Monday, May 21, 2007

சாரல் 313

சாரல் : 313 பொழிந்தது : மே 21, 2007

கொஞ்சம் சிணுங்கல், கொஞ்சம் சீண்டல், கொஞ்சம் சீறல்!

ஒரு கடல் நண்டு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் நெளிகிறது. அதை ரோடு ஓரமாக வந்து நிற்கும் காரின் உரிமையாளரிடம் காண்பிக்க அவர் திகைக்கிறார். திடீரென்று திரும்பி அந்த பிளாஸ்டிக் டப்பாவை காத்திருக்கும் இன்னொருவர் கொண்டு வந்த டப்பாவில் வைத்துவிட்டு வேறோரு புதிய டப்பாவை எடுத்து காருக்குள் "தவறிப்" போட்டு விடுகிறார் நிகழ்ச்சியாளர். காரில் உள்ளவரின் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்? சிலர் வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி வருகின்றனர். சிலர் அலறுகின்றனர்.

( ச.நாகராஜன் )

Dayanidhi Maran

* Was the youngest cabinet member.
* Has attended various Seminars, Conferences and Expositions in the field of Political Economy, Management, Visual and Print Media.
* Used to accompany Dr. Karunanidhi for all functions.
* He initially found it difficult to address voters in Tamil and it was M K Stalin who spearheaded his election campaign.
* Resigned his cabinet post due to the fallout between Dr.Karunanithi's family and the Maran brothers.

( PS )

உள்ளம் கேட்குதே More

மார்ச் 15! பக்கம் பக்கமாய் அலுவலகக் கணக்கை எண்களில் அடித்து அடித்து (ஃபிகரைப் பார்த்துப் பார்த்து என் ஃபிகரே போச்சு?!) 'போதும்டா சாமின்னு' ரிலாக்ஸ் ஆக நினைச்சப்ப.. மானிட்டர்ல கீழே ஒரு சிவப்புக் கொடி ஆடியது.
ஏதோ மெயில் வந்திருக்கு. 'ப்ச்.. வேறென்ன.. அலுவலக சகா ஏதோ டிடெய்ல் கேட்கறார்.. என்று ஓபன் செய்தால் மெசேஜ் ஃப்ரம் நிலா டீம்!
வாவ்.. படித்ததும் ரெக்கை கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள். "ஏப்ரல் 15 ஒரு கெட்டுகெதர் வச்சுக்கலாமா? குடும்பத்தோடு வரவும்"

( ரிஷபன் )

செய்திகள் அலசல்

15.5.2007 அன்று மாலை தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவைக் காட்சியைக் காண நேர்ந்தது லோக்சபா சேனலில் ஒரு அங்கத்தினர் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவைத் தலைவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு வரிசையில் நிதி மந்திரி சிதம்பரம் தேமேன்னு கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். தேடித் தேடிப் பார்த்தோம். மருந்துக்குக் கூட வேறு ஒரு அங்கத்தினரும் கண்ணுக்குப் படவில்லை

( ஜ.ப.ர )

சினி மினி

மு.க. ஸ்டாலின் மகன் உதய நிதி தயாரிக்கும் படத்தில் த்ரிஷாவும் விஜயும் நடிக்கிறார்கள். இதில் ஒரு ஆண்டிஹீரோ (anti-hero) பாத்திரத்திற்கு ஒரு ஆல் டைம் சூப்பர் ஹீரோவை அணுக இருக்கிறார்களாமே. அவர்தான் அமிதாப் பச்சன் என்று பட்சி சொல்கிறது.

( ஜன்பத் )

எல்லாம் ஒரு பேச்சுக்கு

"நான் பசித்த வயிறுகளை பார்க்காதவள் இல்லை. உணராதவள் இல்லை. எனது பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகளின் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டு எனது பாக்கெட் மணியை மிச்சம் பிடித்து அவர்களின் ஸ்கூல் பீஸ் கட்ட உதவியிருக்கிறேன். இதை நான் பெருமைக்காக இங்கே சொல்ல வரவில்லை. இந்த பிளவுபட்ட சமுதாயத்திலே எனது பொறுப்பான பங்கை நிறைவேற்றியிருக்கிறேன் என்பதையே தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

( எம்.ஆர்.நடராஜ‎ன் )

அதீதாவுக்கு... (மடல் - 23)

அலமாரியில் கிடந்த நெளிநெளியாய் நெளிந்திருக்கும் உன் அந்த கருப்பு ஹேர்பின் ஒரு பாம்பென விரிந்து என் உடல் பொருள் ஆவியை அப்படியே ஆக்ரமித்துக் கொள்வதையும், சீப்பில் சிக்கியிருந்து என்னுடன் மௌனமாய் மென்மையாய் உரையாடல் நிகழ்த்தும் உன் அந்த நீண்ட சிறு முடிக்கற்றையும், அலமாரியில் வாடிக்கிடந்த அந்த ஒற்றை மல்லிப்பூச்சரமும் எனக்களித்துவரும் அனுபவங்களை எவ்விதம் வார்த்தைகளில் உரைப்பேன்?

( நட்சத்ரன் )

வாய் விட்டு சிரிச்சா...!

டாக்டர்: இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க.
அவன்: ஸ்பூன் ரொம்ப நீளமா இருக்குமே டாக்டர், எப்படி முழுங்கறது?

( ஜன்பத் )

Pallikoodam - Music Review

Unlike a few music directors who always have at least one song per album in their voices, Bharadwaj rarely lends his voice. Both his "Avaraval vaazhkaiyil" and "Gnabagam varudhe" songs were nostalgia-feel songs. His recent "Meendum Pallikku" is in the league of the aforementioned songs, with the sounds of school bell, thamizhthaai vaazhthu and the students reciting Tamil verses add to the feel of sitting in a classroom. Snehan has given some memories-evoking lines and Bharadwaj has done justice to them by his flawless rendering and soul-stirring interludes.

( Vignesh Ram )

வித்யாரம்பம் அறக்கட்டளை

தரமான அடிப்படைக் கல்வி பெறாமல் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் 6ஆம் வகுப்பு படித்தாலும் 60 என்று கூட சொல்லத் தெரியாமல், தன் தாய் மொழியை வாசிக்கக் கூடத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்க, அப்பள்ளி ஆசிரியர்களோ காற்றின் அற்புதங்களையும் கடல் கடந்த தீவுகளையும் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் தனது தாய்மொழியில் அமைந்த பாடப் புத்தகங்களைக் கூட வேற்று மொழியைக் காண்பது போன்ற கலவர முகத்துடன் பயந்து பார்க்கும் கொடுமை நமது நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

( கார்த்திகா )

Win Scholarship

Nandini Voice For The Deprived, a Chennai based NGO is offering 200 scholarships to school students from lower income group in Tamil Nadu for the academic year 2007-2008.

தாயுமானவள்

"நாகப்பட்டிணம்! அப்பாவும், அம்மாவும் சுனாமி வந்தப்போ கடல் தண்ணீரிலே அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க" "இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா?" முனியாண்டி அவள் கண்களைத் துடைத்து விட்டுப் பரிவுடன் வினவினான்.

( வை. கோபாலகிருஷ்ணன் )

His Name is Siva Shankar..(248)

Mahaans who have conquered themselves are Mahaviras; they have gained control of their senses. If you decide to observe fasting, then no feast will tempt you. You must form a decision. Then, nothing can tempt you. By God's Grace, I have absolute control over my senses.

( N C Sangeethaa )

காவிய நாயகன் நேதாஜி (51)

1940 டிசம்பர் 24 க்குப்பிறகு சுபாஷை வெளியார் யாரும் சந்திக்க முடியவில்லை. குடும்பத்தினர் கூட அவருடன் பேச முடியவில்லை என்கிறார்கள். ஒரு தனி அறையில் தம்மைச் சிறைப்படுத்திக் கொண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. உணவைத் திரைக்கு வெளியே வைத்து விடுவார்களாம். கையை வெளியே நீட்டி உணவுத் தட்டை இழுத்துக் கொள்வாராம் சுபாஷ்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

நானென்றும் நீயென்றும் (67)

எத்தனை பிரியம் இருந்தால் அத்தனை அக்கறையாய் அவளைக் காப்பாற்றி கண்காணித்து இருப்பான். 'என் அவினாஷ்' மனதுக்குள் முணுமுணுத்தபடியே கலைந்திருந்த அவன் கேசத்தைத் தன்னை அறியாமல் மென்மையாய் கோதிவிட்டாள். அவளையும் அறியாமல் அவள் விரல்கள் அவனது இடது புருவத்தை நீவி விட்டன. நீவி விட்ட விரல்கள் அவனது எடுப்பான முகத்தில் கோடுபோட்டன.

( சுகந்தி )

An Ashram for Comprehensive Development of Society–Part 2

“Balak Sangh” is a forum run for young village children. This provides value education through various play way method. Also nutritious food is provided. The whole philosophy behind providing value education to young children is to properly rear the children, who would become great assets for the nation when they grow up. In this small way, Ashram tries to safeguard the future generation from the obnoxious clutches of mass media and corruption of the impressionable young minds by useless trivial matters.

( Dr.Rajan )

நீ நான் தாமிரபரணி (71)

சேதுபதி கடைசியில் உடைந்த குரலில் சொன்னார் "....எனக்கு ஒரு ஆசை ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. நான் எழுதற முதல் நாவலே பெரிய அளவில் பிரபலமாய் விடணும்கிறது தான் அந்த ஆசை. எத்தனையோ கதைகள் ஆரம்பத்தில் எழுதி இருக்கேன். ஆனாலும் அது மனசுக்கு திருப்தி தரலை. பிரசுரிக்க அனுப்பவும் இல்லை. பிறகு இவங்க கதை எழுதலாமேன்னு தோணி, எழுதினேன். பிரசுரமாகி பிறகு பிரபலமும் ஆச்சு. எனக்குப் பெரிய பாராட்டு விழா நடத்துனாங்க.

( என்.கணேசன் )

மனசே சுகமா? (14)

உங்களுக்கு 'எனக்கு எதையுமே சரியாகச் செய்யத் தெரியாது' என்ற மைய நம்பிக்கை இருக்குமாயின், அந்த நம்பிக்கையை உறுதிப் படுத்தும் நிகழ்வுகளையும் மனிதர்களையுமே உங்கள் ஆழ்மனம் தேடும். கடுமையாக விமரிசிக்கும் மேலாளர், எப்போதும் குறை கண்டுபிடிக்கும் மனைவி, உங்களுக்குப் பிடிக்காத வேலை - இப்படி உங்கள் நம்பிக்கையை வலுவாக்கும் சூழலை நீங்கள் உருவாக்கிக் கொள்வீர்கள். உங்கள் நம்பிக்கைக்கு மாறான, உங்களுக்குப் பாராட்டுப் பெற்றுத் தரும் சூழலில் நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள்.

( நிலா )

மவுனம்

உன் மவுனத்திற்கும்
என் மவுனத்திற்குமான
வேறுபாட்டினை நுகர நுகர
வார்த்தை செலவின்றி
இலக்கணத் திருத்தமொன்றை நீ
அரங்கேற்றியிருப்பது புரிகிறது.

( லேனா.பழ )

இராசிபலன்கள் (21-5-2007 முதல் 27-5-2007 வரை)

விருச்சிக ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். நெருப்பு, ராணுவம், போலீஸ் துறை சார்ந்தவர்கள், இனையதளத்தவர்கள் நற்பலன் அடைவார்கள். உடம்பில் நரம்பு, வாயு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். தீர்த்தயாத்திரை சென்று வருவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகக் கூடிய காலமாகும். கமிஷன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.

( டாக்டர் ப. இசக்கி )

கவிதைப் பூக்கள்

வா...
நமக்குள் சாதி, மத, இன
பேதங்களை வைத்து
சண்டை இட்டுக்கொள்வோம்.
அப்போதுதான்
அரசியல்வாதிகள் நிம்மதியாய்
கொள்ளை அடிக்க முடியும்.

( ரிஷபன் )

Wednesday, May 16, 2007

சாரல் 312

சாரல் : 312 பொழிந்தது : மே 14, 2007

ஜெயா டிவியில் நிலாவின் நேர்முகம் - Watch Nila's interview

பெயராலும், நிலாச்சாரல் ஆசிரியர் என்ற பொறுப்பாலும் மட்டுமே அறிந்திருந்த தங்களை ஒரு மனிதராக நேரில் பார்த்த திருப்தி தங்களை தொலைக்காட்சியில் பார்த்து ஏற்பட்டது. தங்களை இயக்கிய எண்ணங்களையும், தேடல்களையும் மிக அழகாகப் பேட்டியில் சொல்லியிருந்தீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கும், தங்கள் செயல்களுக்கும் இடையே இடைவெளிகள் இல்லை என்பதை நிலாச்சாரலுக்கு வந்தவர்கள் இந்தப் பேட்டியையும் பார்த்திருந்தால் நிச்சயம் உணர முடியும்.

An Ashram for Comprehensive Development of Society–Part 1

Today, it has another campus adjacent to it, which is Sri Sarada Ashram run under the stewardship of Rev. Yatiswari Ramakrishna Priya Amba. Sri Sarada Ashram is established for the cause of spiritual development and for uplifting the poor village community. The Sarada Ashram is run by forty well educated Graduates and Post-Graduates including engineers who have become sanyasins renouncing everything for the revival and upliftment of dharmic principles in our society.

( Dr.Rajan )

நதி போல் செல்

மனிதனே நீ நதியைப் போல் இரு. உன் ஆரம்ப நிலையை எடை போட்டுக் குறுகிய வாழ்க்கை வாழ்ந்து விடாதே. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறு. வழியில் கண்டிப்பாக வாய்ப்புகளைக் காண்பாய். சிறிய சாதனைகளிலேயே பெருமிதம் அடைந்து நின்று விடாதே. தொடர்ந்து சிறந்து செயல் புரி. தடைகள் வரத்தான் செய்யும். தடைகளுக்குக் காரணங்களையும், காரணமானவர்களையும் பட்டியல் போடாதே. பயனில்லை.

( என்.கணேசன் )

அரசியல் அலசல்

கலைஞர் தலைமையிலுள்ள காவல் துறை மவுனமாக இருந்து வேடிக்கை பார்த்தது என்று சொன்னது சன் டி. வி. கலைஞரோ தினகரன் பத்திரிகை நிர்வாகிகளிடம் இம்மாதிரி, கருத்துக் கணிப்பு வெளியிடவேண்டாம் என்று சொன்னதை அவர்கள் கேட்கவில்லை என்று சொல்கிறார். செய்திகளையும் வன்முறையையும் ஏதோ ஜெயா டி.வி. ஒளிபரப்புவதுபோல விஸ்தாரமாகக் காண்பிப்பதைப் பார்க்கும்போது கருணாநிதி குடும்பத்திற்குள் நிலவும் பூசலின் வெளிப்பாடுதான் இந்தக் கருத்துக்கணிப்பும் வன்முறையும் எனத் தோன்றுகிறது.

( ஜ.ப.ர )

காவிய நாயகன் நேதாஜி (50)

1940 நவம்பர் 26ம் தேதி சிறையில் இருந்தபடியே அவர் அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அது அவருடைய அரசியல் சாசனம் என்றே சொல்லப்படுகிறது. அதில் அவர் எழுதியதாவது: " உடனடியாக கண்ணுக்குப் புலப்படும்படியான பலன் எதுவும் இல்லாவிட்டாலும் கூட எந்த ஒரு தியாகமும் வீண் போவது கிடையாது.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

செய்திகள் அலசல்

ஜார்கண்ட் முதலமைச்சர் கோடாவின் மனைவி கீதா ப்ரூலி அவரை விட்டுப் பிரிந்தே இருந்தாராம். இப்போது கோடா முதலமைச்சரான பிறகு அவர்கள் இணைந்துவிட்டார்கள். இதற்காகப் பெரிய விருந்தே ஏற்பாடு செய்தாராம் முதல்வர் கோடா. "என் பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என்று சந்தோஷப்படுபவர்களுக்கிடையே இப்படியும் ஒருவர்.

( ஜ.ப.ர )

மனசே சுகமா? (13)

இந்த சுமைகளை உதறும்போது உங்களது முழு ஆற்றலும் நிகழ்காலத்திற்குப் பயன்படும். எதிர்கால முன்னேற்றத்திற்கான வித்து விதைக்கப்படும். எப்பொழுதெல்லாம் கவனம் நிகழ்காலத்தில் இல்லாமல் இந்த சுமைகளின் மேல் செல்கிறதோ அப்போதெல்லாம் 'இந்த சுமையை நான் உதறுகிறேன்' என்று மனதளவிலோ அல்லது வாய்விட்டோ சொல்வது இத்தகைய சுமைகளை உதற உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.

( நிலா )

சர்தார் தி கிரேட்! (8)

சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக் கோரி மனு செய்கின்றனர். ஜட்ஜ் : உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களே..அவர்களை எப்படிப் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள்?
சர்தார் : அவ்வளவுதானே..இப்போது போய்விட்டு மீண்டும் அடுத்த வருடம் மனுச் செய்கிறோம். உங்களுக்கும் கஷ்டம் இல்லாமப் போவும்.

( ரிஷிகுமார் )

உலகப்புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் பிளாஸ்டிக் (Plastic)

பினோலிக் மற்றும் அமினோ பிளாஸ்டிக்குகள் சூடாக்கி வார்ப்படம் செய்யப்படுபவை. வார்ப்படமாக உருவாக்கப்பட்ட பின்னர், இவ்வகைப் பிளாஸ்டிக்குகள் உருக்கப்பட முடியாதனவாகும். வார்ப்படங்களாகவும், அச்சுகளாகவும் உற்பத்தி செய்யப்பட்ட இவற்றிலிருந்து பல பொருட்கள் செய்யப்படுகின்றன.

