Saturday, August 25, 2007

சவாலே சமாளி!

வலைபதிவுப் பெருமக்களே!

உங்களுக்கு சவால்களை சந்திக்க விருப்பமா?

நீங்கள் போட்டி என்று வந்துவிட்டால் வரிந்துகட்டி இறங்கி ஒரு கை பார்ப்பவரா?

உங்கள் புத்திக்கூர்மையை சோதித்துப் பார்க்க களம் தேடுபவரா?

நிலாச்சாரல் நடத்திக்கொண்டிருக்கும் நிலவுச்சிமிழ் போட்டியில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளக்கூடாது? அட..சும்மா இல்லீங்க..ஜெயித்தால் பரிசுகளும் உண்டு. ஒரு போட்டியில் யாரும் சரியான விடை அளிக்காவிடில், அடுத்த வாரம் பரிசு இரட்டிப்பாகிவிடும். ஒருவருக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால், யார் களத்தில் முதலில் இறங்கி சரியான விடை அளித்தவரோ அவருக்குப் பரிசு போய்ச்சேரும்.

கேள்விகள் எளிமையாய் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் சற்றுப் பிசகினாலும் போச்!!

எந்நேரமும் கணிப்பொறியில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் உங்கள் மனதைச் சற்று நேரம் போட்டியில் திருப்பி சரியான விடையைக் கண்டுபிடித்துவிட்டு வெற்றிப் பெருமிதத்துடன் மீண்டும் தொடருங்கள் உங்கள் பணியை உற்சாகமாய்.

சவால் தர நாங்கள் ரெடி. சமாளிக்க நீங்கள் ரெடியா?? தம்ஸ் அப்.

மேலும் விவரங்களுக்கு:

http://www.nilacharal.com/notice/instruction_nilavuchimizh.asp

--
Failure? Never, Never, Never giveup....
-----------------------------------------------------------
Entertaining, Enlightening, Ecstatic, Entire...
http://www.nilacharal.com
http://www.nilashop.com

No comments: