

( என்.கணேசன் )

இராசி பலன்கள் 12-2-2007 முதல் 18-2-2007 வரை

கடகராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரக்கூடிய கிரகம் ஆகும்.குடுமபத்தில் அமைதி உண்டாகும். காய்கறி,உணவுப் பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள் லாபம் அடைவர். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதற்காக பணத்தைச் செலவு செய்வீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

( டாக்டர் ப. இசக்கி )

Beads Work II

Short Fringe
Step 1. : Thread a needle in the fabric.
Step 2. : Insert small glass beads in to the thread.
Step 3. : Finish it by adding a drop bead at the end.
Step 4. : Remember, the fringe should not be much longer or much Shorter.
(Maximum of 10 beads can be inserted to make short fringe).

( Abirami Michael )

மனு!

பெண்ணே! பார்த்துப் பார்த்து வீட்டைப் பராமரிக்கிறாய்.. ஏன்? எனது வார்த்தைகளைப் போட்டு உடைக்கிறாய்? ஒட்டடை படிந்து விடும் எனது கனவுக்குள் என்றாவது உன் பாதம் பதி!

( ராசி அழகப்ப‎ன் )

ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்

தீர்ப்பு என்ன வந்தாலும் நடக்கப்போவது என்னவோ ஒன்றுதான்! மழை கொட்டோ கொட்டு என்று கொட்டினாலொழிய கர்நாடகம் தண்ணீர் தரப்போவதில்லை. ஆணையத்தின் தீர்ப்பு கோர்ட்டின் தீர்ப்பைப் போன்றது என்று சொல்கிறார்கள். இது எப்படி நடைமுறைக்கு வரப்போகிறது என்று காண ஒவ்வொரு விவசாயியும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
( ஜ.ப.ர. )

ரயில் சிநேகம்

"சார் வண்டியை கொஞ்சம் நிறுத்தணும்" என்று ரஞ்சன் கூற, "அட ஏன் சார் விளையாடறீங்க, ஏற்கனவே எங்களுக்கு ஆபிஸுக்கு டயமாயிடுச்சு" என்றனர் சிலர். "இல்ல சார் டிராக்கில் வெடி குண்டு இருக்கு. அதனால் அவசியம் நிறுத்த வேண்டும்" என்று ரஞ்சன் கூற சிலர் சிரித்தனர். "இல்லங்க வெடி குண்டு வச்சதே எங்க சகாதான், நான் தான் அதற்கு காரணகர்த்தா" என்று சீரியஸாகச் சொல்ல அனைவரும் கலவரமானார்கள்

( லால்குடி வெ.நாராயணன் )

அம்மா

உங்கப்பன் அவளைக் கல்யாணம் பண்ணதே அவ பாடறதைக் கேட்டுத்தான். எதிர் வீட்டுக்குத்தானே குடிவந்தா. தினசரி சாதகம் பண்ணுவா. யாரோ நல்லாப் பாடறாளே.. யாருன்னு விசாரின்னான். உங்கம்மாவைப் பார்த்ததும் அப்படியே மயங்கிட்டான்"

( ரிஷபன் )

பொறுமை

அருகில் அமர்ந்திருந்த ஆசாமி, கோபியிடம் "சார்....வாழ்க்கையில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும். இது போல பொது இடங்களில் புலம்புவது தவறு. மருத்துவமனைக்கு வந்தால், அவர்களின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, நாமும் நாகரீகமாக நடந்து கொள்ளணும்" என்று உபதேசம் செய்ததும் கோபியின் கோபம்கட்டுக்கடங்காமல் வெடித்தது.

( வை.கோபாலகிருஷ்ணன் )

Wednesday, February 07, 2007

சாரல் 298

சாரல் : 298 பொழிந்தது : பிப்ரவரி 05, 2007

வெளிச்சமும் வேதனையும்

சுற்றுச்சூழல் சீர்கேட்டில், நிலம், நீர், காற்றுக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான வெளிச்சமும் சூழல் சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது. அதீத வெளிச்சம் தாவர, விலங்கினங்களைப் பாதிப்பதோடல்லாமல் மனிதர்களையும் வெகுவாகப் பாதிக்கவல்லது.