( டாக்டர் இரா.விஜயராகவன் )

என்னை ஏமாற்ற முடியாது

பெஞ்சில் அமர்ந்தேன். ஷூவைக் கழற்றி வைத்தேன். காளியைத் தரிசித்தால் போதும். கடைக்குள் நுழையும் முன்பே பார்த்து விட்டேன். ஏகக் கூட்டம். குனிந்த தலை நிமிராமல் - அர்ச்சனை சாமான் வாங்க வற்புறுத்துவார்களோ என்ற பயம் - வெளியே வந்தபோது கடைக்கார பெண்மணி ஹிந்தியில் வேகமாய் ஏதோ சொல்வது கேட்டது. நான் திரும்பவில்லை.

( ரிஷபன் )

ஊனம்

கிரிஜாவின் கனவில் அந்த மரங்கள் பேசிக் கொண்டன. நல்ல மரங்கள் தங்கள் அழகைப் பெருமையாக வர்ணித்துக் கொண்டு கோணல் மரத்தைக் கிண்டல் செய்ய, அந்த மரம் கோபம் கொள்ளாமல் கடவுளால் படைக்கப்பட்ட எந்த உயிர்க்கும் அர்த்தம் இருப்பதாகப் பொறுமையாக பதில் தந்தது. கனவு கலை‎ந்தெழுந்த கிரிஜா மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

( P.நடராஜ‎ன் )

சினி மினி

100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சென்னை மத்திய சிறைச்சாலை புழலுக்கு மாறிய பின் இப்போது இந்த சிறைச்சாலையை படப் பிடிப்புகளுக்கு அனுமதிக்கிறார்கள். பசுபதி, பகடை போன்ற படங்கள் இங்கே படம் பிடிக்கப்படுகின்றனவாம். சிறைச்சாலைக் காட்சிகள் இனி தத்ரூபமாக இருக்கும்.

( ஜன்பத் )

தமிழா தமிழில் பேசு

நாட்டில் பலமொழிகள் இருக்கு – அதிலே
நம் தமிழுக்கே தனிப்பெரும் சிறப்பு!
வீட்டில் தமிழ்பேசு தமிழா! - நீ
விரும்பித் தமிழ்பேசு தமிழா!

( இராம. வயிரவன் )

கண்டேன் ராகவா!

"ஆமாம்; எப்பவும் உங்களுக்குப் பொழைக்கத் தெரியாது. உங்க ஃப்ரண்ட் செட்டியார் மூணு வட்டி வாங்கறார். ரெண்டு வட்டிக்குக் கடன் வாங்கி மூணு வட்டிக்கு விடறார். இந்த ஒரு 'பர்சன்டிலேயே' அவருக்கு மாசாமாசம் ஆயிரக் கணக்கான பணம் வருது. கணக்குக் காட்ட வேண்டாம். ஒரு ப்ரோநோட் தான்! நம்பிக்கை தான்!"

( விமலா ரமணி )

His Name is Siva Shankar..(247)

If you are able to free yourself from your iron-like heart, cry for the Lord’s Love, join your hands in prayer, be in constant thoughts of Him, sing, dance and revel in the bliss of His Cosmic Presence, then you attain the glorious state of Kannappa Nayanar.

( N C Sangeethaa )

நானென்றும் நீயென்றும் (66)

"கிளம்பிப் போ" என்று சந்தனாவிடம் இரண்டு மூன்று முறை சொல்லியாயிற்று. ஆனால் அந்தப் பெண் காதில் அது விழுந்ததாய்த் தெரியவில்லை. எது சொன்னாலும். "ஆண்ட்டி யூ ஆர் ஸோ ஸ்வீட்" என்று சொல்லி கட்டிக் கொள்கிறது. குழந்தைகள் என்ன என்றால் இவளை நாடி வந்து அன்போடு ஒட்டிக் கொள்கின்றன.

( சுகந்தி )

சேர்ந்து ரசிக்கலாமா?

அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காமதகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன்தான். அவன் அனைவருக்கும் common(காமன்)" என்றார்

( சிவ.ஜ )

நீ நான் தாமிரபரணி (70)

தாராவின் கழுத்தில் தொங்கிய தாலியைப் பார்த்த பிறகு செல்வரங்கம் தன் நம்பிக்கையைப் பெரிதும் இழந்தார். ஈஸ்வரன் ராஜராஜனை தாராவிடமிருந்து பறிக்க சம்மதிக்க மாட்டார் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் பேரன் பிறந்திருப்பதை மருமகனிடம் கண்ணீருடன் சொன்னார். ராஜராஜன் மகன் பிறப்பில் சந்தோஷப்படுவதா துக்கப்படுவதா என்று தெரியாமல் குழம்பினான்.

( என்.கணேசன் )

அழகு ஓவியம்

அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

கவிதைகள்

சாப்பிட அமர்கிறேன்; பிடித்த
பதார்த்தம் தட்டில் இல்லை
காபி குடிக்கிறேன்:சர்க்கரை இல்லை
விருந்தாளியுடனான பேச்சும்
சுத்தமாய்ச் சுகிக்கவில்லை!
தொலைக்காட்சி பார்க்கிறேன்
தொலைகிறது நிம்மதி!
பத்திரிக்கை புரட்டினேன்
பயங்கரத் தலைவலி!

( ஸ்திரன் )

இராசிபலன்கள் (14-5-2007 முதல் 20-5-2007 வரை)

துலா ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும் காலமாகும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். செய்தொழில் விட்டுப் புதிய தொழில் தொடங்குவீர்கள்.

( டாக்டர் ப. இசக்கி )

சூழ்நிலை

ஜெயாவுக்கு குரல் நடுங்கியது. அவள் அழுது கொண்டே பதட்டமாகப் பேசுவது இவருக்குப் புரிந்தது. "அப்பா.....தாத்தா சென்னையிலே ஒரு சாலை விபத்திலே இறந்து விட்டாராம். இப்போதுதான் போன வந்தது. அவரின் உடல் 'ஜீ.எச்' இல் உள்ளதாம். அம்மா ரொம்பவும் அழுது புலம்பிண்டு இருக்கா. ஈவினிங "பிளைட்டில் அம்மாவை ஏற்றி அனுப்பட்டுமா?" என்றாள்.

( வை.கோபாலகிருஷ்ணன் )

Tuesday, May 08, 2007

சாரல் 311

சாரல் : 311 பொழிந்தது : மே 7, 2007

கேளுங்கள் தரப்படும்

நிலாச்சாரல் எப்பொழுதுமே புதுமையான கருத்துக்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறது. புதிய பகுதிகளை துவங்கத் தயங்கியது இல்லை. பல நேயர்களின் விருப்பப்படி கேள்வி பதில் பகுதி துவங்கி இருக்கிறது. உங்கள் கேள்விகளுக்கு நிலாச்சாரல் நிபுணர் குழு பதில் அளிப்பார்கள். இன்னும் ஏன் தயக்கம்? உங்கள் 'மவுசை'த் தட்டுங்கள், கேள்விக் கணைகளைத் தொடுக்கத் துவங்குங்கள்.

(நிலாடீம்)

கனவு நாயகன் லாரா

15 வயதாகும்போது மேற்கிந்தியத் தீவுகளின் 19 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான கிரிக்கெட் பந்தயங்களில் பங்குபெற்றார். இவர் தனது 20வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முதலாக இடம் பெற்றார். அன்று முதல் இன்று வரை கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகனாகவே திகழ்ந்த இளவரசன் லாராவின் சாதனைகள் சிலவற்றை சற்றே புரட்டிப் பார்ப்போம்.

( டி.எஸ்.பத்மநாபன் )

செய்திகள் அலசல்

இந்த வருடம் +2 மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு உண்டா இல்லையா என்பது புரியாமல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி, ஒரு வழியாக நுழைவுத் தேர்வை ரத்து செய்து அரசு சட்டம் பிறப்பித்தது சரிதான் என்று தீர்ப்பாகி விட்டது. 27 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தடை செய்த நீதிபதிகளை விமரிசிக்கும்போது கலைஞர் 100 கோடி மக்களின் விருப்பத்தை இருவர் மட்டும் தீர்மானிப்பதா என்று கேட்டார். இன்றும் இரண்டு நீதிபதிகள்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். இப்போது என்ன சொல்கிறார்?

( ஜ.ப.ர )

மனசே சுகமா? (12)

அவருக்குக் குடிசையைக் கண்டவுடன் ஆனந்தம். அதில் நெருப்பைக் கண்டவுடன் பேரானந்தம். அருகில் சென்றமர்ந்தவுடன் அவரும் கவனிக்கிறார் நெருப்பு சற்று நேரத்தில் அணையப் போகிறதென்று. ஆனால் அவரைப் பொறுத்தவரை, அந்த நொடியில் அவர் வசதியாக இருக்கிறார்; அவருக்குத் தேவையான வெப்பம் இருக்கிறது; ஓய்வு கொள்ளக் குடிசை இருக்கிறது. நன்கு ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்.

( நிலா )

சர்தார் தி கிரேட்! (7)

சர்தார் 20 ரூபாய் லாட்டரி டிக்கெட் வாங்கியதில் நம்பர் குலுக்கலில் விழுந்து 20 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. 4 கோடி ரூபாய் வரி பிடித்தம் போக கடைக்காரர் மீதம் 16 கோடியைக் கொடுக்க, காதுகள் 'ஜிவ்'வென விடைக்க கோபமானார் சர்தார். "யோவ்…எனக்குச் சேரவேண்டிய 20 கோடியை மரியாதையா முழுசாக் கொடுய்யா…இல்லாவிட்டால் நான் கொடுத்த 20 ரூபாயைக் திரும்பக் கேட்பேன்.

( ரிஷிகுமார் )

உலகக்கோப்பை 2007

ஆஸ்திரேலியர்கள் சிறந்தவீரர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் விளையாட்டுகளுக்கென்று ஒரு பண்பாடு உண்டு - அதை மூட்டை கட்டி வைத்தவர்கள் அவர்கள். ஏற்கெனவே நமது மத்திய அமைச்சர் சரத் பவாரை ஐ. சி. சி பந்தயக் கோப்பையை வென்றபோது சுட்டு விரலால் தள்ளி கோப்பையைப் பெறுவதற்கு ஆலாய்ப் பறந்தவர்கள்.

( டி.எஸ்.பத்மநாபன் )

உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் "எண்ணெய் வளம்"

சோதனைக்குப் பின்னர் பேராசிரியர், "இந்த எண்ணெயைச் சரியான முறையில் தூய்மைப் படுத்திப் பயன்படுத்தினால் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு மாற்றாக விளக்கு எரிக்கப் பயன்படுத்தலாம்" என்று பிசெலிடம் உறுதியாகக் கூறினார். திமிங்கில எண்ணெய், மெழுகு ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக நிலக்கரியிலிருந்து எண்ணெய் எடுக்கும் பரிசோதனை அக்காலத்தில் மிகுதியாக மேற்கொள்ளப்பட்டது.

( டாக்டர் இரா விஜயராகவன் )

Indian Income tax Queries (3)

Profits earned by an NRI out of business carried out in India will also be taxable in India. Any rental income received by an NRI from a property in India will be taxable under the head Income from House Property, while the profit earned on sale of capital assets in India will attract tax under the head Capital Gains.

( NM.Ilangumaran )

நான் ரசித்த பாடல் (12)

அதே ஆண்டில் வெளியான 'அலை பாயுதே' என்ற திரைப்படத்தில் அவர் 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ' என்ற வைரமுத்துவின் பாடலைப் பாடி ரசிகர்களை தம் பாட்டின் இனிமைக்கு செவி கொடுக்கச் செய்து தமக்கு ஸ்நேகிதர்களாக்கிக் கொண்டு அழுத்தமாகத் தம் முததிரையைப் பதித்துக் கொண்டார்.

( பிரேமா சுரேந்திரநாத் )

முடிவில்லா கதை

மன்னனின் இந்த விசித்திரப் போக்கு மந்திரி மதிவாணருக்கு கவலை தந்தது. நாட்டின் நிலவரத்தை ஒற்றர்கள் மூலமாக அறிந்து கொண்ட அண்டை நாட்டு மன்னன் பராந்தகன் படையெடுக்க தக்க தருணத்தை எதிர்பார்த்து ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து விட்டான். மந்திரியால் இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ராணியிடம் வந்து நிலைமைகளைச் சொன்னார். இருவரும் நாட்டைக் காப்பாற்றத் திட்டம் தீட்டினார்கள்.

( P.நடராஜ‎ன் )

தங்கமே தங்கம்

கை கூப்பி நன்றி கூறிய பெரியவர் "தம்பி உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா" என்று பரிவுட‎ன் கேட்டார். "என் மனைவியாக வரப்போகிறவளுக்குப் போட அரைப்பவுன் தங்கமும், புதுச்சேலையும் வாங்க பணம் சேர வேண்டும். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்" என்றான். "உனக்கு அந்தக்கவலையே வேண்டாம், நான் தருகிறேன்" என்றார் பெரியவர்.

( வை.கோபாலகிருஷ்ணன் )

கவிதைகள்

நீயும் பேசாதே
நானும் பேசாதிருக்கிறேன்
நாட்கள் மட்டுமல்ல
வருடங்களும் ஓடின
நீ பார்க்கும்போதெல்லாம்
எனக்குள் இன்னும்
அதே வலி!

( ஸ்திரன் )

His Name is Siva Shankar..(246)

Never commit the blunder of discussing your personal problems with a third person. In any conflict between two individuals, how can any third person resolve the situation, unless the conflicting parties consent? If you understand this, you will realize that it is very easy to resolve disputes, the solution comes from you only!

