Monday, December 25, 2006

சாரல் 292

சாரல் : 292 பொழிந்தது : டிசம்பர் 25, 2006


கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள்

இத்தாலியில் கிறிஸ்துமஸ் மரங்களுக்குப் பதிலாக மரப் பிரமிடுகளை பழங்களால் அலங்கரிக்கும் வழக்கமுள்ளது. நண்பர்களுக்குக் காயவைக்கப்பட்ட பருப்பு வகைகளை ஒரு பையில் போட்டுத் தருவதன் மூலம் எளிமையை நினைவுபடுத்துகிறார்கள்.

( நிலா )



ஜபரவின் அரசியல் அலசல்

பிரதமரே இந்த ஒப்பந்தத்தில் சில விஷயங்கள் கவலை தருகின்றன என்று சொல்கிறார். ஆனால் ஒப்பந்தத்தில் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், அமெரிக்க ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருக்கிறார் என்று வாதாடுவது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது.

( ஜபர )



யானைக்கும்

‘ஹோ’வென்று கூட்டத்தில் இரைச்சல். யானையின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. "பாட்டியை நம்ம வீட்டுக்கே வரச் சொல்லுடா. இனிமே எங்கேயும் போக வேணாம்" என்றேன் பாபுவிடம்.

( ரிஷபன் )



முளையில் கருகும் மொட்டுக்களே

இன்று 191 நாடுகளில் தன் சேவையை விஸ்தரிக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள ஐ.நா. சபையின் குழந்தைகளுக்கான இந்தப் பிரிவு, 125 நாடுகளில் தன் பணிமனைகளையும் நிறுவியிருப்பது இமாலய சாதனைதான்.

( ஏ.ஜே.ஞானேந்திரன் )



பரிசு

ஜேன் கனமான இதயத்தோடு சற்று நேரம் அந்த சிறுவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பிள்ளைக்கு இந்தப் பிஞ்சு வயதில் தாயே இல்லாமல் போகப் போகிறாள்; தங்கையின் மரணத்தைத் தாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை. இதைவிடத் தன் நிலை ஒன்றும் மோசமில்லை என்றே தோன்றியது.

( நிலா )



ஆறு நூறு கோடியில் ஒருத்தியம்மா நீ!

பிரச்சினைகளே இல்லாதவர்கள் உலகில் உண்டா? சிக்கலான இந்தக் கேள்விக்கு நார்மன் வின்செண்ட் பீல் ஒரு முறை பதில் அளித்தார். "அப்படிப் பிரச்சினையே இல்லாதவர்கள் ஏராளமானோரை எனக்குத் தெரியும்.

( ச.நாகராஜன் )



ஒரு வெள்ளாடு துள்ளுகிறது

நமது இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக முதல் டெஸ்டில் மகத்தான சாதனையைப் படைத்துள்ளது. இதைப் பாராட்டி ,'ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது' என்று தலைப்பு கொடுக்கத்தான் ஆசை

( டி.எஸ். பத்மநாபன் )



ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்

சாந்தி தனது பதக்கத்தை இழந்தாலும் நமது முதல்வர் மனிதாபிமான அடிப்படையில் அவருக்குப் பதினைந்து லட்சம் பணமுடிப்புக் கொடுத்தது பாராட்டுதலுக்குரியது. தமிழக அரசின் இந்தச் செயல் புண்பட்ட அவரது மனதிற்கு மருந்தாக இருந்திருக்கும்.

( ஜ.ப.ர. )



மீனாக மாறியவன் (2)

மறுநாள் ஊரில் புதுப் பிரச்னை கிளம்பியது. ஊரணிக்கரை முழுக்க நாற்றம் சகிக்க முடியவில்லை. ஊரணியில் கூட்டங் கூட்டமாய் மீன்கள் செத்து மிதந்தன. ஊரணித் தண்ணியில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு பிடித்தார்கள். யார் இதைச் செய்திருப்பார்கள்?

( எஸ். ஷங்கரநாராயணன் )



ரெண்டு - திரை விமர்சனம்

சுந்தர்.சி - மாதவன் ரெண்டு பேர் இணைந்து வெளி வந்திருக்கும் படம் - தயாரிப்பாளர் குஷ்பூ. படம் சூப்பராகக் கலக்கப்போகிறது என ரெட்டிப்பு எதிர்பார்ப்புடன் சென்றவர்களுக்குக் கிடைத்திருப்பது ஏமாற்றம்தான்.

( ஜன்பத் )



ராசி பலன்கள் 25-12-2006 முதல் 31-12-2006 வரை

ரிஷபராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராத கடன் கொடுத்த பொருட்கள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். மனைவியால் தன வரவு உண்டு.

( டாக்டர்.ப.இசக்கி )



சின்னச் சின்ன சினி செய்திகள்

சூப்பர்ஸ்டார் ரஜினி 'சிவாஜி 'படத்திற்காக மொட்டை போட்டது தெரிந்த விஷயம். அந்த மொட்டைக் காட்சிதான் சிவாஜி படத்தின் உச்சக்கட்டமாம். இன்னும் சில முக்கியமான காட்சிகள் பங்களூரில் இந்த மாதத்தில் எடுக்கப்பட்டதும் அமெரிக்காவில் பத்துநாள் ஷூட்டிங்- பிறகு திரையிடத் தயார்.

( ஜன்பத் )



நண்பனுக்கு…

என் மரத்துப்போன தழும்பொன்றில் அரூபமாய் ஒழுகும் மெல்லிய கவிதையாய் என் மௌன அழுகையின் துயர இசையாய்

( நட்சத்ரன் )



தொடருவோம் தோழமையை

எதை எதையோ பிதற்றிய உன் கடிதத்தின் இறுதி வரி சொன்னது என்னை- நீ நேசிப்பதாய்!

( சிலம்பூர் யுகா )



நான் ரசித்த பாடல் (2)

''மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலைய்யா அய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா உனது மனம் பெற மகிழ்ந்திடவே '

( பிரேமா சுரேந்திரநாத் )



காவிய நாயகன் நேதாஜி (30)

கல்கத்தா எர்ஸ்கின் ரோட்டில் இருந்த அவரது இல்லத்தில் இருந்தபடியே சுபாஷின் சிகிச்சை தொடர்ந்தது. நாட்டு மக்கள் அவர் உடல் நிலை பற்றிக் கலக்கமுற்றிருந்தார்கள். லயங்களில் விசேஷப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. அவர் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று இறைவன் சித்தம் இருந்ததாலும், “காலா, என் காலருகே வாடா, உன்னை மிதிக்கிறேன்” என்ற அவரது மன வலிமையாலும் சுபாஷ் பூரண குணம் அடைந்தார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )



நீ நான் தாமிரபரணி (50)

"ஜோக் அடிக்காதே. எனக்கு வயித்தைக் கலக்குது" என்றாள் காவ்யா. ராஜராஜனின் கம்பீரமான தோற்றத்துக்கு அவரை அவளது வீட்டு, அந்தக் குறுகிய களையிழந்த அறையில் இருப்பதாக எண்ணிப்பார்க்கக் கூட அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

( என்.கணேசன் )



நானென்றும் நீயென்றும் (46)

பூஜா ஒரு அழகான நந்தவனத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றிப் பல வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின. அவள் யாருக்காகவோ காத்திருக்கிறாள். அவன் கண்டிப்பாய் வந்து விடுவான் அவளுக்குத் தெரியும்.

( சுகந்தி )



His Name is Siva Shankar..(227)

If you are mentally strong, nothing can disturb you; nothing can pollute you. If you have decided to be strong, if you have decided to be a good person, you can protect yourself.

( N C Sangeethaa )



நாயகன் ஒரு நங்கை (22)

ப்ளஸ் டூ ரிஸல்ட் அன்று காலையில். சாக்லேட் வாங்கிக் கொண்டு அவள் வீட்டிற்க்குப் போனேன். அதிர்ச்சியடைந்தேன். ஒரு ஓரத்தில் ப்ரியா முட்டி போட்டுக்கொண்டு, காலிடுக்கில் முகத்தை வைத்துக்கொண்டிருந்தாள். நிவேதா கடுப்பாக இருந்தது தெரிந்தது. அவள் அம்மாவோ புது டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தாள்.

( நரேன் )

சாரல் 292

சாரல் : 292 பொழிந்தது : டிசம்பர் 25, 2006

கிறிஸ்துமஸ் - சுவாரஸ்ய சம்பிரதாயங்கள்

இத்தாலியில் கிறிஸ்துமஸ் மரங்களுக்குப் பதிலாக மரப் பிரமிடுகளை பழங்களால் அலங்கரிக்கும் வழக்கமுள்ளது. நண்பர்களுக்குக் காயவைக்கப்பட்ட பருப்பு வகைகளை ஒரு பையில் போட்டுத் தருவதன் மூலம் எளிமையை நினைவுபடுத்துகிறார்கள்.

( நிலா )


ஜபரவின் அரசியல் அலசல்

பிரதமரே இந்த ஒப்பந்தத்தில் சில விஷயங்கள் கவலை தருகின்றன என்று சொல்கிறார். ஆனால் ஒப்பந்தத்தில் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், அமெரிக்க ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருக்கிறார் என்று வாதாடுவது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது.

( ஜபர )


யானைக்கும்

ஹோவென்று கூட்டத்தில் இரைச்சல். யானையின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. "பாட்டியை நம்ம வீட்டுக்கே வரச் சொல்லுடா. இனிமே எங்கேயும் போக வேணாம்" என்றேன் பாபுவிடம்.

( ரிஷபன் )


முளையில் கருகும் மொட்டுக்களே

இன்று 191 நாடுகளில் தன் சேவையை விஸ்தரிக்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள ஐ.நா. சபையின் குழந்தைகளுக்கான இந்தப் பிரிவு, 125 நாடுகளில் தன் பணிமனைகளையும் நிறுவியிருப்பது இமாலய சாதனைதான்.

( ஏ.ஜே.ஞானேந்திரன் )


பரிசு

ஜேன் கனமான இதயத்தோடு சற்று நேரம் அந்த சிறுவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பிள்ளைக்கு இந்தப் பிஞ்சு வயதில் தாயே இல்லாமல் போகப் போகிறாள்; தங்கையின் மரணத்தைத் தாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை. இதைவிடத் தன் நிலை ஒன்றும் மோசமில்லை என்றே தோன்றியது.

( நிலா )


ஆறு நூறு கோடியில் ஒருத்தியம்மா நீ!

பிரச்சினைகளே இல்லாதவர்கள் உலகில் உண்டா? சிக்கலான இந்தக் கேள்விக்கு நார்மன் வின்செண்ட் பீல் ஒரு முறை பதில் அளித்தார். "அப்படிப் பிரச்சினையே இல்லாதவர்கள் ஏராளமானோரை எனக்குத் தெரியும்.

( ச.நாகராஜன் )


ஒரு வெள்ளாடு துள்ளுகிறது

நமது இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக முதல் டெஸ்டில் மகத்தான சாதனையைப் படைத்துள்ளது. இதைப் பாராட்டி ,'ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது' என்று தலைப்பு கொடுக்கத்தான் ஆசை

( டி.எஸ். பத்மநாபன் )


ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்

சாந்தி தனது பதக்கத்தை இழந்தாலும் நமது முதல்வர் மனிதாபிமான அடிப்படையில் அவருக்குப் பதினைந்து லட்சம் பணமுடிப்புக் கொடுத்தது பாராட்டுதலுக்குரியது. தமிழக அரசின் இந்தச் செயல் புண்பட்ட அவரது மனதிற்கு மருந்தாக இருந்திருக்கும்.

( ஜ.ப.ர. )


மீனாக மாறியவன் (2)

மறுநாள் ஊரில் புதுப் பிரச்னை கிளம்பியது. ஊரணிக்கரை முழுக்க நாற்றம் சகிக்க முடியவில்லை. ஊரணியில் கூட்டங் கூட்டமாய் மீன்கள் செத்து மிதந்தன. ஊரணித் தண்ணியில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு பிடித்தார்கள். யார் இதைச் செய்திருப்பார்கள்?

( எஸ். ஷங்கரநாராயணன் )


ரெண்டு - திரை விமர்சனம்

சுந்தர்.சி - மாதவன் ரெண்டு பேர் இணைந்து வெளி வந்திருக்கும் படம் - தயாரிப்பாளர் குஷ்பூ. படம் சூப்பராகக் கலக்கப்போகிறது என ரெட்டிப்பு எதிர்பார்ப்புடன் சென்றவர்களுக்குக் கிடைத்திருப்பது ஏமாற்றம்தான்.

( ஜன்பத் )


ராசிப் பலன்கள் 25-12-2006 முதல் 31-12-2006 வரை

ரிஷபராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராத கடன் கொடுத்த பொருட்கள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். மனைவியால் தன வரவு உண்டு.

( டாக்டர்.ப.இசக்கி )


சின்னச் சின்ன சினி செய்திகள்

சூப்பர்ஸ்டார் ரஜினி 'சிவாஜி 'படத்திற்காக மொட்டை போட்டது தெரிந்த விஷயம். அந்த மொட்டைக் காட்சிதான் சிவாஜி படத்தின் உச்சக்கட்டமாம். இன்னும் சில முக்கியமான காட்சிகள் பங்களூரில் இந்த மாதத்தில் எடுக்கப்பட்டதும் அமெரிக்காவில் பத்துநாள் ஷூட்டிங்- பிறகு திரையிடத் தயார்.

( ஜன்பத் )


நண்பனுக்கு

என் மரத்துப்போன தழும்பொன்றில் அரூபமாய் ஒழுகும் மெல்லிய கவிதையாய் என் மௌன அழுகையின் துயர இசையாய்

( நட்சத்ரன் )


தொடருவோம தோழமையை

எதை எதையோ பிதற்றிய உன் கடிதத்தின் இறுதி வரி சொன்னது என்னை- நீ நேசிப்பதாய்!

( சிலம்பூர் யுகா )


நான் ரசித்த பாடல் (2)

''மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலைய்யா அய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா உனது மனம் பெற மகிழ்ந்திடவே '

( பிரேமா சுரேந்திரநாத் )


காவிய நாயகன் நேதாஜி (30)

கல்கத்தா எர்ஸ்கின் ரோட்டில் இருந்த அவரது இல்லத்தில் இருந்தபடியே சுபாஷின் சிகிச்சை தொடர்ந்தது. நாட்டு மக்கள் அவர் உடல் நிலை பற்றிக் கலக்கமுற்றிருந்தார்கள். லயங்களில் விசேஷப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. அவர் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று இறைவன் சித்தம் இருந்ததாலும், “காலா, என் காலருகே வாடா, உன்னை மிதிக்கிறேன்என்ற அவரது மன வலிமையாலும் சுபாஷ் பூரண குணம் அடைந்தார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


நீ நான் தாமிரபரணி (50)

"ஜோக் அடிக்காதே. எனக்கு வயித்தைக் கலக்குது" என்றாள் காவ்யா. ராஜராஜனின் கம்பீரமான தோற்றத்துக்கு அவரை அவளது வீட்டு, அந்தக் குறுகிய களையிழந்த அறையில் இருப்பதாக எண்ணிப்பார்க்கக் கூட அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

( என்.கணேசன் )


ானென்றும் நீயென்றும் (46)

பூஜா ஒரு அழகான நந்தவனத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றிப் பல வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின. அவள் யாருக்காகவோ காத்திருக்கிறாள். அவன் கண்டிப்பாய் வந்து விடுவான் அவளுக்குத் தெரியும்.

( சுகந்தி )


His Name is Siva Shankar..(227)

If you are mentally strong, nothing can disturb you; nothing can pollute you. If you have decided to be strong, if you have decided to be a good person, you can protect yourself.

( N C Sangeethaa )


நாயகன் ஒரு நங்கை (22)

ப்ளஸ் டூ ரிஸல்ட் அன்று காலையில். சாக்லேட் வாங்கிக் கொண்டு அவள் வீட்டிற்க்குப் போனேன். அதிர்ச்சியடைந்தேன். ஒரு ஓரத்தில் ப்ரியா முட்டி போட்டுக்கொண்டு, காலிடுக்கில் முகத்தை வைத்துக்கொண்டிருந்தாள். நிவேதா கடுப்பாக இருந்தது தெரிந்தது. அவள் அம்மாவோ புது டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தாள்.

( நரேன் )

Tuesday, December 19, 2006

சாரல் 291

சாரல் : 291 பொழிந்தது : டிசம்பர் 18, 2006

முல்லைப் பெரியாறு - ஓர் உரத்த சிந்தனை

முல்லைப் பெரியாறு தீப்பற்றி எரிகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சற்று உரக்கச் சிந்திக்கலாமே? பென்னி க்விக் என்ற ஆங்கிலேய இஞ்சினீயர் நம் மக்களின் நலனுக்காக தம் மனைவியின் உடைமைகளையெல்லாம் விற்றுக் கட்டிய அணை இது.

( ஜ.ப.ர. )

ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்

டிஸ்கவரி ஓடத்தில் வானில் பறந்து செல்லும்போது தன்னுடன் பகவத் கீதை புத்தகம், ஒரு பிள்ளையார் படம் மற்றும் சமோசாக்கள் எடுத்துச் சென்றிருக்கிறாராம் அமெரிக்க இந்தியரான சுனிதா வில்லியம்ஸ்..

( ஜ.ப.ர. )

விண்மீனுக்குப் பெயரிடுங்கள்

உங்கள் நண்பருக்கு 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'கருத்து கந்தசாமி, 'லார்டு லபக் தாஸ்' இப்படி ஏதாவது செல்லப் பெயர் வைத்திருப்பீர்கள்தானே! அசத்துங்கள் அந்தப் பெயரை ஒரு விண்மீனுக்கிட்டு.

( நிலா )

உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (8)

அவர்கள் உடனே அந்த உணவு விடுதியின் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்தனர்.அப்போது அங்கே இருந்த 'தந்தூரி'ல் ( ஒரு வித மண் அடுப்பு) எதோ ஒன்று பெரிதாகக் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது ஒரு மனித உடல்.

( டி.எஸ் பத்மநாபன் )

"கவிதைகள் எழுத ஊடுருவிப் பார்க்கும் ஒரு மூன்றாவது பார்வை அவசியம்" - யுகபாரதி

திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களெழுதி வருகிறீர்கள். மெட்டுக்கேற்றவாறு பாடல்கள் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது உங்களுக்கு நெருடல் ஏற்படுமா?

( ஜம்புநாதன் )

ஜ.ப.ர.வின் அரசியல் அலசல்

கலாம் அவர்கள் தலைமை ஏற்றால் கோடிக்கணக்காண இளைஞர்கள் அவர் தடம் பற்றிக் கரம் கோர்த்து வரக் காத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் கைகளில் அடிமையாக உள்ள பாரதத்தின் தளைகளை விடுவிக்க இன்னொரு சுதந்திரம் தேவை.

( ஜ.ப.ர. )

சின்னச் சின்ன சினி செய்திகள்

பிரபுதேவாவின் டைரக்ஷனில் வளரும் போக்கிரி படத்தில் விஜய், நெப்போலியன் லடாய் முற்றிக் கொண்டே போகிறதாம். இதனால் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறாராம் அந்த ஆடல் டைரக்டர்.

( ஜன்பத் )

Rajasthan Chalo

The general impression about Rajasthan is that it is a desert state and quite unattractive for tourists. But the fact is that it is one of the most attractive tourist destinations. The State has no major rivers flowing through it and the rainfall is very scanty.

( T.S.Krishnamurthi )

நான் ரசித்த பாடல் (1)

கனக சுப்புரத்தினம் என்ற பாவேந்தர் பாரதிதாசன் தமிழின் பால் அருங்காதல் கொண்டவர் என்றால் சற்றும் மிகையில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் பல சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட அவர் ....

( பிரேமா சுரேந்திரநாத் )

நீ நான் தாமிரபரணி (49)

எதற்குமே அசராத ராஜராஜன் நிமிர்ந்து தன் மனைவியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஒரு கணம் எத்தனையோ உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன. மறுபடி அந்த சலனமே இல்லாத வெறுமை அவர் முகத்தை மூடியது. தனது அப்பாயின்மென்ட் புத்தகத்தை எடுத்தபடி "என்ன தேதி வருது?" என்றார்.

( என்.கணேசன் )

விடுதலை

உன்னை விடுதலை செய்யக்கோரி என் கனவுகளையும், காதலையும் பணயக்கைதியாய்ப் பிடித்து வைத்திருக்கும் காதலியே!

( சிலம்பூர் யுகா )

His Name is Siva Shankar..(226)

Prayer is a psychological self-introspection listing our problems and seeking God’s help to overcome them. When you have absolute faith that God knows your needs and grants them even before you are aware of your needs, there is no need to pray.

( N C Sangeethaa )

இறைவனைக் காண்போம்

ஆகமங்கள் எண்ணிலாதனவாகும். இவற்றைப் பெருமான் உமாதேவிக்கு உபதேசித்தார். இப்போதுள்ள ஆகமங்களின் எண்ணிக்கை இருபத்தெட்டாகும்.

( E.S. ஏகாம்பர குருக்கள் )

நானென்றும் நீயென்றும் (45)

மருந்து உள்ளே செல்லச் செல்ல அமைதியானாள் பூஜா. கட்டிலின் பாதுகாப்பிற்க்காக உயர்த்தி வைக்கப்பட்டிருந்த கம்பிச் சட்டத்தை இறக்கிய அவினாஷ் அப்படியே பூஜாவின் எதிர்த்தோளை அணைத்தபடி அவன் கன்னம் அவள் தலையில் அழுத்த தன் உடலை வளைத்து பூஜாவை ஓட்டிக் கொண்டு படுத்தான். மெல்ல அவன் உதடுகளை மென்மையாகப் பதித்தான்.

( சுகந்தி )

சந்தேகம்

விமானம் இந்திய மண்ணைத் தொட்டதும் தர்மராஜ் மனதில் ஒரு கிளர்ச்சி உண்டாயிற்று. சும்மாவா பின்னே, திருமணமானபின் வெளிநாடு சென்றவன் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மனைவி, அம்மா, அப்பாவை பார்க்கப் போகிறான்.

( லால்குடி வெ. நாராயணன் )

முதுமையில் தனிமை

என் கை தாங்கிய தாயின் கடைசித்துளிக் கண்ணீரில் உண்ர்ந்தேன் அவள் தனிமையின் வலியை...... நீ அங்கிருந்து வரும்போது எஞ்சியிருக்கும் என் சாம்பலில் ஏதேனும் உணர்வாயா?

( அறிவுச்செல்வி )

காவிய நாயகன் நேதாஜி (29)

நாடெங்கும் சுபாஷ் பற்றி பல வதந்திகள் பரவின. அவர் இறந்தே விட்டார்; அரசாங்கம் இந்தச் செய்தியை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். வங்காளத்தில் பெரும் கொந்தளிப்பு. அரசாங்கம் நிலைமையைப் புரிந்துகொண்டு வளைந்து கொடுத்தது.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

நாயகன் ஒரு நங்கை (21)

"என் அக்கா கலியாணம் நல்லா தாம் தூம்னு நடக்கணும். அதுனால அத்திம்பேர், நீங்க அன்னிக்கு சொன்னதெல்லாம் செல்லாது. பெரிய மண்டபம். நமக்குத் தெரிஞ்ச அத்தனை பேரையும் இன்வைட் பண்ணணும். அந்தாளை ஒரே ஒரு தடவை பார்த்துருந்தாலும் சரி. கூப்பிடணும், என்ன ஓகேவா?"

( நரேன் )

மீனாக மாறியவன்

வருஷா வருஷம் ஊர்ப் பொதுவில், அந்த மீன்களுக்குக் குத்தகை விடுவார்கள். இந்தப் பிள்ளையார் மேடைப்பக்கம்தான் ஊர் கூடி ஏலம் நடக்கும். அநேகமாக அதுவும் ஒரு பெளர்ணமி ராத்திரியாகத்தான் இருக்கும். ஆடும் மாடும் மீன்களும் காற்றும் நடமாடித் திரியும் அந்தப் பிரதேசம் வெறிச்சிட்டு விடும்.

( எஸ். ஷங்கரநாராயணன் )

தற்காலிக தவம்

நான் பூத்த பூ தான் ஆனாலும் காத்திருக்கிறேன் குளிர்சாதனத்தில் வைத்த ஆப்பிள் போலவே!

( சிலம்பூர் யுகா )

பிஞ்சுக் கத்தரிக்காய் ரசம்

கத்தரிக்காய்களை நன்றாகக் கழுவிக்கொண்டு காம்பை வெட்டி விட்டு நான்காகப் பிளந்து கொண்டு அரைத்த விழுதை தேவைக்கேற்ப காய்களில் திணித்துக் கொண்டு ஒரு கடாயில் நெய் விட்டு காய்களை கடுகைத் தாளித்துக் கொண்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

( பிரேமா சுரேந்திரநாத் )

Monday, December 11, 2006

சாரல் 290

சாரல் : 290 பொழியும் நாள் : டிசம்பர் 11, 2006

முரண்

வித்யா வாயாடி இல்லை. அதற்காக ஒரேயடியாக உம்மணாமூஞ்சியும் இல்லை. விஷயம் இருந்தால் மணிக்கணக்கிலும் பேசுவாள். ஒரு முறை ஏதோ 'மூட் அவுட்'. பார்க்கில் பேசாமலேயே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.

( ரிஷபன் )

அரசியல் அலசல்

1993ல் ஆரம்பித்த சிபுசோரென் வழக்கில் இப்போதுதான் தீர்ப்பு வந்து ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது- ஆனாலும் இது முடிவான தீர்ப்பல்ல - மேல் கோர்ட்டுகள் இருக்கின்றன. கடக்க வேண்டிய பாலங்கள் எத்தனையோ!

( ஜ.ப.ர. )

சின்னச் சின்ன சினி செய்திகள்

சிவாஜி படத்திற்காக ரஜினி மொட்டை போட்டிருக்கிறார் - இதுவே மொட்டை போட்டு நடிப்பது முதல் தடவையாம் - படம் வெற்றி அடைய வேண்டுமென்பதற்கு வேண்டுதலோ?

( ஜன்பத் )

சின்னக்குயில் சித்ராவின் இசை சாதனைப்பயணம்

தான் ஒரு முழு நேரப் பின்னணி பாடகியாவோம் என்று கனவிலும் தான் நினைக்கவில்லை என்றுரைக்கிறார் சித்ரா. பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது அவர் திரு.கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார்.

( பிரேமா சுரேந்திரநாத் )

கவிதைப்பூக்கள்

கையிரண்டும் எடுத்து கண்ணிரண்டும் பொத்தி விரலிடுக்கில் பார்த்துச் சொன்னாள் "பயமாயிருக்கு"

( சரண் )

வாரிசு

அரசருக்கு உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்க்கிறார்கள். அவரை குணப்படுத்தவே முடியவில்லை. அரசாங்க நடவடிக்கைகள் திகைத்துப் போயிருந்தன.

( எஸ். ஷங்கரநாராயணன் )

வேகம் விவேகம்

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...

( நிலா )

உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (7)

அழகான இரண்டு ஆண்குழந்தைகள் ஒரு பெண் . வாழ்க்கைப் படகு அமைதியாகச் சென்று கொண்டிருந்தவேளையில் அவர்கள் வாழ்வில் ஒரு புயல் வீசியது பிரேம் பகவன்தாஸ் அஹுஜா என்ற பெயரில்........

( டி.எஸ் பத்மநாபன் )

கருத்து

மைல்கற்களில் இருக்கும் ஆங்கில அல்லது இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிப்பதால் மட்டும் தமிழ் வளர்ந்துவிடாது. மாறாக, தமிழ்நாட்டிற்கு பல மாநிலங்களிலிலிருந்து பொருட்களை எடுத்துவரும் லாரி ஓட்டுநர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு செய்வதான அளவில்தான் அது முடியும்

( கு.சித்ரா )

நாயகன் ஒரு நங்கை (20)

சீதா நிச்சயதார்த்தம் எங்கு நடப்பது என்று பெரிய விவாதம் நடந்தது. சென்னப்பட்டணத்தின் ஒரு மூலையில் அவள் வீடு, மறு முனையில் ராகவன் வீடு. கடைசியில் எங்கள் வீட்டில் தான் நடந்தது.

( நரேன் )

PROFILE OF BRUCE LEE

Be formless... shapeless like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle; it becomes the bottle. You put it into a teapot; it becomes the teapot. Water can flow, and it can crash. Be water, my friend...

( Rishi )

பிரியமான பெற்றோரே....

என் வானத்தை நானே ஏற்படுத்திக்கொள்கிறேன். எதிர்வீட்டுக்காரனின் எட்டாவது மாடியை என் வானமென்று ஏற்கச்சொல்லாதீர்கள்!

( சிலம்பூர் யுகா )

காவிய நாயகன் நேதாஜி (28)

தன்மானம் மிக்க சுபாஷ் எப்படி ஏற்பார் இந்த நிபந்தனையை? தமது சகோதரர் சரத் சந்திர போஸுக்கு ரங்கூன் இன்சின் மத்திய சிறையிலிருந்து அவர் எழுதிய இரு கடிதங்களிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறோம்:

( டி.எஸ்.வேங்கட ரமணி )

கொள்ளை

தாலியில் உள்ள தங்கத்தை மட்டும் தயவு செய்து விட்டுக் கொடுக்கும் படியும், தனக்கோ தன் கணவருக்கோ எந்த விதமான காயமும் ஏற்படுத்தாமல் விட்டு விடும் படியும், மன்றாடிக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள் அந்தப் புது மணப்பெண்.

( வை. கோபாலகிருஷ்ண‎ன் )

இராஜஸ்தான் போலாம் வாறீகளா?

Enchanting Pictures of Rajasthan

( நிலா டீம் )

நீ நான் தாமிரபரணி (48)

அம்பலவாணன் தான் முதலில் பேசினார். "கிட்டத் தட்ட சேதுபதி காணாமல் போனது, தாமிராவின் அம்மா மனநிலை பாதிக்கப்பட்டது எல்லாம் ஒரே காலகட்டமாய் தான் தெரிகிறது அருண். . . ."

( என்.கணேசன் )

நானென்றும் நீயென்றும் (44)

"தலையில் அடிபட்டு மூளையில் இரத்தம் கட்டியிருப்பதால் பூஜா கோமாவில் இருக்கிறாள். இரத்தத்தை வெளியேற்ற மண்டையோட்டில் துளையிடும் அவசர அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

( சுகந்தி )

செய்திகள் அலசல்

நமது கிரிக்கெட் வீரர்கள்(!)தென் ஆப்பிரிக்காவில் சொதப்பி வருவது தெரிந்த விஷயம் அவர்கள் 2006ம் ஆண்டு இதுவரை சம்பாதித்த பணமும் எடுத்த ரன்கள்/விக்கெட்டுகளும்…

( ஜ.ப.ர. )

His Name is Siva Shankar..(225)

The adolescent age revolts against any form of disciplining, but we ensure that you are disciplined, so that your later years will not be wasted in repentance but will be full of happiness at your achievements.

( N C Sangeethaa )

அதீதாவுக்கு மடல் (19)

அதோ தொலைதூரத்தில் மிஞ்சி இருக்கின்றனவே, கொஞ்சம் காடுகளும் மலைகளும்! அடடா! அதோ அந்த மலைகளின்மீது நகரும் கருமேகங்கள்! அவற்றினூடாய்... அவற்றினூடாய்... நீராய் நீ! ஆம்! நீயேதான்! நீயிருக்க மரணமேதடி பெண்ணே எனக்கு!

( நட்சத்ரன் )

Tuesday, December 05, 2006

சாரல் 289

சாரல் : 289 பொழியும் நாள் : டிசம்பர் 4, 2006

ஹாரிஸ் ஜெயராஜுடன் ஓர் இனிய சந்திப்பு
இசையின் வெற்றி இயக்குனரைப் பொறுத்தே இருக்கிறது. நல்ல தரமான டேஸ்ட் உள்ள டைரக்டரால்தான் தரமான இசையுள்ள படங்களைக் கொடுக்க முடியும்- இசைஅமைப்பாளரால் நல்ல இசையைத்தான் தரமுடியும் . ஆனால் நல்ல படத்தைக் கொடுக்க முடியாது.
( ஜன்பத் )

ஹாப்பி க்ளப்
ஹாப்பி க்ளப்பில் சேர்ந்து மகிழ்ச்சியில் திளையுங்கள்!
( நிலா டீம் )

அரசியல் அலசல்

இந்த வாரம் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுமாறு முக்கிய நீதிமன்ற தீர்ப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனநாயகத்தின் ஆணிவேர் நீதிமன்றங்கள். எங்கேயும் சரியான நீதி கிடைக்காத நேரத்தில் சாமன்யன் நீதிமன்றத்தின் வாயிலைத்தான் தட்டுகிறான்.

( ஜ.ப.ர. )


கொட்டும் கோடிகள்

கொடுக்கின்ற தெய்வம் எப்படியும் கொடுக்கலாம். உங்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்துக் கொண்டும், அதிர்ஷ்டம் கொட்டலாம். இந்தப் பெண்ணுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, 77 மில்லியன் பவுண்ட்ஸ் தொகை, இந்தப் பெண்ணின் வீட்டுக் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியிருக்கின்றது.

( ஏ.ஜே.ஞானேந்திரன் )


உலகை ஆளும் ரொபாட்!

இன்றைய உலகின் சூடான விவாதப் பொருள் ரொபாட் தான்! ரொபாட் என்ற வார்த்தை இன்று அனைவராலும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு வார்த்தையாக ஆகி விட்டது. இந்த வார்த்தை தோன்றியது எப்படி? இதை உருவாக்கியவர் யார்?

( ச.நாகராஜன் )


மகிழ்ச்சியைத் தேடி...

உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது. - Buddha

( ஆ.கி.ராஜகோபாலன் )


கவிதைப் பூக்கள்

இருக்கும் போது... வெத்தல பாக்குக்கு பத்து ரூவா கேட்டா பத்துத் தினுசா பாத்தீங்க பத்துத் தினுசா வஞ்சீங்க

( சரண் )


சித்தீஸ்வரர்கள்

சித்தர்கள் சிவபூஜையின் மேன்மையும் சிவமந்திரத்தையும் உணர்ந்து கடைப்பிடிப்பவர்கள். சிவதீஷையை உரியமானவர்களுக்கு வழங்கி சித்தநெறியும் சிவநெறியும் தழைத்தோங்க வகை செய்பவர்கள். சித்தர்கள் விஞ்ஞானிகளுக்கும் மேலான மெய் ஞானிகள்.

( E.S.ஏகாம்பர குருக்கள் )


காய்கறி புதினா துவையல்

செய்முறை: 1. காரட்டை நன்றாகக் கழுவி துண்டுகளாக்கி சற்று வேக வைத்துக் கொள்ளவும். 2. சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சிகப்பு மிளகாயை சிவக்க வறுத்துக் கொள்ளவும்..

( பிரேமா சுரேந்திரநாத் )


நீ நான் தாமிரபரணி (47)

அம்பலவாணன் பெரும் வியப்புடன் அருணையும் தாமிராவையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் பல காலமாக பழகியவர்கள் போல பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ஏதோ ஈர்ப்பு சக்தி இருந்தது போல் அவருக்குப் பட்டது.

( என்.கணேசன் )


சின்னச் சின்ன சினி நியூஸ்

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வருவதாக இருந்த சிவாஜி மீண்டும் ஒரு மாதம் தாமதமாக வருமாம். ஸ்பெயினில் படமாக்கப் பட்ட ஒரு பாடல் காட்சியில் ரஜனிக்கு ஏழு கெட் அப்.

( ஜன்பத் )


இரகசிய தீர்க்கதரிசி வைரமுத்து

தமிழிடம் எதை எதையெல்லாம் எதிர்பார்த்தாயோ அதையெல்லாம் தமிழ் இன்று உன்னிடமே எதிர்பார்த்து நிற்கிறது!

( சிலம்பூர் யுகா )


நள்ளிரவில் கற்ற தொழில் ரகசியம்

"சம்பளம்னு எதுவும் தனியாகக் கிடையாது, ஐயா! எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி என்ற வித்யாசமும் கிடையாது. முதல் போட்டவர் முதலாளி தான். அவரையும் சேர்த்து நாங்கள் மொத்தம் ஆறு பேர் தான் இந்தக் கடையை நிர்வகித்து நடத்தி வருகிறோம்.

( வை. கோபாலகிருஷ்ண‎ன் )


இராசி பலன்கள் ( 04.12.2006 முதல் 10.12.2006 வரை )

ரிஷபம்:- ரிஷப ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். வீடுகளைத் திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படலாம். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நீர்வளம், நிலவளத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள்.

( டாக்டர் ப. இசக்கி )


செய்திகள் அலசல்

ஐக்கிய நாடுகள் சபையின் 2006 ஆண்டிற்கான மனித வள மேம்பாடு அறிக்கை மனித வளர்சிக் குறியீட்டில் - 177 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அட்டவணையில் இந்தியா பரிதாபகரமாக 126வது இடத்தைப் பெற்றிருக்கிறது

( ஜ.ப.ர. )


உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (6)

ஊடகங்களும் மக்களும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கத் துவங்கினால் தங்கள் பதவியைப் பயன்படுத்திப் பல கொலைகளையும் குற்றங்களையும் மறைக்கும் பெரிய மனிதர்கள் அந்தப் போர்வையிலிருந்து வெளிப்படுவார்கள். நீதி நிச்சயம் வெல்லும் என்ற தெம்பையும் நம்பிக்கையையும் ஊட்டுகிறது.

( டி.எஸ் பத்மநாபன் )


நானென்றும் நீயென்றும் (43)

தன் கை அசைப்பால் அனைவரது ஓட்டத்தையும் நிறுத்திய அவினாஷ். குனிந்து அவள் மூச்சு விடுவதை சோதித்தான். அவளது வலப்பக்கத்திலிருந்து மூச்சுக் காற்று வரும் அசைவுகள் எதுவுமே புலப்படவில்லை. மெதுவாய் விலாப்புறத்தில் கை வைத்து சோதித்தான்.

( சுகந்தி )


His Name is Siva Shankar..(224)

We have learnt many things from you as a student in Ramarajya campus. But after we left the campus, we have learnt about the outside world, but miss all the serenity and beautiful atmosphere and surroundings. Now we want to know how to get God’s blessings and God’s grace from the one and only form, You, Baba.

( N C Sangeethaa )


அறியாமை

வேகமாக வந்தவனுக்கு பிரதான சாலையில் இருந்த பூங்கா தென்பட்டது. மண்டை குடையும் போதெல்லாம் தென் கோடி சிமெண்ட் பெஞ்ச்தான் அவனுக்குத் தஞ்சம் கொடுக்கும். அவன் அந்த நிலையில் வரும் பொழுதெல்லாம் சொல்லி வைத்தாற்போல் காலியாகவே கிடக்கும்.

( P. நடராஜ‎ன் )


காவிய நாயகன் நேதாஜி (27)

"தொண்டுபட்டு வாடும் என்றன் தூய பெருநாட்டில் கொண்டு விட்டு அங்கு எனைக் கொன்றாலும் இன்புறுவேன். எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையில் இட்டாலும் தத்துபுனல் பாஞ்சாலம் தனில் வைத்தால் வாடுகிலேன்."

( டி.எஸ்.வேங்கட ரமணி )


நாயகன் ஒரு நங்கை (19)

நிவேதாவின் வெற்றுக்கையைப் பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும். தன் தங்கைக்கு மட்டும் மண் வளையல். அவள் அதைப்பற்றியெல்லாம் ஒரு நாளாவது என்னிடம் பேசவேண்டுமே, ஹும்...! அது தான் நிவேதா!

( நரேன் )


Tuesday, November 28, 2006

சாரல் 288

சாரல் : 288 பொழியும் நாள் : நவம்பர் 27, 2006

ஜோதிடம் கேளுங்கள்

ஜாதக ரீதியாக புத்தகம், எழுத்து போன்ற துறையை தாங்கள் ஜீவனத்திற்காக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் பொழுதுபோக்காகவும் பொதுச் சேவையாகவும் கருதி சிறு லாபத்தை மட்டுமே எதிர்நோக்கிச் செய்தால் இத்துறை தங்களுக்குச் சிறப்பாகவே அமையும்.

( குருஜி கார்த்திகா சித்தார்த் )

ஜென் குட்டிக் கதைகள்!

ஜென் புத்தமதப் பிரிவில் கோயன்கள் எனப்படும் உபதேசங்கள் ஏராளம் உள்ளன. கேள்வி - பதிலாக அமைந்திருக்கும் இந்த உபதேசங்களைப் புரிந்து கொள்வது எளிதல்ல. தவத்தில் ஆழ்ந்து உள்ளுணர்வைப் பெற்றவர்களால் மட்டுமே இதன் சரியான அர்த்தத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

( ச.நாகராஜன் )

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

"போ.. பாட்டி.. நீ பொய் சொல்றே.. அப்பா சொல்லியிருக்கார்.. கடல்ல தான் இவ்வளவு ஜலமும் இருந்தது. அப்புறம் வெய்யில்ல ஆவியாகி வானத்துக்குப் போயி இப்ப மழையாக் கொட்டறது.."

( ரிஷபன் )

சாதனை மேல் சாதனை போதுமாடா சாமி

முன்பொரு காலத்தில், தொடர்ந்து 160 வாரங்கள் டென்னிஸ் உலகின் தரப்படுத்தலில், முதலாம் இடத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தவர்தான் Jimmy Connors என்ற அமெரிக்க வீரர். ழுது அந்தச் சாதனையை உடைப்பாரா, Roger Federer என்பதுதான் இன்றைய கேள்வியாகி இருக்கின்றது.

( ஏ.ஜே.ஞானேந்திரன் )

அரசியல் அலசல்

தாம் சீனாவில் தூதுவராகப் பணி புரிந்தபோது எழுதி வைத்த டைரிக் குறிப்புகளை பீக்கிங் டைரி என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் நட்வர் சிங். ஈராக் டைரி என்று ஏதாவது எழுத உத்தேசம் உண்டா என்று வினவுகிறார் எடக்கு மடக்கு ஏகாம்பரம்.

( ஜ.ப.ர. )

நடிகன் (2)

''என்ன சொல்றேள்?'' என்னுமுன் கூட்டம் முடிந்து நடராஜன் கிழே இறங்கியிருந்தான். முட்டி மோதிக்கொண்டு கும்பல் காரைநோக்கிப் பாய்ந்தது. வெறிகொண்ட கூட்டம். நானொரு பக்கம், அவளொரு பக்கம் தள்ளப்பட்டோம். அவசரம். வேகம். என் காதில் கிரியின் அழுகை கேட்டது.
( எஸ். ஷங்கரநாராயணன் )

நானென்றும் நீயென்றும் (42)

வாசலை நெருங்க நெருங்க நெஞ்சம் கலங்கியது. வயிறு பிசைந்தது. பெரிதாய் தவறு நடந்திருக்கிறது. உள்ளிருந்து ஏதோ ஒன்று தள்ள தன்னைக்கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக ஓடினான். ஆம்புலன்ஸ் நிற்கும் முன்னால் பின்னாலேயே ஓடி கதவைத் திறந்து உள்ளே பாய்ந்தான். உள்ளே முகம் மூடப்பட்டு ஒரு சடலம்.

( சுகந்தி )

இருமுறை வேண்டாம்...ஒரேமுறை வா!

மனித உறவுகள்
மனதில் நீர்த்தபின்
உடல் உலகம் சுற்றுவதில்
அர்த்தமுமில்லை.
அன்புமில்லை!

( சிலம்பூர் யுகா )

காவிய நாயகன் நேதாஜி (26)

"ஸ்வாமி விவேகானந்தரின் நூல்களைப் படியுங்கள். அவருடைய கடிதங்களும் உரைகளும் இப்போது உங்களுக்கு மிகவும் தேவையானவை. "பாரத தேசமும் விவேகானந்தரும்" என்ற புத்தகத்தில் இவையெல்லாம் வருகின்றன

( டி.எஸ்.வேங்கட ரமணி )

நாயகன் ஒரு நங்கை (18)

கதவை அவள்தான் திறந்தாள். நான் உள்ளே புக வழிவிட்டு நின்றாள். எதுவும் பேசவில்லை. என் கையை கதவின் மேல் வைத்தேன். என் விரலைக் கண்டு, ஒரு முறை என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, உள்ளே சென்றாள்.

( நரேன் )

Interview with Violin Duo Sisters Dr. Lalitha and Nandini

Dr. M. LALITHA and M. NANDINI have been widely acclaimed as `VIOLIN VIRTUOSOS and QUEEN'S OF INDIAN MUSIC' of the present generation. They are applauded as the only violin duo sisters to perform the Indian Classical, World music, Fusion, and Western Classical music in ASIA.

( Annapurna Panchanathan )

செய்திகள் அலசல்

ஆசிரியரா ஆ! சிறியரா?: தமது மோட்டார் சைக்கிளைத் தொட்ட குற்றத்துக்காக சென்னையில் ஒரு தலைமை ஆசிரியர் ஒரு மாணவனை மிருகத்தனமாகத் தாக்கி, அவன் குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் செய்தி பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபடுகிறது.

( ஜ.ப.ர. )

உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (5)

மே மாதம் 1992ல் உர்நோசுக்கு மேலும் மூன்று கொலைகளுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டது. ஜூன் மாதத்தில் இன்னுமொரு கொலைக்காக மேலும் ஒரு மரண தண்டனை அவளது பட்டியலில் சேர்ந்தது. நவம்பரில் மற்ற ஒரு கொலைக்காக இன்னுமொரு மரணதண்டனை.

( டி.எஸ். பத்மநாபன் )

Profile of Marilyn Monroe

"I knew I belonged to the public and to the world, not because I was talented or even beautiful, but because I had never belonged to anything or anyone else."

( Aarthi Shankar )

இராசி பலன்கள் ( 27.112006 முதல் 3.12.2006 வரை )

மிதுனம்:- மிதுன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். இளையதளங்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினர்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள் நற்பலனடைவார்கள். தடைப்பட்ட திருமண காரியங்கள் நிறைவேறும். பெண்களால் ஆதாயம் உண்டு. தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கலாம்.

( டாக்டர் ப. இசக்கி )

His Name is Siva Shankar..(223)

We are subject to various emotions and we have set notions about the capabilities of our parents and their worth and worthlessness. Unless a person is really spiritual and he is able to or willing to see parents as God and Goddess this question will remain always.

( N C Sangeethaa )

சகுனம்

நான் அதிர்ச்சி ஆனேன். நல்ல வேளையாக இது என் மனைவி காதிலோ மாமியார் காதிலோ விழவில்லை. என்னைப்போல அவர்கள் இதை சுலபமாக எடுத்துக் கொள்ளாமல் சண்டை போட்டு மண்டையை உடைத்து இன்றைக்கே இன்னொரு சாவு ஏற்படுமாறு செய்து விடுவார்கள்.

( வை.கோபாலகிருஷ்ண‎ன் )

பூஜாரியை விரட்டிய பேய்

இந்த கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய் சந்தர்?" " பேய் பூதமுன்னு ஒண்ணும் கிடையாது. மனபயத்தினாலும் மற்றவர்கள் அதை தூண்டி விடுவதாலும் மடத்தனமாக பயப்பட வேண்டியதாகி விடுகிறது."

( P. நடராஜ‎ன் )

இளநீர்

கோடையில் எம்மை, நாடுவோர் நீங்கள். எங்கள் சேவை ! என்றுமே தேவை !! தென்னம் பிள்ளையை நடுவீர் ! தெவிட்டாத இன்பம் பெறுவீர் !!
( கோ. சங்கர் )

நீ நான் தாமிரபரணி (46)

"உன் மகள் ஒரு விஞ்ஞானியான மாதிரி, என் வாரிசு இருந்ததுன்னா அதுவும் ஏதாவது உருப்படியா வந்திருக்கும்னு நினைக்கிறியா தாரா. அது ஒரு ரௌடியா, தாதாவாய் வந்திருக்கும். அதனால நான் கல்யாணம் செய்துக்காததில் நாட்டுக்கு நல்லது தான் நடந்திருக்கு"

( என்.கணேசன் )


A few products @ nilashop

Vibrant Veena - Audio CD (GSA 221)

Tamizh Maalai - Sudha Raghunathan

Inspire Your Child, Inspire the World - VCD (AMVC 6034)

Y.Gee. Mahendra's Thanthramukhi

Sunday, November 26, 2006

crazy ideas - பரிசுப் போட்டி முடிவு

போட்டி பற்றி விபரம் அறிய இங்கே செல்லுங்கள்
போட்டியில் சொற்பமானவர்களே கலந்து கொண்டதற்குக் காரணம் ஐடியா பஞ்சமா அல்லது போட்டியே ரீச் ஆகவில்லையா என்று தெரியவில்லை. கலந்து கொண்டவர்களுக்கு நன்றி

சிந்தாநதி அதிகமான ஐடியாக்களை உதிர்த்திருந்தாலும் அவற்றில் சீரியஸ்னஸ் மிஸ்ஸிங்.

பரிசுக்குரிய crazy idea ரிஷியுடையது:
இன்னொரு ஐடியா.. தள முகவரியின் எழுத்துக்களை Shuffle செய்து ஸ்டிக்கரில் பிரிண்ட் செய்யவும். 'கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்' என்ற அடைமொழி கொடுத்து, பஸ் மற்றும் ரயில்களில் ஒட்டிவிடவும். போரடிக்கும் பயணிகள் இதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். எளிதாக 'ரீச்' ஆகும். ட்ரை பண்ணிப்பாருங்களேன்...

அவருக்கு நிலாஷாப் வழங்கும் பரிசு அனுப்பப்படும்
வாழ்த்துக்கள்

Monday, November 20, 2006

சாரல் 287

சாரல் : 287 பொழியும் நாள் : நவம்பர் 20, 2006

சிறந்த படைப்புக்கு பரிசு!!

ஒவ்வொரு மாதமும் நிலாச்சாரலில் இடம் பெறும் அனைத்து படைப்புகளும் ஆசிரியர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஒரு சிறந்த படைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றிய குறிப்பும் புகைப்படமும் நிலாச்சாரலில் வெளியாகும். அவருக்கு நிலாஷாப் வழங்கும் பரிசும் உண்டு. ஜூன் மாத சிறந்த படைப்பாளர் பற்றிய விபரம் இங்கே....

(நிலா டீம்)

நடிகன்

வாசலில் வண்டியொன்று அறிவித்துப் போனது. மன்மதன் நம் ஊருக்கு வந்து, மாலை ஏழுமணிக்குப் பேசப் போவதாக ஒலிபெருக்கி ஒலிசுருக்கிப் போனது. வரவிருக்கிற தேர்தலில் நாற்காலி சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள், என மகாஜனங்களிடம் அவன் கேட்கப் போகிறான்.

(எஸ். ஷங்கரநாராயணன்)


சிரித்து வாழ வேண்டும்
நீதிபதி (குற்றவாளியிடம்): பயங்கரமான ஆயுதங்களைக் கோர்ட்டுக்குள்ள கொண்டுவரக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?
குற்றவாளி: அப்போ நீதிபதி ஐயா மட்டும் கையிலே சுத்தி வச்சுக்கலாமா?

(ஜன்பத்)


பிரமிப்பூட்டும் பிரமிட்டுகள்

உக்ரைன் நாட்டில், Luganshchina என்னும் இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரமிட் உலக சரித்திரம் பற்றிய இதுவரையிலான கணிப்பில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தப் பிரமிட்டின் மேற்பகுதி மாத்திரமே இப்பொழுது தெரிகின்றது. இதைச் சுற்றியுள்ள மண்ணை முழுமையாக அகற்றி, முழுமையாக வெளிப்படுத்த, இன்னும் ஒரு தசாப்த காலம் எடுக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

(ஏ.ஜே.ஞானேந்திரன்)


சொல்லுவதறியேன் வாழி! தோற்றிய தோற்றம் போற்றி!!

வேகமும் பரபரப்பம் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு ஆட்டிப்படைக்கும் நவீன உலகிற்கு ஏற்றதான அவதாரம் ஒன்று தேவை என்று இறைவனே திருவுள்ளம் கொண்டு சத்யசாயி பாபாவாக புட்டபர்த்தியில் அவதாரம் எடுத்த அதிசய அற்புதமான காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது ஆச்சரியகரமான உண்மை!

(ச.நாகராஜன்)


நானென்றும் நீயென்றும் (41)

துச்சாதனன் போல ட்ராவிஸ் பூஜாவை வீதியில் இழுத்துச் சென்றான். வீதியில் இருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் இருவரின் மேலும் இருந்தது. ஒருசிலர் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தனர். சிலர் பயத்துடன் விலகி வேகமாக நடந்தனர்.

(சுகந்தி)


அரசியல் அலசல்

பீகாரின் கிராமப்புற வளர்ச்சி அமைச்சருக்கு ஒரு பெரிய மாளிகையும் பரந்த விசாலமான நிலபுல‎ன்களும் இருக்கின்றன. ஆனால் அவர் பெயர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள மக்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இதுமாதிரியான வறுமைக்கோட்டின் கீழே வர யார்தான் ஆசைப்படார்?

(ஜ.ப.ர.)


நானுமொரு பறவை...

நிறமொன்றே என்றாலும்
காகம் பெறுவதில்லை
கானக் குயிலின் மவுசு.

(லோ. கார்த்திகேசன்)


A few products @Nilashop

Ebook : Aattip Padaiththa Adolf Hitler

Carnatic : Sri Muthuswamy Dikshitar`s Navagraha Kritis - Audio CD


பெண்ணினம்

பொறுத்துக்கொள் என்பீர்கள்
என்றெண்ணி சரியென்று
தலையசைக்க தயாராகிறேன்
அவன் மலடன்
என்பதை அறிந்த நான்.

(நிலாரசிகன்)


ஏன் சாப்பிடனும்?

காய்கனிகள், கீரைகளில் இல்லாத சத்து எதிலும் இல்லை. இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.

(ஆர்.கே.தெரஸா)


உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (4)

இந்தக் கொலைக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்த டிக் ஹம்ப்ரீஸ் என்பவரைக் காணவில்லை என்று செப்டம்பர் மாதம் 11ம் தேதி 1990ல் ஒரு புகார் வந்தது. அவரது உடல் அடுத்தநாள் மாலை மரியான் கவுன்டி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.அவரும் .22 பிஸ்டலால் ஏழு முறை சுடப்பட்டிருந்தார்.

(டி.எஸ் பத்மநாபன்)


நட்சத்திர விடுதியின் இமை மூடாத இரவு

சந்தோஷம் சந்தையில் விற்கும் சமாச்சாரமில்லை என்று புரிவதற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் இவர்களுக்கு...?

(சிலம்பூர் யுகா)


Profile of Daniel Craig

Profile of new James Bond

(PS)


விரோதம்

உனக்கும் எனக்கும் இடையிலான இந்த ஆழ்ந்த விரோதம் நீயோ நானோ உயிருள்ளவரை மட்டும்

(சரண்)


இராசி பலன்கள் (20.112006 முதல் 26.11.2006 வரை)

விருச்சிகராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. கலைத்துறையினருக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். காதல் விபகாரங்களில் எச்சரிக்கை தேவை. யாத்திரைகளில் நற்பலன் அடையலாம்.
(டாக்டர் ப. இசக்கி )


His Name is Siva Shankar..(222)

The Ultimate is One. We are all its children. Siva Purana says, ‘He is One, He is Many’. ‘He does not have one form, one name, we eulogize Him with several thousand names’.

(N C Sangeethaa )


தை வெள்ளிக்கிழமை
"இன்று தை வெள்ளிக்கிழமை டாக்டர். அம்பாள் போல அழகான பெண் குழந்தை பிறந்திருக்கு. மேலும் 'அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது' ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்க அஞ்சாம் பெண்ணைக் கொடுக்க மனசு வரலை, டாக்டர்"

(வை.கோபாலகிருஷ்ண‎ன்)


நீ நான் தாமிரபரணி (45)

அன்றிரவு அருணுக்கு உறக்கம் வர நிறைய நேரமாயிற்று. அம்மாவின் அழுகையும், அவளை வெறுக்கக் கூடாதென்று அவள் சத்தியம் வாங்கிக் கொண்டதும் அவனை நிறையவே யோசிக்க வைத்தது. மறுநாள் காலையும் அவன் பெற்றோர் பற்றிய எண்ணங்களே அவன் மனதைக் குழப்பின.

(என்.கணேசன்)


செய்திகள் அலசல்

புதுச்சேரியில் ஆறாவது படிக்கும் தனதிருகுமாரன் என்ற பத்து வயதுச் சிறுவன் 36 கிலோமீட்டர் பின் பக்கமாக நடந்துசென்று கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு சாதனையை செய்திருக்கிறான். நடக்கும்போது எடுத்துக்கொள்ளும் சின்னச் சின்ன இடைவேளைகளின் போது - விவேகானந்தர், அம்பேத்கர், எய்ட்ஸ், தேசிய ஒற்றுமை இவைகள் பற்றிப் பேசவும் செய்கிறான்.

(ஜ.ப.ர.)


பாட்டியின் கதைகள் (27)

"இப்போ புரியுது பாட்டி. திருடிய பின் உள்ளுக்குள் பயம் வந்து விடுகிறது. அந்த பயத்தைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக திருடர்களைக் கண்டுபிடித்து விட முடியும்."

(P. நடராஜ‎ன்)


நாயகன் ஒரு நங்கை (17)

எனக்குப் பொறுக்கவில்லை. என் அம்மாவிடம் சென்று அவள் காலடியில் அமர்ந்து கொண்டு, "அம்மா, என்னம்மா சொன்னா?" "டேய்.. உனக்காகத்தான் வெய்ட் பண்றா இவ.. வெளிய போணுமாம்... கூட்டிண்டு போயேன்... காசு கொடுத்தா போதுமான்னு கேக்கறா!"

(நரேன்)


காவிய நாயகன் நேதாஜி (25)

1924 அக்டோபர் 25ம் தேதி பொழுது விடிவதற்கு முன்னால் போலீஸ் அதிகாரிகள் சுபாஷின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். இதை எதிர்பார்த்திருந்தவர் போல சுபாஷ் புன்முறுவலுடன் போலீஸ் வண்டியில் ஏறிக் கொண்டார்.

(டி.எஸ்.வேங்கட ரமணி)


A few products @Nilashop

Relax : Music for Meditation - Audio CD

Bharathnatya : Bharatanatyam Invocatory Items Twin DVD Pack

Thursday, November 16, 2006

crazy ideas -பரிசுப் போட்டி

புதிதாக ஒரு இணையதளம் ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதனைப் பிரபலப் படுத்த விரும்புகிறீர்கள். பட்ஜெட் இல்லை... அல்லது மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் நீங்கள்தான் ஐடியா கிங்/குயின் ஆச்சே! அதனால் திரும்பிப் பார்க்க வைக்கிற சில crazy உத்திகளைக் கையாள்வீர்கிறீர்கள். உதாரணத்துக்கு பீச்சில் உடலெல்லாம் வண்ணம் பூசிக் கொண்டு நெற்றியில் உங்கள் இணையதள முகவரியோடு சிலை போல் ஒருவரை அமர வைக்கிறீர்கள்

இது போன்ற கலக்கலான ஐடிக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...
நீங்கள் வலைபதிவாளர் இல்லை எனில் மின்னஞ்சல் மூலமாக ஐடியாவை அனுப்புங்கள் team at nilacharal dot com

சிறந்த crazy ideaவுக்கு நிலாஷாப் வழங்கும் crazyயான பரிசு உண்டு

முடிவு தேதி: நவம்பர் 24

Monday, November 13, 2006

சாரல் : 286

சாரல் : 286 பொழியும் நாள் : நவம்பர் 13, 2006

காணாமல் போகும் கடல் வளம்

மனித நாகரீகத்தில் முதன்முதல் தொழிலாக ஆரம்பித்தது என்னவோ மீன்பிடித் தொழில்தான். மீனை உணவாக உண்ணும் கலாச்சாரம் மனித நாகரீத்தின் தொன்மையைப் போன்று பழமை வாய்ந்ததாகும்.

ராஜூ சரவணன்

****

ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்
இந்த வார பரபரப்பான செய்திகளில் ஆஸ்திரேலியா ஐ.சி.சி கோப்பையை வென்றதும் ஒன்று- ஐ. சி. சி கோப்பையை வென்றதைவிட அந்தக் கோப்பையை சரத் பவாரிடமிருந்து பிடுங்குவதுபோல் நடந்து கொண்ட அவர்களின் ஆணவம்...

ஜ.ப.ர.

****

ஞானம்
"ரகு! நான் சொல்றதக் கேளுப்பா....." "அப்பா! கண்டிப்பா என்னால முடியாது. நீங்க என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க"

புதியவன்

****

மரணமே உனக்கொரு மரணமா?
ஈராக் நாட்டின் மாஜி அதிபராகவும், கொடுங்கோல் ஆட்சியாளருமாக இருந்தவரான சதாம் ஹுசேயினுக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டிருப்பது இன்று உலகெங்கும் பரபரப்பான ஒரு செய்தியாகி இருக்கின்றது.

ஏ.ஜே. ஞானேந்திரன்

****

கவிதைப்பூக்கள்
இரு கோடு தத்துவமாய் வாழ்க்கை
எப்போதும் என் கோட்டைப் பெரிதாக்கும் முயற்சியில்
முடியாத பட்சங்களில்
உன் கோட்டைச் சிறிதாக்கி....

சரண்

****

உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (3)

ஐலீன் கரோல் உர்நோஸ்-- ஏழு ஆண்களை இரக்கமின்றிக் கொன்று குவித்தவள்- இந்தக் கொலைகளின் பின்னணி என்ன? அவளது உடலிலே ரத்தத்துடன் ஊறிப்போனக் கொலை வெறியா அல்லது சிறுவயதிலிருந்தே மனதாலும் உடலாலும் ஆண் வர்க்கத்தால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட பழி உணர்ச்சியா?

டி.எஸ் பத்மநாபன்

****

இராசி பலன்கள் (13.11.2006 முதல் 19.11.2006 வரை)

கடகராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து போகும். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும். கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவோர் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

டாக்டர் ப. இசக்கி

****

தர்மபுரி - 'கல கல' விமர்சனம்

அஜீத்துக்கு திருப்பதி படம் கொடுத்ததன் மூலம் அவரை நான்கு படிகள் கீழிறக்கிய டைரக்டர் பேரரசு தனது 'ஹிட்' லிஸ்டில் அடுத்து யார் என யோசித்தபோது சிக்கியவர்தான் நம்ம கேப்டன் விஜயகாந்த். அதன் விளைவுதான் உலகத் தமிழ் வரலாற்றில் இதுவரை காணாத படம் 'தர்மபுரி'.

ரிஷிகுமார்

****

தகப்பன் சாமி

சேலையூர், தோட்டங்களும் வயல்வெளிகளும் நிறைந்த அழகான ஒரு ஊர். அங்கு மா, தென்னை, பலா போன்ற காய் கனி தரும் மரங்கள் கொண்ட தோப்புகள் நிறைய உண்டு. ஆண்டு முழுவதும் காய்களும், பழங்களும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

P. நடராஜ‎ன்

****

AN INTERVIEW WITH VIDYA SHANKAR, AN ADOPTION EDUCATOR

Ms. Vidya Shankar, a chemical engineer by qualification, is the chair person of Relief foundation dedicated to child welfare. A face to face with her by Jambu on the various issues relating to adoption, adoptive parents and adopted children..

Jambunathan

****

அழகும் நடிப்பும் இணைந்த ஈ.வி. சரோஜா

பழம் பெரும் நாட்டிய நடிகையான ஈ.வி.சரோஜா கடந்த மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலமானர். தொலைக் காட்சி ஒன்றில் அவர் படம் ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவர் அப்பல்லோ மருத்துவ மனையில்...

ஜன்பத்

****

நாயகன் ஒரு நங்கை (16)

"என்ன மிஸ்டர் சிவா, அதுக்குள்ள மறந்துட்டீங்க!! அன்னைக்கு ஒரு நாள் ஃபோன் பண்ணி உங்களை எங்க வீட்டுக்கு காலைல வரச்சொன்னேனே!! ஞாபகம் இல்லை? நான் ராகவன் சிஸ்டர். காலேஜ்ல கூட உங்களை ஒரு தரவை பார்த்துருக்கேன்னு நினைக்கறேன்"

நரேன்

****

காவிய நாயகன் நேதாஜி (24)

சுயராஜ்யக் கட்சி உதயமும் சட்டமன்றப் பிரவேசமும்
1922 மார்ச் மாதம் அஹமதாபாதில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டுக்கு சித்தரஞ்சன தாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்

டி.எஸ்.வேங்கட ரமணி

****

His Name is Siva Shankar..(221)

Baba, we always felt amazed by Your selfless love to all. We all have the veils of prejudices disrupting our vision, how do we remove that and be a true follower to you?

N C Sangeethaa

****

அதீதாவுக்கு.. மடல் - 18

தாகம் அதிதாகம்
கொடுந்தாகம் அதிகொடுந் தாகம்
பெருந்தாகம் அதிபெரும் தாகம்
நீ வேண்டும் நீவேண்டும் நீராய்.

நட்சத்ரன்

****

நீ நான் தாமிரபரணி (44)

திகைத்து நின்ற ஈஸ்வரனைப் புரிந்து கொண்டவள் போல தாமிரா பொறுமையாகச் சொன்னாள். "மாமா, அம்மா உங்களையும் விட அதிகமாய் அப்பாவை நேசிச்சதை உங்களால் இன்னமும் சகிச்சுக்க முடியலை.

என்.கணேசன்

****

ஜபரவின் அரசியல் அலசல்

தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்து அண்மையில் இயற்கை எய்தியுள்ளார். அவரது பிற்கால அரசியல் எப்படி வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும். அறுபதுகளில் தமிழக இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் அவர்

ஜ.ப.ர.

****

எதற்கு சிபாரிசு

உன்னை உரசிச்செல்லும் தென்றல்
விட்டுப் பிரிந்ததும்
செத்துத்தொலையும் மழைத்துளி

சிலம்பூர் யுகா

****

குறள் கூறும் கதைகள் (52)

குளித்து உடை மாற்றிக் கொண்டு டி.வி.க்கு முன்னால் வந்து உட்கார்ந்த மகள் சித்திராவைப் பார்த்த அம்மா செங்கமலம் பெருமூச்செறிந்து விட்டு, " என்னம்மா சித்ரா, சாப்பிடாம அப்பிடியே உட்கார்ந்திட்டே ? " என்றாள். .

சக்தி சக்திதாசன்

****

நானென்றும் நீயென்றும் (40)

நிமிட நேரம் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூஜா. என்ன செய்வது? மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். நேராக வீட்டிற்குச் செல்வது தான் சரி. மற்றதைப் பிறகு யோசிக்கலாம் என்று நினைத்தபடி எழுந்தவளை மறைத்தபடி வஞ்சகப் புன்னகையுடன் நின்றிருந்தான் ட்ராவிஸ்.

சுகந்தி

****

Monday, November 06, 2006

சாரல் 285

சாரல் 285: பொழியும் நாள் : 6 நவம்பர் 2006


வருஷத்துக்கு ஒருமுறையாவது குளிங்க..!! அமெரிக்காவின் சில வினோதமான சட்டங்கள் இங்கே…

*****

Allah Rakha Rahman- Find out his favourites, passion, past time and background

*****
அலைந்த களைப்பில்என் கட்டிலில் படுத்துஉறங்கிக் கொண்டிருந்தனஉன் நினைவுகள்!

*****
திரை உலகின் முடிசூடா மன்னர் தியாகராஜ பாகவதரின் வரலாற்றுக் குறிப்பும் சில நினைவுத் தடங்களும்

*****
வித்தியாசமான கதை, அருமையான நடிப்பு, பளீச் ஒளிப்பதிவு. 'ஓ' போடலாம் 'ஈ' க்கு – திரை விமர்சனம்

*****
"இது நம் காலம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் காலம், எங்கள் காலம் என்று அல்ல"

*****
முடியாது என்பதுவும் உண்டோ? வெற்றிக்கான இந்த ஆறு படிகளைப் பின்பற்றினால்! முயன்று பாருங்கள்…

*****

நில்லாது ஊறிப் பெருகும் உன் அழகுக் கிணற்றின் இருப்பிடத்தை அறிவி - நான் தாகம் தீர்க்க

*****
கேள்வியின் நாயகியாய், காலங்களில் வசந்தமாய் வாழ்ந்து மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு அஞ்சலி…
*****
கவிதைகள் :

நினைக்கத் தெரிந்த மனமே...
முரண்பாடு

கதைகள் :

நீ நான் தாமிரபரணி
மாமியார்
நாயகன் ஒரு நங்கை
நானென்றும் நீயென்றும்
அம்மாவின் உயில்
குறள் கூறும் கதை

இன்னும் :

குற்றம்
காவிய நாயகன்
ராசிபலன்
Halloween
His Name is Shivasankar
கடவுள்களின் தீவு
Madisar in easy steps

A few New Products @ nilashop:

Vedic Mantras to improve education and memory (GSA 124)
Radha Kalyanam - The Divine Wedding (AMVC005)
Power of Ancient Sanskrit Mantras - Audio CD (GSA 306)
Sarva Gayatri Mantras & Mrytunjaya Stotras - Audio CD (GSA 064)


Thursday, November 02, 2006

சாரல் 284

சாரல் 284: பொழியும் நாள் : 30 அக்டோபர் 2006

அச்சுறுத்தும் உலக ஜனத்தொகை அதிகரிப்பு - தாங்குவாளா பூமாதேவி? புள்ளி விவரங்களுடன் ஓர் ஆய்வு

*****

கிழவியின் பொழப்பையும் இளசுகளின் மனசையும் கெடுத்த இளம் பூக்காரி. முடிவு என்ன?

*****

இந்திய ரயில்வே பற்றிய சில சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா....

*****

பலமான எதிர்க்கட்சியாக உருவாகும் தேமுதிக - பொறுக்க முடியாமல் வெடித்த ஜெயலலிதா

*****

260 பேரைக் கொலை செய்த மருத்துவர் - உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள்

*****

போலீஸிடமே மாமூல் வாங்கும் போலீஸ், தனியாரிடம் அரசு இலவசம் பெறலாமா? இந்த வார அலசல்

*****

கற்பனைக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாத அடிமுட்டாள் - பாட்டி சொன்ன கதை

*****

பசியே மரணமாய்.... ஒரு எத்தியோப்பியனின் இரங்கல் கவிதை

*****

கேள்விகள் கேட்பது எப்படி? சரியான கேள்விகளைக் கேட்கத் தெரிந்தால் வெற்றி மேல் வெற்றிதான்.

*****

கவிதை :

பூப்பதைக் காதலிப்பதால்...

கதைகள் :

ஆயிரம் தலைபார்த்த அபூர்வ சிகாமணி
நாயகன் ஒரு நங்கை
நீ நான் தாமிரபரணி
கொட்டாவி
குறள் கூறும் கதை
நானென்றும் நீயென்றும்

இன்னும்:

ராசிபலன்
காவிய நாயகன்
His Name is Shivasankar
கொய்யாத்துவையல்

A few New Products @ nilashop:

Devathai Thottam
Sri Annai Aravind
Dance of Siva
Enjoyable Melodies