( ராஜூ சரவணன் )


சினி வம்பு

தசாவதாரம் கதை தன்னுடையது என்று சொல்லி அந்தப் படத்தை வெளியிடுவதற்கு ஒருவர் கோர்ட்டில் தடை வாங்கியிருப்பது தெரிந்த விஷயம், ஆனாலும் தசாவதாரத்தின் படப்பிடிப்பு விடாமல் தொடர்ந்து நடக்கிறது. வெளிப்புறக் காட்சிகளின் படப் பிடிப்புக்களின் போது ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்கக் கமல் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார், தன் சம்பந்தப்பட்ட காட்சி முடிந்ததும் யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தை விட்டுக் கம்பி நீட்டிவிடுவாராம்.

( ஜன்பத் )


நீ நான் தாமிரபரணி (56)

சந்திரனுக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. "ராஸ்கல்" என்று அவனை அடிக்கப் போன அவர் கையை காவ்யா பிடித்துக் கொண்டாள். "அவங்க வர்றப்ப இதல்லாம் வேண்டாம்". அமைதியாகச் சொன்னாலும் அவளுக்கு வயிற்றைக் கலக்கியது.

( என்.கணேசன் )


நானென்றும் நீயென்றும் (52)

கமலாவின் வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் ஒரு வினாடி நிலை குலைய வைத்தது. அவினாஷை இன்னொரு பெண் விரும்பினாளா? பூஜாவுக்கும் சாந்திக்கும் அது அதிர்ச்சியாய் இருந்தது. சந்தனாவிடம் அதற்குள் பெண் பேசிவிட்டாளா என்று அதிர்ந்து நின்றார் விஸ்வநாதன்.

( சுகந்தி )


காவிய நாயகன் நேதாஜி (36)

லூயி பிஷர் என்ற வரலாற்று ஆசிரியர் சொல்லுவார்: "1930க்குப் பிறகு, இந்தியர்கள், தங்களுக்கும் இந்த உலகத்துக்கும் தெரியாமலே, விடுதலை அடைந்து விட்டார்கள். அச்சம் என்ற உணர்வே அவர்களிடமிருந்து அடியோடு அகன்று விட்டது." இந்திய சுதந்திர வரலாற்றிலும், அதில் சுபாஷின் பஙகு பணியிலும் இனிமேல்தான் விறு விறுப்பான கட்டங்கள் வரப்போகின்றன. நாற்காலி நுனியில் அமர்ந்து காத்திருப்போம்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


செய்திகள் அலசல்

இந்திய அரசு கடந்த 1995 ஆண்டு முதல் சர்வதேச அளவில் காந்திஜியின் கொள்கைகளுக்காக சுயநலமின்றிப் பாடுபடுவர்களைத் தேர்வு செய்து காந்தி விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தென்னாப்ரிகாவைச் சேர்ந்த ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுடுவிற்கு காந்தி அமைதி விருதை வழங்கிப் பெருமை செய்திருக்கிறது.

( ... )


செவத்திமீன்

தத்தம் கணவன்மார்களை கடலுக்கு மீன்பிடிக்க அனுப்பிவிட்டு, அவர்களின் வருகைக்காக நெஞ்சில் ஏக்கங்களை சுமந்து கொண்டும் கண்களில் உயிரை ஏந்திக்கொண்டும், பசியால் அழும் கைக்குழந்தையின் வாயினை தங்கள் பசையற்ற மார்பகங்களில் திணித்துக் கொண்டும் காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான மீனவப் பெண்களில் இவளும் ஒருத்தி.

( திரு )


வெளிச்சம்

" பஜார்ல பெரிய கட்டிடம் விழுந்திருச்சாம். ஆளுங்க உள்ளே மாட்டிகிட்டாங்களாம்.." உண்மைதான். எட்டு மாடிக் கட்டிடம் விழுந்திருந்தது. அது எழுப்பிய தூசிப்புகையில் எதுவுமே புலப்படவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்களின் ஓலம் மனதைப் பிசைந்தது. கணேசனும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய முனைந்தான்.

( ரிஷபன் )


Bead Works

"Beads are simple decorative pieces with a hole through the centre. They may be of any shape and size and can be made from a variety of materials such as metal, glass, plastic, fiber, nylon, shells, woods, seeds and even semi precious stones. Beads fascinate both the discernment and the elegance."

( Abirami Michael )


பாட்டியின் கதைகள் (30) - பறக்காவெட்டி

அடுத்த நாள் பரந்தாமனின் பெயர் ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் வந்தது. 'சதிக் கும்பலை சாகசத்தோடு முறியடித்த ஜேம்ஸ் பாண்ட்' என்று கொட்டை எழுத்துக்களில் படத்துடன் தலைப்புச் செய்தியாகப் போட்டு ஒரு பிரபல செய்தித்தாள் விவரம் தந்திருந்தது. ஒரே நாளில் மிகவும் பிரபலமாகி விட்டான்.

( P. நடராஜன் )


Pachaikili Muthucharam - Music Review

Music is usually of two types. Good music and good selling music. Goutham Menon and Harris Jeyaraj team usually come out with excellent results when it comes to hip hop songs and picturization. Pachaikili muthucharam has 5 songs, all having the potential to hit the charts for sure.

( Vignesh Ram )


His Name is Siva Shankar..(233)

Learn to understand people, learn to evaluate them. Learn to distinguish the good from the bad.

( N C Sangeethaa )


அதிகாலை

சில்லென்ற பனிபடர
தேகம்
நனையும் சுகத்தில்
காலை
விடிந்தால்
நாளெல்லாம்
நாட்டியப் புத்துயிர்!

தெருக்களில்

புழுதி பறக்க
சுகாதாரம்
குடியமறும் அழகில்
கண்கள்
இளமையாகின்றன..

( ராசி அழகப்பன )


PRE-DAWN WALK!

In retrospect, when I think of the most valuable gifts my father bestowed on me about fifty five years ago when I was hardly five years old, it was his injecting in me the habit of getting up early in the morning and taking a brisk walk for an hour irrespective of the season! Yes, by morning, I mean, any time before five o’clock! At that age and stage, how foolish I was to feel very bad about that sort of compulsion!

( N V Subbaraman )


டபுள்ஸ்

சரசாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரும் போது தன் சின்னப் பெண் பாக்யாவை ஹால் பக்கம் வராமல் பார்த்துக்கணும் என்பதில் சுந்தரம் மிகவும் கவனமாக இருந்தார். ஆனால் அதை நேரிடையாக பாக்கியத்திடம் கூறினால் அவள் எதேனும் தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்ற பயமும் அவருக்கு இருந்தது.

( லால்குடி வெ. நாராயணன் )


நான் ரசித்த பாடல் (8)

மீராவின் பக்திப் பாடல்களுக்கென்றே இலக்கியத்தில் ஒரு தனியிடம் உண்டு. மீரா சந்தித்த இன்னல்கள் பல. கிருஷ்ணப்ரேமை என்ற படகின் துணையுடன் அவர் தன் ஆழ்ந்த உன்னதமான நம்பிக்கையின் துணையினாலேயே பெறற்கரிய பேற்றை அடைய முடிந்தது. கண் விழிகளை மூடி மனதை ஒருமுகப்படுத்தினால் நம்முள்ளும் இந்த இனிய குழலோசையைக் கேட்க இயலும்.

( பிரேமா சுரேந்திரநாத் )


Maniratnam

"I do not have enough words to explain the experience of working with someone like Mani" - Abishek Bachan

( Jamuna )


அரசியல் அலசல்

தங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது ஆளும் கட்சியின் சதி என்று சொல்வது எதிர்க்கட்சித் தலைவர்களின் வழக்கம். தே.மு.தி.. தலைவர் விஜய்காந்தும் தனது வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தபோது இதையேதான் சொன்னார். அப்போது மவுனமாக இருந்த ஜெயலலிதா இப்போது விஜய்காந்தின் மேலும் கலவரம் நடத்திய அவரது தொண்டர்கள் மீதும் கடுமையாக அர்ச்சித்திருக்கிறார்.

( ஜபர )


இறுக்கினால்... அவிழ்ந்து ள்ளும் முடிச்சுகள்!

என்ன தான் நீ ஓடி ஓடிப் போனாலும், நின்றுகொண்டேதான் இருக்கின்றன உன் சின்னச் சிரிப்பும், பெரிய புன்னகையும்!

( சிலம்பூர் யுகா )


இராசி பலன்கள் 05.01.2007 முதல் 11.02.2007 வரை

ரிஷப ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி உறவுகள் பலப்படும். புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். எந்தக் காரியத்தையும் எச்சரிக்கயுடன் செயதல் நல்லது.

( டாக்டர் . இசக்கி )


Powered by FeedJumbler.