( N C Sangeethaa )

நீ நான் தாமிரபரணி (69)

"அப்பா அவரும் நானும் எல்லா விதத்திலும் எதிர்மறையாய் இருக்கோம். இதில் ரெண்டு பேரும் சந்தோஷமாய் இல்லை. இன்னும் எங்க முன்னாடி எத்தனையோ காலம் இருக்கு. இப்படியே அத்தனை காலத்தையும் கழிக்கப் பிடிக்கலை. அதனால் தான் இந்த முடிவெடுத்தோம். ஆனா நான் இது வரைக்கும் அவருக்கு துரோகம் செய்ய மனசளவில் கூட நினைச்சதில்லை...."
( என்.கணேசன் )

கண்ணுக்குத் தெரியா கடவுள்

மண்ணுயிருள் மாண்புமிகு மானிடன் எனலாம் நுண்ணுயிரை
விருந்தினன் போல் மெல்ல நுழைந்து பின் அடிமை சாசனம் நீட்டுவதாலும்
மற்றொரு உயிரை உறிஞ்சி உடல் வளர்த்து உயிர் வாழ்வதாலும்
தன் இனத்தினை கூண்டோடு அழிக்க தானே விஷம் சுரப்பதாலும்
அப்பாவி, சந்தர்ப்பவாதி, கொடூர ஆட்கொல்லி எனப் பல வேடம் பூணுவதாலும்

( விக்னேஷ் ராம் )

நானென்றும் நீயென்றும் (65)

அழுது முடித்த பூஜா முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். அவினாஷ் அவளை ஒரு அற்பப் புழுபோல் நடத்துவதை அவளால் தாங்க முடியவில்லை. மனம் வலித்தாலும் அவினாஷை குறை கூற அவளால் முடியவில்லை. இன்று அவளுக்கு நடந்தது போல எத்தனை முறை அவினாஷை உதாசீனப்படுத்தியிருப்பாள்.

( சுகந்தி )

Beauty of Maths!

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321

( Kavitha )

ஒரு தொலைபேசி பேசுகிறது

"கடவுள் ஒவ்வொருவருக்கும் திறமையைத் தந்திருக்கிறார். உழைப்பின் மூலம் சிகரம் தொட வேண்டிய மனிதன் சோம்பிக் கிடந்தால் அது இறைவனுக்குச் செய்யும் அபச்சாரம்தானே.. நன்றாக யோசித்துப் பார். ஏதோ ஒரு காரணத்தினால் என் மூச்சு நின்று போனால் எப்படித் தவிக்கிறாய்?

( ரிஷபன் )

அழகு ஓவியம்

அழகு ஓவியம்

( முத்துக்குமார் )

இராசி பலன்கள் 7-5-2007 முதல் 13-5-2007 வரை

விருச்சிக ராசி அன்பர்களே, புதன் கேது நன்மை தரும் கிரஹங்களாகும்.
பெரிய மனிதர்கள் சந்திப்பால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். காண்டிராக்ட் தொழில், மற்றும் ரியல் எஸ்டேட் தொழிற் செய்வோர்கள், அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவார்கள். பொருளாதாரம் சுமாராக இருக்கும்.

( டாக்டர் ப. இசக்கி )

காவிய நாயகன் நேதாஜி (49)

ஆங்கிலேயர்களுக்கும் வங்காள மன்னர் சிராஜ்-உத்-தெளலாவுக்கும் 1757 மார்ச் மாதம் 17 ம் தேதி கடுமையான யுத்தம் நடந்தது. அதில் சிராஜ்-உத்-தெளலா வெற்றி பெற்றார். போரில் சிறைப் பிடிக்கப்பட்ட ஆங்கிலேய வீரர்களுக்கு மன்னிப்புத் தந்து அவர்களை விடுதலை செய்தார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

Saturday, May 05, 2007

நிலா @ ஜெயா டி.வி.

அன்பு நிலாச்சாரல் வாசகர்களே,

நமது நிலாச்சாரல் ஆசிரியர் நிலாவின் நேர்காணல் ஜெயா டி.வி.யில் வரும் 7.5.2007 அன்று காலை 7.30 மணியளவில் ஒளிபரப்பாகிறது. காலைமலர் என்னும் தினசரி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்நேர்காணல் வருகிறது. தன்னுடைய எழுத்துலக மற்றும் நிலாச்சாரல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

வாசகர்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம். ஒளிபரப்பாகும் தேதி உறுதியாகாததால் இப்பதிவை சற்று முன்கூட்டியே வெளியிடமுடியவில்லை. நிகழ்ச்சியைப் பார்த்து உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

நினைவிருக்கட்டும்: வரும் மே 7ஆம் தேதி, திங்கள் கிழமை, காலை 7.30மணிக்கு, ஜெயா டி.வி.யில்.

இப்படிக்கு
நிலாக்குழுவினர்.