Monday, January 08, 2007

சாரல் 294

சாரல் : 294 பொழிந்தது : ஜனவரி 8, 2007

ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்
தில்லியை அடுத்துள்ள நொய்டாவில் ஒரு பங்களாவை ஒட்டிய சாக்கடை மற்றும் இதரப் பகுதிகளில் தோண்டத் தோண்ட வெளி வந்த எலும்புக்கூடுகள் பற்றிய செய்திகள் மனதை உறைய வைக்கின்றன.

( ஜ.ப.ர. )

சினி செய்திகள் - அங்கிருந்தும் இங்கிருந்தும்
மிகவும் எதிர்பார்க்கப்படும் ரஜினியின் 'சிவாஜி' ஏப்ரல் 14ல் ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. இதே சமயத்தில் கமல் பத்து வேடங்களில் அமர்க்களப்படுத்தும் 'தசாவதார'மும் வெளியிட ரெடியாகுமாம். ஆனால் தயாரிப்பாளர்கள் இந்த இரு படங்களையும் ஒரே சமயத்தில் வெளியிட விரும்பவில்லை.

( வம்புநாதன் )

அப்பாவின் ஞாபகம்

வீட்டு வாசலில் படிக்கட்டின் இருபுறமும் முழங்கால் உயரத்தில் சிட் அவுட் மாதிரி கட்டியிருந்தோம். ஒன்றில் அப்பா உட்கார்ந்திருந்தார். எதிர்புறம் நான் அமர்ந்தேன். அப்பா நான் வந்து அமர்ந்ததை கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை. கவனம் முழுக்க வெற்றிடத்தில்.

( ரிஷபன் )

நான் ரசித்த பாடல் (4)

"பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப்பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம் துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

( பிரேமா சுரேந்திரநாத் )

புத்தாண்டு பூத்தது

நமக்கு காலம் புத்தாண்டைத் தருகிறது.. நாம் அதற்கு என்ன பரிசைத் தரப் போகிறோம்? உழைப்பைத் தருகிற இடம் நாம் கவனமாய்த் தேடுவோம்..

( ராசி )

அன்னையின் அசரிரீ
அம்மா அம்மாவென்று புலம்பிக்கொண்டிருந்த அச்சிறுவனுக்கு திடீரென்று கடவுள் நம்பிக்கையே விலகியது. "முருகனாவது கடவுளாவது? எல்லாமெ வெறும் பொய். உண்மையாக் கடவுள் இருந்தால், எல்லோருக்கும் நன்மை செஞ்சிண்டு ஒரு ஈ எறும்புக்குக் கூட மனசால கூட கெடுதல் செய்யாதெ 38 வயசு கூட ஆகாத என் அம்மா எதுக்காக சாகனும்?

( சரோஜா ஸ்ரீனிவாசன் )

பரம மங்களம் தரும் பாராயணம்!
" அனுமனே உனக்கு சுந்தரன் என்ற பெயரும் உண்டு என்பது உனக்குத் தெரியுமா" என்றார். வியந்து போன அனுமன் அப்படி ஒரு பெயர் தனக்கு இல்லை என்று கூறவே வால்மீகி முனிவர்," சந்தேகம் இருந்தால் உன் தாய் அஞ்சனா தேவியிடம் சென்று கேள்" என்றார்.

( ச.நாகராஜன் )

புராண வரலாறுகளில் மகாவிஷ்ணு

ஆதியில் உலகத்தைப் படைத்த சிவ-பார்வதியார் தாம் படைத்த உலகையும் உயிர்களையும் காத்து அருள் புரிவதற்காக ஒரு தேவனைப் படைத்தார். அவரே திருமால் எனப்பட்டார். அவர் மாயையின் வடிவாக விளங்கியதால் மாயவன் எனப்பட்டார்.
( E.S.ஏகாம்பர குருக்கள் )

ஹைக்ஹூ

கவிதைக்குக் கரு எங்கிருந்து கிடைக்கிறது காதலி கேட்கிறாள், ஆயிரமாயிரம் கருக்களை விழியால் வீசியபடி!
( சிலம்பூர் யுகா )

ஜபரவின் அரசியல் அலசல்

சதாம் உசைனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாமே தவிர தீர்ப்பு என்னவோ நியாயமானதுதான். போகிறபோக்கில் புஷ் தனக்குத் தெரியாமலே சதாம் உசைனுக்கு ஒரு நல்லது செய்திருக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று சதாமுக்குத் தூக்கு- அவரது ஆவி சொர்க்கத்தை அடைந்திருக்கும் என்கிறார்கள் சிலர்!
( ஜபர )

காவிய நாயகன் நேதாஜி (32)

கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வெளிப்பட்ட ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் காந்திஜிக்குப் பிடிக்கவில்லை. வித்தை பார்க்க வந்த கூட்டம் நமது வலிமையைக் காட்டாது என்று விட்டார் அவர். அவர் சொன்னாற்போல காங்கிரஸ் பந்தலே ஒரு சர்க்கஸ் மைதானத்துக்குள்தான் அமைந்திருந்தது.
( டி.எஸ்.வேங்கட ரமணி )

வண்ணத்துப் பூச்சி

சப்தம் எழுப்பாமல், சருகுகள் கலைக்காமல், அடிமேல் அடிவைத்து, நான் பிடித்த வண்ணத்து பூச்சி,
( கமலி )

முன்னெச்சரிக்கை முகுந்தன்

'ஐம்பது வயதைத் தாண்டிய முகுந்தனுக்குச் சற்றுபெருத்த சரீரம். நடந்தாலே பெருமூச்சு வாங்கும். சுகர், பிரஷருடன் சமீபகாலமாகச் சற்று ஞாபகமறதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எப்போதுமே எதிலும் ஒரு விதப்படபடப்பு. எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.

( வை.கோபாலகிருஷ்ண‎ன் )

பேராசை

ஆனைமலை என்ற ஊரில் மாரி என்பவன் வசித்து வந்தான். அவன் நகை செய்யும் தட்டான். நல்ல டிசைன்களில் ஊர்மக்கள் விரும்பும்படி நகைகள் செய்வான். அதனால் அவனுக்கு வருஷம் முழுவதும் வேலை இருந்து கொண்டே இருக்கும். நல்ல வருமானம் வர பணத்தாசையும் ஆசையும் கூடவே வந்து விட்டது.

( P.நட‎ராஜன் )

நாயகன் ஒரு நங்கை (24)
தினமும் அவனைப் புடிச்சு - இப்படி உன் பின்னாலேயே அலையறேனே, ஏன் இப்படி இருக்கேன்னு கத்தணும்னு போவேன். அவனைப் பாத்தவுடனே கத்தல் கெஞ்சலா மாறிடும். அப்போல்லாம் விலகி விலகிப் போனான். திடீர்னு ஒரு நாள் வாய்லேர்ந்து ரத்தம் கொட்டுது.
( நரேன் )

கவிதைப்பூக்கள்
சொன்னாயாமே? "எனக்குப் பதிலுக்கு 'ஹேப்பி வீக்எண்ட்' சொல்லும் நாகரீகம் கூடத் தெரியவில்லை" என்று கடனாகத்தான் சொன்னாயா அந்த "ஹேப்பி வீக்எண்ட்"?
( சரண் )

நீ நான் தாமிரபரணி (52)
அம்பலவாணனுக்குத் தாரா போன் செய்த விஷயத்தை அருணிடம் சொல்ல மனம் துடித்தாலும் தாராவுக்குக் கொடுத்த வாக்கை மீற அவரால் முடியவில்லை. அருண் அந்த அலுவலகத்திலேயே வேறொரு வேலையில் மும்முரமாக மூழ்கிக் கிடக்க அவர் தாராவின் வரவுக்காகக் காத்திருந்தார்.
( என்.கணேசன் )

நானென்றும் நீயென்றும் (48)
அன்று முத்தமிட்டு சென்ற அவினாஷ் தன்னை நாடி வரவில்லை என்றதுமே அவினாஷின் மனநிலை புரிந்து தவித்தாள் பூஜா. அவன் கோபம் அவளுக்குத் தெரிந்து தான் இருந்தது. ஆனாலும் மனதுக்குள் ஒரு நைப்பாசை. அன்று முத்தமிட்டு விட்டுச் சென்றானே அவளை மன்னித்து விட்டானோ என்று நினைத்தாள்.
( சுகந்தி )

மச்சினி சொன்னா கேட்டுக்கணும்
"தண்ணி ஊத்துறா மஞ்சத் தண்ணி ஊத்துறா மாமன்காரன் மயங்கி நின்னா வென்னீ ஊத்துறா" என்ற பாடல் ஒளிபரப்பாக, "மாமா இதுகூட சிச்சுவேஷன் சாங் தான்" என்று அவள் சிரிக்க அவனும் தன் தவறை உணர்ந்து அவளுடன் சேர்ந்து சிரித்தான்.
( லால்குடி, வெ. நாராயணன். )

VANNA KOLANGAL
Kolangal
( G.Divya praba )

His Name is Siva Shankar..(229)
I am not saying, 'Believe me only'. Go around and search among those whom you believe. Check who give you their unconditional love, who doesn't take money from you, etc.
( N C Sangeethaa )

No comments: