Wednesday, March 21, 2007

சாரல் 304

சாரல் : 304 பொழிந்தது : மார்ச் 19, 2007

மாலை சூடும் மணநாள்

இண்டர்நேஷனல் லெவலில் யாரும் கிடைக்காததால், நேஷனல் லெவலில் சீதையும், ரீஜினல் லெவலில் கண்ணகியும், ஏகபத்தினி விரதத்தை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட இராமனும் நமக்கு முன் மாதிரிகள். "கற்பின் பெருமையை" இடையறாது போதிக்கும் நமது நாடுதான் உயிக்கொல்லி நோயான எய்ட்ஸில் முன்னால் நிற்கிறது.

( கு.சித்ரா )


உலகக்கோப்பை 2007

இந்தியா ஜிம்பாப்வேயுடன் ஆடிய போட்டி கிரிக்கெட் சரித்திரத்தில் மறக்க முடியாத ஒன்று. ஒரு நேரத்தில் இந்தியா ஜிம்பாப்வேயின் பந்து வீச்சுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் 17 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்துத் தள்ளாடியது. ஆனால் அதிரடியாக, கபில்தேவ் களமிறங்கி ஆட்டமிழக்காமல் 175 ஒட்டங்களைக் குவித்து இறுதியில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 266 ஓட்டங்கள் என்ற நிலைக்கு உயர்த்தினார். அதில் 16 பவுண்டரிகளும் ஆறு சிக்சர்களும் அடக்கம்.

( டி.எஸ்.பத்மநாபன் )

Priya Mani

* Her father owns an automobile factory and mother was an assistant manager in UBI * Belongs to an Palakkad Iyer family * Spoke her own dialogues in Paruthiveeran * Never wore make-up for the films Paruthiveeran and Adu oru kanakalam * Bharathiraja refused to change her name.

( PS )

அழகழகாய்க் கேள்விகள்

ஃபேஷியல் செய்யும் முறை: முதலில் க்ளன்சிங் மில்க் (cleansing milk) கொண்டு முகத்தில் உள்ள அழுக்கை நீக்குங்கள். பின்பு, பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது தக்காளி அல்லது அவ்கோடா பழம் போன்ற பழவகைகளைக் கொண்டு முகத்தை 20-25 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். ஃபேஷியல் மஸாஜ் எப்பொழுதும் மேல் நோக்கியே இருக்க வேண்டும்

( நிலாரசிகை )

காவிய நாயகன் நேதாஜி (42)

தலைவர் தேர்தலில் சுபாஷ் போஸ் வெற்றி பெற்றார். அவருக்குக் கிடைத்த வாக்குகள் 1580. பட்டாபி சீதாராமையா பெற்ற வாக்குகள்:1375. தேர்தல் முடிந்த இரு தினங்களில், "என் தோல்வியில் களிக்கிறேன்!" என்ற தலைப்பில் காந்திஜி ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் சொன்னது: "சுபாஷ் போஸ் தமது எதிர்ப்பு வேட்பாளர் பட்டாபி சீதாராமையாவை வென்றுள்ளார். ஆரம்ப முதலே, சுபாஷ் போஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று நான் எதிர்த்து வந்திருக்கிறேன். அதற்கான காரணங்களை நான் இப்போது சொல்ல வேண்டியதில்லை.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

சர்தார் தி கிரேட்! (2)

வேலைக்கான விண்ணப்பம் ஒன்றை வாங்கி நிரப்பிக் கொண்டிருந்தார் சர்தார்ஜி. பெயர், வயது, முகவரி உள்பட அனைத்துக் கட்டங்களையும் விரைவாக நிரப்பிய அவர், சம்பள எதிர்பார்ப்பு என்னும் கட்டத்தில் எதை எழுதுவது எனக் குழம்பிப்போனார். தீவிர யோசனைக்குப் பின் எழுதினார் : "சம்பளம் வேண்டும்"

( ரிஷிகுமார் )

செய்தித் துளிகள்

கே.எஸ். நாகலட்சுமி (83 வயது) தன்னலமில்லாத சேவையாக இந்தப் பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு காந்தீயக் கொள்கைகள் இன்னும் உயிர் பெற்றுள்ளன. இங்குள்ள ஆசிரியைகள் கதர்ப் புடைவைதான் கட்டுகிறார்கள். இந்தப் பள்ளியை வாங்குவதற்காகத் தனது சொந்தக்காரர்களிடமிருந்தும் தன் நிலங்களை விற்றும் பணம் புரட்டியிருக்கிறார்.

( ஜ.ப.ர. )

நான் ரசித்த பாடல் (11)

இனிமையான வீணையிசையுடன் துவங்கி மற்ற தென்னிந்திய இசைக் கருவிகளின் பின்னணியில் சீராக ஒலிக்கும் இப்பாடலுக்கு திரு.யேசுதாஸ் அவர்களின் பண்பட்ட குரலும், இளைய ராஜா அவர்களின் அருமையான இசை அமைப்பும் கவிஞரின் கற்பனை வளத்திற்குப் பெருமை சேர்க்கும் முறையில் அமைந்துள்ளது. 'ஈரைந்து மாதங்கள் கருவோடு சுமந்த' தாயின் கடனை ஈரேழு ஜன்மங்கள் எடுத்தாலும் தீர்க்க இயலாது' என்பது சத்திய வாக்கு.

( பிரேமா சுரேந்திரநாத் )

பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட், ஜாலிவுட்

நவராத்திரியில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்தது பிரபலமாகியது. ஆனால் அதற்கு முன்பே சுலோசனா என்ற நடிகை பம்பாய் கி பில்லி (பம்பாயின் பூனை) என்ற படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்திருக்கிறார்.

( ஜன்பத் )

தோல்விகளைத் தோரணங்களாக்கி...

"பாலத்துல யாரோ விஷமிகள்.. தண்டவாளத்தைச் சேதப்படுத்திட்டாங்க. தற்செயலாத் தகவல் தெரிஞ்சு ஓடினேன்.. எக்ஸ்பிரஸ்ஸை நிறுத்தி அத்தனை பேரையும் காப்பாத்தியாச்சு. ஆனா நான் பிடி தவறிக் கீழே விழுந்துட்டேன். ரெயில்வேல இருக்கேன்பா.. பிழைச்சது புனர்ஜென்மம்.. இன்னிக்கு என் இரண்டு பசங்களும் நல்ல நிலைமைல இருக்காங்க. எனக்கு ஆபீஸ்ல டூட்டி போட்டாங்க.. இதோ பார்" வேட்டியை விலக்கிக் காட்டினார். இரு கால்களும் செயற்கை.

( ரிஷபன் )

His Name is Siva Shankar..(239)

Why is it such a determination that one has in matters of war is not forthcoming in service to the society? There is none to risk his life for establishment of Dharma. What is our contribution to world progress? Why are you not prepared to give up everything you have for doing good to society? You must become a soldier in some form in the establishment of Dharma.

( N C Sangeethaa )

நானென்றும் நீயென்றும் (58)

ஊன்று கோலை ஊன்றி விந்தி ட்ராவிஸின் தாயாரைச் சந்திக்க சென்று கொண்டிருந்தாள் பூஜா. அவர் தன்னை எப்படி எதிர் கொள்வார் என்ற பயமும் தயக்கமும் அவள் வயிற்றைக் கலக்கின. ஏற்கனவே வாண்டாவிடமும் அவினாஷிடமும் அடி பட்டவளாயிற்றே. தயக்கமாகவே சென்று அவருடைய கதவைத் தட்டினாள்.

( சுகந்தி )

நீ நான் தாமிரபரணி (62)

"இது நம்ம குடும்பம் சம்பந்தப்படற விஷயம்னு ஆன பிறகு நானும் நேரில் வராட்டி என் மண்டை வெடிச்சுடும். அதனால் நான் வர்றேன்" என்று உறுதியாகச் சொல்லி அவன் மேற்கொண்டு மறுப்பு சொல்லாதபடி முற்றுப் புள்ளி வைத்தாள். தன்னுடைய காரையே எடுத்துக் கொண்டு வருவதாக சொன்னாள். இருவரும் மாற்றி மாற்றி ஓட்டினால் களைப்பு தெரியாதென சொன்னாள். பழகிய சில நாட்களிலேயே அவள் தைரியமாக தொலைதூரப் பயணத்திற்கு தன்னுடன் தனியாக வர தீர்மானம் செய்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

( என்.கணேசன் )

இராசி பலன்கள் 19-3-2007 முதல் 25-3-2007 வரை

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, வியாழன், ராகு, நன்மை தரும் கிரஹங்களாகும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் தீரும். ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டாகும். மனைவி அல்லது மனைவி வழிச் சொந்தங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடம்பில் முதுகு, மற்றும் மார்பு சம்பந்தமான வலிகள் வந்து போகும். தந்தை மகன் உறவில் விரிசல் காணப்படும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள்.

( டாக்டர் ப. இசக்கி )

பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும் (3)

1970 ஆண்டிற்குப் பிறகு இந்த அன்னியர்களை இயற்கையை மீறிய சக்தி (supernatural power) மற்றும் டெலிபதி போன்ற உளவியல் அறிந்தவர்களாகவும் உருவகப்படுத்தினர். 70களில் வந்த புத்தகங்களில் பல இந்தப் புதிய யுகத்தையும் வெளி கிரகவாசிகளான அன்னியர்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. கடவுளின் ரதங்கள் (Chariot of the Gods) என்ற புத்தகம் வெளியுலகக் கிரகங்கள் பல நூற்றாண்டுகளாகவே பூமிக்கு வந்திருக்கின்றன எனப் பல உதாரணங்களுடனும் அடையாளம் காணப்படாத பொருட்களின் படங்களைக் கொண்டும் விவரித்தது

( டி.எஸ்.பத்மநாபன் )

பகிர்வு

காலூன்ற முடியா வயதில்
தத்தித் தாவும் அணில்
மனக் கதறல்கள்...

பார்வை
உணவு
பரிசம்
தினவு
தொட்டும் தொடாத கூந்தல்
படுகையில் கபளீகரம் செய்யும் சாகச இரவுகள்...

( ராசி அழகப்பன் )

காதல் தியாகி. . . .

உன் பக்கமாகவே
திரும்பிய பார்வையைக்
கட்டுப்படுத்தி திரும்பி நின்றேன்
எதிர்ப்பக்கமாய். . .

உன் பெயர் தெரிந்தும்
"எக்ஸ்கியூஸ் மி" என்று நீ
பேசுகையில்
பிரிந்தேன் அவசரமாக . . .

( கு.திவ்யப்பிரபா )

இரவல்

மணமக்களுக்குப் பரிசு கொடுத்துவிட்டு மேடையில் இருந்து இறங்கும் போது மின்சாரம் போய் அடுத்த நிமிடம் ஜெனரேட்டர் மூலம் வந்து விட்டது. அதற்குள் யாரோ அவள் கழுத்தில் இருந்த நகையைத் திருடி விட்டார்கள். மீனாட்சிக்குத் தலையில் இடி இறங்கியது போல் ஆனது. பங்கஜத்திடம் ஓடி வந்து கதறினாள். பங்கஜம் அன்று திட்டமிட்டே போலி நகையைக் கொடுத்ததோடு இரண்டு திருடர்களையும் ஏற்பாடு செய்து நகையைத் திருடச் செய்தாள் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. மீனாட்சியை வலையில் சிக்கிய மீன் போல் ஆக்கி விட்டாள்.

( P.நடராஜன் )

டிஸ்மிஸ்

'இன்று காலை முதல் எவ்வளவு கதை படித்தாய்? எவ்வளவு ஜோக்குகள் படித்தாய்? அதைப்பற்றி உண்மையான விபரங்கள் கூறவும்' என மிரட்டினார். விசாரணையின் முடிவில், புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரவிகுமார் மட்டும், காலை முதல் எந்த ஒரு கதையோ, கட்டுரையோ, ஜோக்குகளோ படிக்கவில்லை என்ற உண்மை மேனேஜருக்குப் புலப்பட்டது.

( வை.கோபாலகிருஷ்ணன் )

No comments: